Category: சிறுகதைகள் Written by சுரா
குளிர்காலத்தின் ஒரு மாலை நேரத்தில் ஒரு மலையோரத்தின் அடிவாரத்தில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே ஒரு சிறு குழந்தை நடந்து போய்க் கொண்டிருந்தது. படர்ந்து கிடந்த மரங்களுக்குக் கீழே ஒரு நூலைப்போல போய்க்கொண்டிருந்த அந்தப் பாதையில் மரங்களின் பழுத்த இலைகள் விழுந்து விழுந்து காலப்போக்கில் பாதையே காணாமல் போயிருந்தது.
Category: சிறுகதைகள் Written by சுரா
கதை இதுவரை:
முரடனான தந்தையின் கொடுமைகள் தாங்க முடியாமல், இளைஞனான கதாநாயகன் தன் தந்தை கரும்பூனையைப் பிடிக்க பயன்படுத்தும் கோணிக்குள் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டைவிட்டு ஓடுகிறான். மறுநாள் சைனா இந்தியா மீது படையெடுத்தது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிற கதாநாயகன், நாட்டின் மீது கொண்ட அளவற்ற பற்றால் பெங்களூரில் இருக்கும் பட்டாளத்திற்கு ஆள் சேர்க்கும் மையத்திற்கு விரைகிறான்.
Last Updated on Monday, 04 February 2013 12:37
Hits: 6198
Category: சிறுகதைகள் Written by சுரா
சித்தார்த்தனும் பத்ரோஸும் சேர்ந்து அம்மிணி என்ற விபச்சாரியை ஒரு லாட்ஜ் அறைக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். அடுத்த அறையில் உள்ளவர்கள் அவளை பயன்படுத்திவிட்டு வெளியே அனுப்பிய பிறகு, வராந்தாவில் அவளைப் பார்த்தான் சித்தார்த்தன்.
"எனக்கு பிராந்தியும் பிரியாணியும் வேணும்"- அவள் சொன்னாள். சொன்ன மறுகணமே சித்தார்த்தனின் கட்டில் மேல் ஏறி போர்வையை இழுத்துப் போர்த்தி கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
Category: சிறுகதைகள் Written by சுரா
உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கருங்கால் கூட்டத்திற்கு நடுவில் காவேரி ஒரு வளைந்து போகும் பாம்பைப் போல சீறியவாறு நுரையுடன் பாய்ந்து பாறைகள் மேல் மோதிச் சிதறி படுவேகமாக ஓடும் ஒரு இடம் இருக்கிறது. கருங்கல் பாறைமேல் வேகமாக ஏறி கீழ்நோக்கி காவிரி அலறியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. சத்தம் உண்டாக்கும் கருங்கல் கத்தி முனைகளுக்கு நடுவில் வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு நீளமான வெண்மை நிற வாளைப் போல பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதி சிறிது தூரம் சென்ற பிறகு பரந்து ஓடவும் செய்யும்.