
சுராவின் முன்னுரை
‘சிங்கிடி முங்கன்’ (Singidi Mungan) 1991-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதிய இறுதி நாவல் இது. இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு கருவை வைத்து மிகவும் சுவாரசியமான ஒரு கதையை பஷீரைத் தவிர வேறு யாரால் எழுத முடியும்?
மிகவும் கனமான ஒரு விஷயத்தை- கயிறுமீது நடப்பதைப் போன்ற ஒரு கதைக் கருவை தன்னுடைய அபாரமான எழுத்துத் திறமையாலும், கூர்மையான சிந்தனையாலும் பஷீர் எந்த அளவிற்கு ஒரு அருமையான இலக்கியப் படைப்பாக வடிவமைக்கிறார் என்பதை நினைக்கும்போது, பஷீர்மீது நமக்கு வியப்பும் மதிப்பும் உண்டாவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
நான் மொழி பெயர்த்த இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook