
சுராவின் முன்னுரை
‘பிச்சைக்காரர்கள்’ (Pichaikkarargal) என்ற புதினம் 1950-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் ஏழை மக்கள் மீது தகழி சிவசங்கரப்பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரியும். பிச்சைக்காரர்கள் ஏன் உருவாகின்றனர் ? அவர்களை உருவாக்குபவர்கள் யார் ? பிச்சைக்காரர்கள் உருவாகாமல் இருக்க வழி என்ன ? இந்த விஷயங்களை தகழி மிகவும் அருமையாக இந்த நாவலில் அலசியிருக்கிறார்.
மிகப் பெரிய ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதை ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் தகழியின் செயலைப் பார்த்து நமக்கு ஆச்சரியம்தான் உண்டாகிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்நூல் காலத்தைக் கடந்து நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் - தகழியின் எழுத்துத் திறனே.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook