Lekha Books

A+ A A-
10 Nov

பிதாமகன்

pithaamagan

1

பொந்தியோஸ் பீலாத்தோஸ் ஒரு கடிதம் எழுதுகிறார்!

பிரபஞ்சத்தின் தந்தையான ஜூபிடர் கடவுளின் அருளாலும், வெற்றி வீரரும் மக்களின் தலைவருமான ரோம சக்கரவர்த்தி டைபீரியஸ் க்ளாடியஸ் நீரோவின் கருணையாலும், மிகப்பெரிய ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியும் யூதர்கள் வசிக்கும் முழு பகுதிக்கும் கவர்னருமான பொந்தியோஸ் பீலாத்தோஸின் கையொப்பம். அதிகார முத்திரை ஆகியவற்றுடன்... டேய் அன்டோனியஸ், மேலே எழுதப்பட்டிருக்கும் வினோதமான பெருமைகளைப் படித்தும், என்னுடைய முத்திரையின் வண்ண ஜொலிப்பைப் பார்த்தும் நீ திகைத்து நின்றுவிட வேண்டாம். அப்படி திகைத்து நிற்கக் கூடிய மனிதன் நீ இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

Read more: பிதாமகன்

06 Nov

கையெழுத்து

kaiezhuthu

1

ன்டர்காம் மூலமாக வந்த கூர்மையான கோபக் குரலை யாரோ காதில் வாங்கினார்கள்.

             “யார் இந்த கே.ஆர்.கே.யின் மகள்?” -லூஸி உரத்த குரலில் கேட்ட பிறகும், பதில் கிடைக்காமல் அந்தக் கேள்வி வரிசையாக வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர்களுக்கு மத்தியில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தது.

Read more: கையெழுத்து

05 Nov

விண்வெளிப் பயணம்

vinveli-payanam

1

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு

தோ.... கடல் பரப்பு நிலப்பரப்பைவிட உயர்ந்து விட்டது. பூமியின் நான்கில் மூன்று பாகங்களும் நீருக்கடியில் போய்விட்டன.

மனிதர்கள் மலைகளின் உச்சியில் வசிக்க ஆரம்பித்து விட்டார்கள். வருடத்தில் இரண்டு கால நிலைகளே இருந்தன - கோடை காலமும் குளிர்காலமும். ஒன்பது மாதங்கள் வெப்பமாகவும் மூன்று மாதங்கள் குளிராகவும் இருந்தன.

Read more: விண்வெளிப் பயணம்

05 Nov

தங்கம்மா

thangamma

புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்து, காற்றில் சிதறிப் பறந்தது. மனித மாமிசம் கரிந்த வாசனை நான்கு பக்கங்களிலும் பரவியது. பாதையில் சென்றவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.

தங்கம்மா வேலியருகில் நின்று சுடுகாட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் நின்று கொண்டு நாணி உரத்த குரலில் அழைத்தாள்:

Read more: தங்கம்மா

05 Nov

உலக்கை

ulakkai

ன்றரைக் கட்டு ஓலைகளையும் கொஞ்சம் மூங்கில் துண்டுகளையும் வைத்து கொச்சய்யப்பன் அந்த நிலத்தில் ஒரு குடிசையைக் கட்டினான். குனிந்து உள்ளே போனால், கொச்சய்யப்பன் சிரமப்பட்டு கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாம். அந்தக் குடிசை அந்த அளவிற்குத்தான் இருந்தது.

ஏரிக்கரையில் குண்டும் குழியுமாக இருக்கும் நிலப்பகுதி அது. ஏரியில் தண்ணீர் புரண்டு வந்தால், நிலம் முழுவதும் அதில் மூழ்கிவிடும். இங்குமங்குமாகப் புற்களும் முட்செடிகளும் வளர்ந்து காணப்பட்டன. ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு அதற்கு இருந்தது.

Read more: உலக்கை

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel