Lekha Books

A+ A A-
13 Nov

விலைமகளின் கடிதம்

vilaimagalin kaditham

பாலு அண்ணா,

நான் உங்களை இப்போதும் இந்த மாதிரி அழைப்பதற்கான தைரியத்துடன் இருப்பதற்குக் காரணம்- ஒரு விலைமகளாக வீழ்ச்சியைத் தேடிக்கொண்டவள், தன்னுடைய மதிப்பிற்குரிய சகோதரனை எப்படி அழைக்கவேண்டும் என்று சமுதாயம் இன்றுவரை ஒரு பெயரைப் படைக்காமல் விட்டிருப்பதால் மட்டுமே. மன்னிக்கவேண்டும்.

Read more: விலைமகளின் கடிதம்

13 Nov

மழை வந்தது

mazhai vanthathu

வெளிவாசலுக்கு மிகவும் தூரத்தில் தலைவர் வந்து கொண்டிருக்கும்போதே, அவருடைய மகள் ஒகான்டா அவரைப் பார்த்துவிட்டாள்.

அவரைச் சந்திப்பதற்காக அவள் ஓடினாள். மூச்சுவிட முடியாமல் அவள் தன் தந்தையிடம், “என்ன செய்தி, தலைவரே?'' என்று கேட்டாள். மழை எப்போது பெய்யும் என்ற தகவலைத் தெரிந்து கொள்வதற்காக கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்கள். லபாங்'ஓ மகளைத் தொடுவதற்காக தன் கைகளை நீட்டினாரே தவிர, ஒருவார்த்தைகூட வாய் திறந்து பேசவில்லை. தந்தை எதுவும் கூறாமல் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒகான்டா, அவர் திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தியைக் கூறுவதற்காக கிராமத்தை நோக்கி திரும்பி ஓடினாள்.

Read more: மழை வந்தது

07 May

நொறுங்கிய ஆசைகள்

noringiya asaigal

தினாறு வருடங்களுக்கு முன்பு, வீடும் பள்ளிக்கூடமும் பந்து விளையாடக்கூடிய இடமும் நண்பர்களும் மட்டுமே இருந்த ஒரு உலகத்தில், இதயம் முழுவதும் சந்தோஷத்துடன் ஓடித் திரிந்த பிள்ளைப் பருவத்தில், என்னுடைய வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்ட இந்தக் கதையை இப்போது ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்கு காரணமாக இருப்பவளே என்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த  பிந்துதான். ஒன்பது வயது மட்டுமே நிறைந்திருந்த அவள், என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வடநாட்டு நண்பரின் மகள். நான் இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தாலும், பிந்துவுடன் உள்ள பழக்கத்திற்கான காலம் அவ்வளவுதானா என்பதை நம்பமுடியவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தவுடன், நான் அலுவலகத்திலிருந்து வருவதை எதிர்பார்த்துக் கொண்டு அவள் என்னுடைய அறையின் வாசற்படியில் நின்றிருப்பாள். காலையில் தினமும் ஆறு மணிக்கு என்னை கண் விழிக்கச்செய்யும் வேலையை பிந்து ஏற்றுக்கொண்டிருந்தாள். போர்வையை மூடித் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைக் குலுக்கி அழைக்கும்போது அவள் கூறுவாள்.

Read more: நொறுங்கிய ஆசைகள்

23 Mar

அவன் வரவில்லை

avan-varavillai

“நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன்.”

கொச்சுகல்யாணி உள்ளே நுழைந்து சிறிது நேரம் கழித்து கொச்சுராமன் கூறினான். அவனுடைய தொண்டை இடறிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், குரல் வெளியே வரவில்லை. உள்ளே இருந்த கொச்சுகல்யாணி அதை தெளிவாகக் கேட்கவில்லை. அவள் உள்ளேயிருந்தவாறு கேட்டாள்:

Read more: அவன் வரவில்லை

08 Feb

வல்லிகாதேவி

vallikadevi

மாதவமேனன் பரந்து கிடந்த அந்த வயல்வெளிகளின் வழியாக சுற்றி நடந்து, மாலை மயங்கும் நேரத்தில் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு முன்னாலிருந்த சிறிய பாதையில் நடந்து, வீட்டிற்குள் ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை நெருங்கியபோது, தன்னுடைய அறைக்குள்ளிருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும், ஆரவாரமும் வந்து கொண்டிருப்பதை அவர் கேட்க நேர்ந்தது.

Read more: வல்லிகாதேவி

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel