சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்...
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6747

சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்...
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
திருமணம் முடிந்து மனைவியை சுரேந்திரன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். மறுநாள் வடக்குப் பக்க வீட்டிலிருக்கும் இளைஞனைப் பற்றி மாலதி ஒரு புகார் கூறினாள். அவன் தன்னுடைய தெற்குப் பக்கத்திலிருக்கும் பலா மரத்தின் கிளையிலிருந்து கீழே இறங்கவேயில்லை. அங்கிருந்தவாறு அவன் உரத்த குரலில் பாடினான். சுரேந்திரன் அந்த விஷயத்தை அந்த அளவிற்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.