Lekha Books

A+ A A-
11 Jan

வாசகன்

vasagan

ந்த வீட்டை விட்டு நான் வெளியே வந்தபோது இரவாகிவிட்டது. சமீபத்தில் அங்கு கூடியிருந்த நெருங்கிய நண்பர்களுக்கு பிரகாசமான என்னுடைய கதையை நான் படித்துக் காட்டினேன். அவர்கள் என்னை அளவுக்கும் அதிகமாகப் புகழ்ந்து தள்ளினார்கள். ஆள் அரவமற்ற தெருவில் நடக்கும்போது, என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை என்பதை உணர்ந்தேன்.

Read more: வாசகன்

05 Jan

சிவப்பு தீபங்கள்

sivappu-deepangal

ந்தப் பழைய கதைதான்... தாய் தன் உறவினர் வீட்டு விருந்திற்குப் போயிருந்த சமயத்தில் வயதுக்குவராத மகளை வளர்ப்புத் தந்தை பலாத்காரம் செய்த கதை. துருப்பிடித்த ஆணியைப் போல தேய்ந்துபோன, வெற்றிலைக் காவி பிடித்த இரண்டு பற்களை வெளியில் காட்டியபடி ஆயி என்று வீட்டிலுள்ளவர்கள் அன்புடன் அழைக்கும் அந்தத் தடிமனான பெண் தரையில் உட்கார்ந்தவாறு சுவரில் சாய்ந்து கொண்டு உரத்த குரலில் சிரித்தாள்.

Read more: சிவப்பு தீபங்கள்

12 Nov

மிருதுளா பிரபு

mirudhula-prabhu

 

1

னம் ஒரு க்யான்வாஸா?

அப்படித்தானென்றால், கோடுகளும் வண்ணங்களும் என்ன? உணர்வுகள், அனுபவங்கள், நினைவுகள்...

புதியது பழையதை மறைக்கிறது. க்யான் வாஸில் ஒரு நிறத்தைத் தேய்க்கலாம். விளைவு? முதலில் இருந்த நிறம் மங்குகிறது, மாறுகிறது, மறைகிறது.

ஒரு அனுபவம். அதன்மீது மற்றொன்று. இப்படி ஒன்றின்மீது இன்னொன்றாக அசாதாரணங்களான அனுபவங்கள் - ஒவ்வொன்றுக்கும் அதற்கு முன்பு இருந்ததைவிட அடர்த்தியான நிறம்...

பலவும் மாறுகின்றன, மறைகின்றன.

ஒழுங்கு தவறுகிறது.

Read more: மிருதுளா பிரபு

10 Nov

ஒற்றையடிப் பாதைகள்

ottraiyadi-pathaigal

ம்பியாரின் மகள் வந்து நுழைந்ததே ஒரு சிறிய கோபத்துடன்தான்.

       விமான நிலையத்தில் யாரையும் காணோம். பழக்கமான ஏதாவது முகம் இருக்கிறதா என்று தேடி இவ்வளவு நேரமும் வரவேற்பறையில் சுற்றித் திரிந்து பார்த்தாள். கடைசியில் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து காத்து நின்றிருந்தாள். அங்கும் யாரையும் காணோம். பிறகு ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு எப்படியோ டாக்ஸியை ஏற்பாடு செய்து பொருட்களை ஏற்றும்போது டயோட்டாவும், பெரிய ஒரு சிரிப்பும், தலைக்குப் பின்னால் சொறியலுமாக டிரைவர் அச்சுதன் நாயர் வந்து நின்று கொண்டிருந்தார்.

Read more: ஒற்றையடிப் பாதைகள்

10 Nov

ஹேராம்

hey-ram

அர்ஜுனா பல்குணா...

குளிரே குலுங்கிப் போகிற அளவிற்கு முழங்கிய குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு புல்வெளியில் இருந்த மனிதக் கூட்டம் முழுவதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது.

கொலையாளி குளிர்ந்த காற்றில் புகைந்து கொண்டிருக்கும் கைத்துப்பாக்கியுடன் அமைதியாக எந்தவித சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

Read more: ஹேராம்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel