Lekha Books

A+ A A-
17 Oct

தினா

thinaa

டுப்பை வளைத்து குனிந்து, கைகள் தரையை நோக்கி தொங்கிக் கொண்டிருக்க, மாதலா மதிய நேரத்தில் அடிக்கப்படும் பன்னிரண்டு அடிகளின் கடைசி அடியைக் கேட்டான். தலையை உயர்த்தி, பத்து எட்டுகளுக்கு அப்பால் கதிர்களுக்கு மத்தியில், பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் ட்ரவுசர் அணிந்து வந்துகொண்டிருந்த கங்காணியைப் பார்த்தான். அதற்குமேல் நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. ஏனென்றால், கட்டளை மிகப்பெரிய சத்தமாக மாற்றப்பட்டு காதில் விழும்போது, தன்னுடைய வேலையை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Read more: தினா

28 Sep

தெய்வ மகன்

deiva-magan

ரு ஏழை விவசாயிக்கு ஒரு மகன் பிறந்தான். விவசாயி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பையனுக்கு 'காட்ஃபாத'ராக இருக்கும்படி கேட்பதற்காக தன்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனிதனைத் தேடிச் சென்றான். அந்த மனிதனோ ஒரு ஏழை மனிதனின் குழந்தைக்கு காட்ஃபாதராக இருப்பதற்கு மறுத்துவிட்டான். விவசாயி தன்னுடைய இன்னொரு பக்கத்து வீட்டுக்காரனிடம் போய் கேட்டான். அவனும் மறுத்துவிட்டான்.

Read more: தெய்வ மகன்

26 Sep

ஹரித்துவாரில் மணியோசை

haridwaril-mani-osai

“முஸுரி, சிம்லா, நைனிட்டால்...” என்றான் ஸெஞ்யோர் ஹிரோஸி.

             வெள்ளிக்கிழமை சுதந்திர தினமாக இருப்பதால் அன்று விடுமுறை. சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் அலுவலகம் கிடையாது. மூன்று விடுமுறை நாட்கள். ஆனாலும் அதை நினைத்து மகிழ்ச்சி தோன்றவில்லை. மாறாக, பயம்தான் உண்டானது. இந்த மூன்று நாட்களையும் எப்படிச் செலவழிப்பது? எங்கேயாவது போனாலென்ன என்று நினைத்தான். அப்போது வேறொரு பிரச்சினை தலையை நீட்டியது. எங்கே போவது? ரமேஷன் பணிக்கருக்கு இந்த மூன்று நாட்களைச் செலவழிக்க இவ்வளவு பெரிய பூமியில் ஒரு இடம்கூட இல்லை.

Read more: ஹரித்துவாரில் மணியோசை

24 Sep

தேடித் தேடி...

thedi thedi

ருப்பு புள்ளிகளைக் கொண்ட ஒரு வெள்ளைநிற நாய் அங்கு இருந்தது. அவன் அப்போது என்னைப் பார்த்து பற்களைக் கடித்து இலேசாக முனகியபடி இருப்பான் தனிப்பட்ட முறையில் என்மீது அவன் கொண்ட வெறுப்பே அதற்குக் காரணம்.

அவனைத் தவிர வேறு நான்கு நாய்களும் அங்கு இருந்தன. அந்த ஐந்து நாய்களுமே ஒரே வயதைக் கொண்டவைகளாக இருந்தாலும் அந்த நாய்களில் எதற்கும் எச்சில் இலைகள் இருக்கும் பீப்பாய்களை நெருங்குவதற்கான தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம்- நாங்கள் அதற்குச் சம்மதித்தால்தானே! எங்களுக்கு வேண்டிய அளவிற்குச் சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் கிளம்பி விடுவோம். அதற்குப்பிறகு நான்கு பக்கங்களிலும் பயந்தபடி பார்த்தவாறு பதுங்கிப் பதுங்கி மற்ற நாய்கள் எச்சில் இலைகள் இருக்கும் இடத்தை  நோக்கி வருவார்கள்.

Read more: தேடித் தேடி...

24 Sep

ஒரு லட்சமும் காரும்

Oru Latchamum Kaarum

சுராவின் முன்னுரை

பி.கேசவதேவ் எழுதிய ‘பப்பு’, ‘திருப்பம்’, ‘மரணத்திலிருந்து’, ‘நான்தான் தவறு செய்தவன்’, ‘உலக்கை’, ‘தங்கம்மா’ ஆகிய புதினங்களை நான் ஏற்கனவே மொழி பெயர்த்திருக்கிறேன். அவர் 1969-ஆம் ஆண்டில் எழுதிய கதை ‘ஒரு லட்சமும் காரும்’. ‘நான் எழுதும் அனைத்தையும் சமுதாயத்தின் மீது கொண்ட பொறுப்புணர்வுடனே எழுதுகிறேன்’ என்று மார்தட்டிக் கூறும் கேசவதேவ் எந்த அளவிற்கு உலகத்தையும் மக்களையும் அவர்களின் போலித்தனங்களையும் கூர்மையாகப் பார்த்திருக்கிறார் என்பதை இந்தப் புதினத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் பார்க்கலாம்.

Read more: ஒரு லட்சமும் காரும்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel