
சுராவின் முன்னுரை
பி.கேசவதேவ் எழுதிய ‘பப்பு’, ‘திருப்பம்’, ‘மரணத்திலிருந்து’, ‘நான்தான் தவறு செய்தவன்’, ‘உலக்கை’, ‘தங்கம்மா’ ஆகிய புதினங்களை நான் ஏற்கனவே மொழி பெயர்த்திருக்கிறேன். அவர் 1969-ஆம் ஆண்டில் எழுதிய கதை ‘ஒரு லட்சமும் காரும்’. ‘நான் எழுதும் அனைத்தையும் சமுதாயத்தின் மீது கொண்ட பொறுப்புணர்வுடனே எழுதுகிறேன்’ என்று மார்தட்டிக் கூறும் கேசவதேவ் எந்த அளவிற்கு உலகத்தையும் மக்களையும் அவர்களின் போலித்தனங்களையும் கூர்மையாகப் பார்த்திருக்கிறார் என்பதை இந்தப் புதினத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் பார்க்கலாம்.
80 நூல்களை எழுதியிருக்கும் அவர் 1964-ஆம் வருடம் தேசிய சாகித்ய அகாடமி விருதையும், 1970-ல் சோவியத் நாடு நேரு விருதையும் பெற்றிருக்கிறார். இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கும் கேசவதேவ் மீது நமக்கு ஒரு வியப்பும் மரியாதையும் உண்டாகிறது. இத்தகைய அரிய படைப்புகளால்தான் அவர் சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பி.கேசவதேவ் எழுதிய இந்த சிறந்த புதினத்தை மொழிபெயர்த்த மகிழ்ச்சியுடன் இதை தமிழ் மக்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்,
சுரா
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook