Lekha Books

A+ A A-

ஒரு லட்சமும் காரும் - Page 5

Oru Latchamum Kaarum

‘‘பிறகு... நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். உங்களுடைய ஒரு லட்சம் ரூபாயையும் காரையும் பார்த்து ஒண்ணும் நான் இங்கே வரல. கூட பிறந்தவளாச்சேன்னு நினைச்சுத்தான் நான் வந்தேன். உனக்குப் பிடிக்கலைன்னா, நான் இங்கேயிருந்து போயிடுறேன். அரிசியோ மரவள்ளிக்கிழங்கோ தேவைப்பட்டால், நான் இங்கே கொடுத்து அனுப்புறேன்.’’

‘‘இவ்வளவு நாட்களா... அக்கா உங்களோட அரிசியையும் மரவள்ளிக்கிழங்கையும் நாங்க சாப்பிட்டு வாழ்க்கையை நடத்தலையே! இனிமேலும் அது இல்லாமல் வாழ முடியுமான்னு பார்க்குறேன்.’’

‘‘அப்படின்னா, நான் கிளம்பட்டுமா?’’

‘‘ம்...’’

‘‘குஞ்ஞுக்குட்டி தலையை வெட்டியவாறு திரும்பி நடந்தாள். ஒற்றையடிப் பாதையில் போய் நின்றுகொண்டு அவள் உரத்த குரலில் சொன்னாள்:’’

‘‘உன் ஒரு லட்சத்தில் பங்கு கேட்டு வந்தவள் இல்லைடி நான்.’’

‘‘இல்ல... இல்ல... கூடப்பிறந்தவள்மீது வச்சிருக்குற பாசத்தாலதான் இங்கே வந்தீங்க. சரியா?’’

மாலை நேரம் ஆனது. மாதவன் எழுந்தான். 


‘‘அம்மா, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்.’’

"நீ இப்போ எங்கே போறே?"

"இரவுக்கு ஏதாவது வேண்டாமா?"

"அதற்கு நீ இப்போ என்ன செய்யப் போறே?"

"நான் கொஞ்சம் வெளியே போய் பார்க்குறேன். எனக்கு ஒரு தேநீர் குடிக்கணும்போல இருக்கு."

"சீக்கிரமா வந்திடணும்."

"வந்திடுறேன்."

அவன் ஒற்றையடிப் பாதையில் இறங்கி நடந்தான். குமாரன் நாயரின் தேநீர்க் கடையை நோக்கி அவன் நடந்தான். குமாரன் நாயரிடம் அவன் கேட்டான்:

"ஒரு தேநீர் கடனாகத் தர முடியுமா?"

"அது என்ன மாதவா? என்கிட்ட விளையாடுறியா?"

"தேநீர் கடனுக்குத் தாங்கன்னு கேக்குறது விளையாடுறதா?"

"பிறகு என்ன? மாதவா, நீ ஒரு லட்சாதிபதி. நான் ஒரு ஏழை தேநீர்க் கடைக்காரன். நிலைமை அப்படி இருக்குறப்போ கடன் தர முடியுமான்னு கேக்குறது விளையாட்டுதானே?"

"மாதவன் பெஞ்சில் உட்கார்ந்தான். குமாரன் நாயர் தேநீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் கேட்டார்:

"நல்ல பப்பட வடை இருக்கு. தரட்டுமா? பிறகு... அதிரசம் இருக்கு. அதிரசம் தரட்டுமா?"

மாதவன் பப்பட வடையையும் அதிரசத்தையும் வாங்கி தேநீர் குடித்து முடித்து எழுந்தான். அவன் சொன்னான்: "கணக்கு எழுதி வச்சிக்கோங்க."

"கணக்கு எதுவும் எழுத வேண்டாம் மாதவா. தினந்தோறும் இங்கே தேநீர் குடிக்க நீ வந்தால் போதும்."

மாதவன் அங்கிருந்து வெளியேறினான். சங்கரன் குட்டி வேலை முடிந்து வந்து கொண்டிருந்தான். அவன் மகிழ்ச்சியுடன் சொன்னான்:

"இங்கே நிற்கிறது மாதவன் அண்ணன்தானே?"- அருகில் சென்று அவன் மாதவனின் காதில் மெதுவான குரலில் சொன்னான்:

"மாதவன் அண்ணே, இனிமேல் நீங்க இப்படி வெளியே நடக்கக்கூடாது. ஏதாவது தேவைப்பட்டால் என்கிட்ட சொன்னால் போதும். நான் வாங்கிக் கொண்டு வந்து தர்றேன்."

"நான் ஒரு தேநீர் குடிப்பதற்காக வெளியே வந்தேன்டா சங்கரன்குட்டி."

"மாதவன் அண்ணே, இனிமேல் நீங்க தேநீர் கடைக்கு வந்து உட்கார்ந்து தேநீர் அருந்துவது நல்ல விஷயமா? தேயிலை, சர்க்கரை எல்லாவற்றையும் நானே வாங்கிக் கொண்டு வருவேன்ல? கிழக்கு வீட்டில் இருந்து பால் வாங்கலாம். இல்லாவிட்டால் ஒரு பசுவை வாங்கணும். ஹைத்ரோஸின் பசு பிரசவமாகி ஆறு நாட்கள்தான் ஆகுது. இரண்டரை படி பாலு கறக்குற பசு அது. அதை நாளைக்கே நான் அங்கே கொண்டு வர்றேன்."

"அப்போ... ஒரு காரியம் சங்கரன்குட்டி!"

"என்ன?"

"உனக்கு இன்னைக்கு கூலி கிடைச்சதா?"

"கிடைச்சது?"

"அதுல பாதியை எனக்குத் தர முடியுமா?"

"எதுக்கு?"

"இரவு சாப்பாட்டுக்கு வீட்டுல ஒண்ணும் இல்லையடா."

"மாதவன் அண்ணே, உங்களுக்கு அரிசியும் சாமான்களும் தானே வேணும்?"

"ஆமாம்..."

"அப்படின்னா வாங்க..."

அவர்கள் மாத்தச்சனின் மளிகைக் கடையை நோக்கி நடந்தார்கள். மாதவனை வெளியே நிறுத்திவிட்டு, சங்கரன்குட்டி கடைக்குள் நுழைந்து என்னவோ சொன்னான். மாத்தான் அன்புடன் அழைத்தவாறு சொன்னார்:

"அங்கே ஏன் நிற்கிறீங்க? இங்கே வந்து உட்காரலாமே!"

மாதவன் கடைக்குள் சென்றான். மாத்தச்சன் ஒரு நாற்காலியில் மாதவனை உட்காரும்படிச் சொல்லிவிட்டு, கடையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சொன்னான்: "டேய்... ஓடிப்போய் ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு வா. வெற்றிலைப் பாக்குக் கடைக்குப் போய் ஒரு சிகரெட்டையும் வாங்கிட்டு வா."

சிறுவன் ஓடிச் சென்றான். மாத்தச்சன் சொன்னார்:

"இங்கே வந்தது நல்ல விஷயம்தான். ஆனால் பொருட்கள் வாங்குவதற்காக வந்திருக்கிறீர்கள் என்றால் அதற்காக வர வேண்டாம். ஒரு பையன்கிட்ட சொல்லிவிட்டால் போதும்... தேவைப்படுகிற பொருட்களை நான் அங்கே கொடுத்து அனுப்பிட மாட்டேனா?"

சங்கரன்குட்டி சொன்னான்: "விஷயம் என்னன்னா... மாதவன் அண்ணன் வேறொரு விஷயமோ இந்தப் பக்கமா வந்துகிட்டு இருந்தாரு. அப்போ... சாமான்களைக் கொடுத்து அனுப்பிடலாம்னு இங்கே வந்து நான் சொன்னேன்."

சிறுவன் தேநீரையும் சிகரெட்டையும் கொண்டு வந்தான். மாதவன் தேநீரைக் குடித்தான். சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு மாத்தச்சன் சொன்னார்:

"சாமான்கள் எல்லாவற்றையும் நான் அங்கே கொடுத்து அனுப்பிடுறேன். இனிமேல் என்ன வேணும்னாலும், இங்கே சொல்லிவிட்டால் போதும்."

மாதவன் கடையை விட்டு வெளியேறி நடந்தான். அவனுக்குப் பின்னால் சங்கரன்குட்டி நடந்தான். வெற்றிலைப் பாக்குக் கடைக்கு அருகில் சென்றபோது, சங்கரன்குட்டி கேட்டான்:

"சிகரெட்டும் தீப்பெட்டியும் வேண்டாமா மாதவன் அண்ணே!"

"ம்... வேணும்!"

"அப்படின்னா... மாதவன் அண்ணே... நீங்க இங்கேயே நில்லுங்க."

சங்கரன்குட்டி வெற்றிலைப் பாக்குக் கடைக்குள் நுழைந்து என்னவோ சொன்னான். வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் செல்லப்பன் ஒரு பாக்கெட் பர்க்கிலி சிகரெட்டையும் ஒரு தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து மாதவனின் கையில் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

"இதுதான் இருக்கு. நாளைக்கு ப்ளேயர்ஸ், கோல்ட்ஃப்ளேக் எல்லாவற்றையும் வாங்கி வைக்கிறேன். நல்ல மிட்டாய் இருக்கு. கொஞ்சம் எடுத்துக் கொண்டு வரட்டுமா?"

"ம்... கொண்டு வா."

செல்லப்பன் ஓடிச் சென்று கொஞ்சம் மிட்டாய்களை தாளில் சுற்றிக் கொண்டு வந்து மாதவனின் கையில் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

"என்ன தேவைப்பட்டாலும், இங்கே சொல்லி அனுப்பினால் போதும்."

"ம்..."

மாதவன் தலையை உயர்த்திக் கொண்டு நடந்தான். அவனைப் பின்தொடர்ந்து சங்கரன்குட்டி நடந்தான்.

"அதிர்ஷ்டசாலி! அதிர்ஷ்டசாலி! எதிரில் இங்கே வந்து கொண்டிருப்பது லட்சாதிபதிதானே?"- இப்படி ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியவாறு பரமேஸ்வரன் பிள்ளை எதிரில் வந்து கொண்டிருந்தார். அருகில் வந்து மாதவனின் தோளில் கையை வைத்துக் கொண்டு அவர் சொன்னார்:

"முதல் பரிசு... மாதவா... உனக்குக் கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சவுடனே நான் சொன்னேன், கடவுளோட அருள் உனக்கு இருக்குன்னு. தெரியுதா மாதவா... எப்பவும் கடவுளை மனசுல நினைக்கணும். சரி... மாதவா, நீ லாட்டரிச் சீட்டை லாட்டரியின் தலைமை அலுவலகத்தில் கொண்டு போய் கொடுத்தாச்சா?"

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel