Lekha Books

A+ A A-

பலாத்காரம்

bhalaathkaaram

ங்களுக்குத் தெற்குப் பக்கம் இருந்த வீட்டின் முன்னாலிருந்த வழியில் நான் போனபோது, வாசலிலிருந்து ஒரு கேள்வி வந்தது.

"அண்ணே, நீங்க இப்போத்தான் வர்றீங்களா?"

எனக்கு நன்கு பழக்கமான குரல். நான் திரும்பிப் பார்த்தேன். பிரகாசமான ஒரு புன்சிரிப்புடன் இளமைப் பருவத்தில் காலெடுத்து வைத்திருந்த ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். உடனடியாக அவள் யார் என்று என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த வீட்டில் இருந்த அந்தச் சிறுபெண் மாலதிதான். நான்கே வருடங்களில் அவளிடம் தான் எந்த அளவிற்கு மாற்றம் உண்டாகியிருக்கிறது! அப்போது பாவாடை மட்டும் அணிந்து ஓடித் திரிந்த ஒரு சிறுமியாக அவள் இருந்தாள். என் முதுகில் அவள் ஏறி சவாரி செய்திருக்கிறாள். நான் அவளுக்கு ஒரு ஃப்ராக் தைத்துக் கொடுத்திருக்கிறேன். நான் கேட்டேன்:

"மாலதி, அம்மா இங்கே இல்லையா?"

அவள் சொன்னாள்:

"உள்ளே இருக்காங்க."

"நான் போயிட்டு வர்றேன். அம்மாக்கிட்ட சொல்லு."

நான் நடந்தேன். சிறிது தூரம் நடந்த பிறகு நான் திரும்பிப் பார்த்தேன். அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்.

அந்த முகத்திற்கு ஒரு தனிப்பட்ட புதுமை இருந்தது. கன்னங்களில் ஒன்றோ இரண்டோ முகப்பருக்கள் வெளியே தெரியும் படிஇருந்தன. அவளுடைய கண்கள் மிகவும் பெரிதாக இருந்தன. அவற்றுக்கு ஒரு நீல நிறம் இருந்தது. அழகு இருந்தது. அவை ஒரு சிறுமியின் கள்ளங்கபடமில்லாத கண்கள் இல்லை. அவை கனவு காண்பதைப் போல எனக்குத் தோன்றியது. அவை எப்போதும் துடிப்புடன் இருந்தன. அவளுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தது. அவளிடம் உற்சாகம் இருந்தது. அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். மலர்ந்து கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தாய்தான் என்னுடைய செவிலித்தாய். நான் அவளுடைய மார்பகத்திலிருந்துதான் முதலில் பாலையே குடித்தேன். அதனால் அவளையும் நான் அம்மா என்று அழைத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை மகனைப்போல நினைத்து அன்பு வைத்திருந்தாள்.

அன்று பிற்பகல் நேரத்தில் நான் தெற்குப் பக்க வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த அம்மாவிற்கு கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு, ஒரு புடவை, நான்கைந்து ரூபாய்கள் ஆகியவற்றைக் கொண்டு போயிருந்தேன். அவளுக்காக நான் ஒரு நல்ல ரவிக்கையும் தைத்து வைத்திருந்தேன்.

அம்மா என்னைப் பார்த்தவுடன் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள்:

“என் மகனே, இந்த அளவுக்கு வளர்ந்துட்டியா?’’ அவள் என்னைப் பார்த்து கண்கள் குளிர்ந்தாள். ஆனந்தத்தில் திளைத்தாள்.

“ஆனால், அண்ணன் மெலிஞ்சு போயிருக்காரும்மா.’’

வாசலில் நின்று கொண்டு அவள் சொன்னாள். நான் அவளையே பார்த்தேன்.

அவள் உயரமாக வளர்ந்திருக்கிறாள். உடலில் இளமையின் புதுக்களை தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அவளுடைய மார்பகங்கள் பெரிதாகி இருந்தன. சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடமும் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்துத்தான் அப்படிப் பார்ப்பது மரியாதைக் குறைவான செயல் என்ற விஷயமே எனக்குத் தோன்றியது. என்னுடைய பார்வை பட்டதன் விளைவாக அவளுடைய மார்பகங்கள் கீழ்நோக்கி இறங்கியதைப்போல எனக்குத் தோன்றியது. ஒரு அம்பு பாய்ந்ததைப் போல, அதனால் பாதிக்கப்பட்டதைப் போல அவள் கதவுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள். அவளுடைய கண்கள் துடித்தன. வெட்கத்தால் அவை மேலும் அழகாயின. அவளுக்குள் இருக்கும் பெண்மைத்தனம் நன்கு வெளிப்பட்டது. எல்லாவற்றையும் அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் அம்மாவும் நீண்ட நேரம் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டிருந்தது. நான் ஒரு குழப்ப நிலையில் இருப்பதைப்போல் உணர்ந்தேன். என்னுடைய பார்வைகளை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தேன். அவ்வப்போது என் பார்வை அவளை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. என் உணர்ச்சிகள் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தது. அப்படி நான் அவளை பார்க்கக் கூடாது தான். அவளுடைய மார்பகங்களில் என் பார்வை பதியக் கூடாதுதான்.

மறுநாளே நான் ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது.

இரண்டு வருடங்கள் மீண்டும் கடந்தன. என்னுடைய திருமணத்தையொட்டி ஒரு நீண்ட விடுமுறையில் நான் ஊருக்கு வந்திருந்தேன்.

என் வீட்டின் தெற்குப் பகுதியில் சற்று தள்ளி பாதையோரத்தில் ஒரு பொதுக்குளம் இருந்தது. நான் வரும் வழியில் அந்தக் குளத்திற்குப் பக்கத்தில் வந்தபோது குளித்து முடித்த ஒரு பெண் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணின் உருவம் என்னை மிகவும் ஈர்த்தது. பின்னால் இருந்து பார்த்தபோது - இந்த அளவிற்கு அளவெடுத்தாற்போல் இருந்த ஒரு வடிவத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அவளுடைய ஒவ்வொரு அசைவும் அந்த அளவிற்கு மனதைக் காந்தமென இழுத்தது. அதிக உயரமில்லை. உயரத்திற்கேற்ற சதைப்பிடிப்பு. தலைமுடி அடர்த்தியாக இருந்தது. கச்சிதமான உடலமைப்பு. அவள் ஈரத்துணியை அணிந்திருந்தாள். ரவிக்கையையும் பாடியையும் நனைத்துத் தோளில் இட்டிருந்தாள். துண்டை மடித்து தன் மார்புகளை மறைத்திருந்தாள். ஒரு கையால் ஈரமான முண்டின் கீழ்ப்பகுதி முனைகளை இறுகப் பிடித்திருந்தாள். கடைந்தெடுத்ததைப்போல் அவளின் கணுக்கால்கள் இருந்தன. அவள் வேகமாக நடந்தாள். அவள் அப்படி வேகமாக நடக்கும்போது உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்த ஈர முண்டில் சுருக்கங்கள் விழுந்து, கண்களை அதை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது. அவள் இடுப்பில் ஒரு மெல்லிய அரைஞாண் அணிந்திருந்தாள்.

நான் வேகமாக நடந்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழகான முகம். எனக்கு அவளை யாரென்று தெரியவில்லை. அவளுடைய வேகம் மேலும் அதிகரித்தது. நானும் விடுவதாக இல்லை. அவள் சிறிது தூரம் மெதுவாக ஓடினாள்.

தெற்கு வீட்டின் வாசலை நெருங்கியபோது, நான் அவளை கிட்டத்தட்ட அடைந்துவிட்டேன். அவள் வாசல் வழியாக உள்ளே ஓடினாள். அப்போது தான் அது மாலதி என்ற விஷயமே எனக்குத் தெரிந்தது.

முற்றத்தின் வழியாக அவள் ஓடி உள்ளே நுழைந்து திண்ணையில் இருந்து திரும்பிப் பார்த்தாள். பழக்கத்தை உணர்த்தும், அன்பை வெளிப்படுதுதும் ஒரு புன்சிரிப்பு அவளுடைய உதடுகளில் அரும்பியது. அந்த இளம்பெண்ணின் நாணம் கலந்த கண்கள் என்னைப் பார்த்ததால் உண்டான சந்தோஷத்தால் மலர்ந்தன.

நானும் அங்கு சென்றேன். திண்ணையை அடைந்தபோது அவளைக் காணவில்லை. நான் அம்மாவை அழைத்தேன். யாரும் அழைப்பைக் கேட்டதாகத் தெரியவில்லை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel