
சுராவின் முன்னுரை
நான் மொழி பெயர்த்த ''நீல வெளிச்சம்'' என்ற சிறுகதை மலையாளத்தில் வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதியது. ஏ. வின்சென்ட் இயக்கத்தில் பிரேம் நசீர், மது, விஜய நிர்மலா நடிக்க ''பார்கவி நிலையம்'' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற கதை இது.
பத்திரிகைகளில் கதைகள் எழுதிக் கொண்டிருக்கும் பஷீர் ஒரு பாழடைந்து கிடக்கும் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கச் செல்கிறார். அந்த வீட்டில் பார்கவி என்ற பெண் காதல் தோல்வியால் ஏற்கனவே தற்கொலை செய்திருக்கிறாள். இரவு நேரங்களில் அவளின் காலடிச் சத்தம் கேட்கிறது. கொலுசு சத்தம் கேட்கிறது. ஒரு நாள் அங்கிருந்த ஒரு அறைக்குள் ஒரு நீல வெளிச்சம் தெரிகிறது. அந்த வெளிச்சம் அங்கு எப்படி வந்தது ?
சுவாரசியமான சம்பவங்கள் நிறைந்த இந்தக் கதையை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook