
சுராவின் முன்னுரை
சென்னையைக் களமாக வைத்து காக்கநாடன் (Kakkanadan) மலையாளத்தில் எழுதிய ‘கோழி’ (Kozhi) என்ற புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் மூன்று மருமகன்கள்தான் இந்த நாவல் எழுதுவதற்கான உந்துசக்தியாக இருந்தவர்கள்’ என்கிறார் காக்கநாடன். மேலும் அவர் கூறுகிறார்: “அவர்களுடைய பெயர்கள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.
மூன்று பேரும் ஒன்று சேர்ந்து டில்லிக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று பேருக்கும் வேலை எதுவும் இல்லை என்று ஆனபோது, அவர்கள் கோழிப்பண்ணை ஆரம்பித்தார்கள். சமூகத்தில் உண்டாகும் மாற்றங்களுக்கேற்றபடி ஆச்சார குலத்தவரான நம்பூதிரியாக இருந்தாலும், நாயராக இருந்தாலும், யாராக இருந்தாலும் மாறுதல் நிகழும்; மாறுதலுக்கு உட்பட்டே தீருவார்கள் என்ற விஷயத்தைச் சிறிது நகைச்சுவை கலந்து நான் கூற முற்பட்டதன் வெளிப்பாடே இந்த நாவல்.”
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook