Category: சிறுகதைகள் Written by sura
அன்றும் காலையில் குடித்த கஞ்சியுடன் மாலை நேரம் வரும் வரை ஆண்டி தோளில் ஒரு கோடரியை வைத்துக் கொண்டு பல இடங்களிலும் அலைந்தான். யாருக்குமே ஒரு விறகு வெட்டும் மனிதன் தேவையாக இல்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அவன் போய் நின்று 'மரம் வெட்டணுமா? விறகு உடைக்கணுமா?' என்று கேட்டபோது, அவனுக்குக் கிடைத்த ஒரே பதில் 'வேண்டாம்... போ' என்பதுதான்.
Category: சிறுகதைகள் Written by sura
அது அவர்களின் முதல் இரவு. பாதி இரவு முடிகிற வரையில் அவன் அவளிடம் பல கதைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு வகையான அனுபவங்களையும் அவன் கூறினான்.
சிறுவனாக இருந்தபோது ஒரு கன்றுக்குட்டியின் மேல் ஏறி தான் சவாரி செய்ய முயற்சித்த கதையைக் கூறிய போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
Category: சிறுகதைகள் Written by sura
நேர்மையாக வாழ்ந்த சர்ச்சில் மணியடிக்கும் ஒரு மனிதரின் மகனாக ஐவான் பிறந்தான். தந்தை என்றாலே ஐவானுக்கு ஞாபகத்தில் வருவது மணியோசைதான். சர்ச் மணியை ஒலிக்கச் செய்வது தன் தந்தையாகத்தான் இருக்கும் என்று மனதிற்குள் நினைத்தவாறு எப்போதெல்லாம் சர்ச் மணி காதில் வந்து ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் அவன் முகத்தைச் சற்று தூக்கியவாறு மணியோசையைக் கூர்ந்து கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.
Last Updated on Friday, 02 November 2012 18:30
Hits: 6619
Category: சிறுகதைகள் Written by sura
சமீபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்ரெண்ட் சங்கரமேனனின் மரணச் செய்தியைப் பத்திரிகையில் படிக்க நேர்ந்த போது, நான் என்னுடைய பழைய நண்பன் சந்திரனைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அவனின் முட்டாள்தனமான காதலைப் பற்றியும்தான்.
மாணவர்களின் தலைவனாக இருந்தபோது சங்கரமேனனின் மகள் ராதிகாவைக் காதலித்தவன்தான் இந்த சந்திரன்.