Lekha Books

A+ A A-

மரணத்தின் சிறகுகள்

maranaththin-siragugal

     சுராவின் முன்னுரை

பிரபல மலையாளப் பத்திரிகையாளர் சி.என். கிருஷ்ணன்குட்டி (C.N. Krishnan Kutty) எழுதிய ‘ம்ருத்யோர்மா ஜ்யோதிர்கமய’ என்ற புதினத்தை ‘மரணத்தின் சிறகுகள்’ (Maranathin Siragugal) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

கயிறுமீது நடப்பதைப் போன்ற ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு, மிகவும் கவனமாக நாவலை எழுதியிருக்கும் கிருஷ்ணன்குட்டியைப் பாராட்டுகிறேன்.

மரணத்தை ‘காகம்’ வடிவில் கற்பனை பண்ணியிருக்கும் அவரின் புதிய நோக்கு எனக்குப் பிடித்திருந்தது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பார்கள். இந்தக் கதையின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம்கூட அதுதான். ஆசிரியராகப் பணியாற்றும் மகாதேவன், தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளைத் தொடர்ந்து, இறுதியாக நிகழும் சம்பவம் வரை யதார்த்தம் பொதிந்தவைதான்.

மகாதேவனைப் போன்ற மனிதர்களை நாம் நித்தமும் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! வாழ்க்கையில் இந்த கதாபாத்திரத்தைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தங்களை இதில் வரும் மகாதேவன் கதாபாத்திரத்தில் கண்ணாடியில் பார்ப்பதைப் போல பார்க்கலாம். இந்தப் புதினத்தைப் படிக்கும்போது, ஒரு வகையான குற்ற உணர்வுகூட அப்படிப்பட்டவர்களுக்கு மனதின் ஒரு மூலையில் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த புதினம் எழுதப்பட்டதன் நோக்கமும் அதுவாகத்தானே இருக்க வேண்டும்?

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)

 

+Novels

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

தாபம்

தாபம்

June 14, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel