Category: சிறுகதைகள் Written by sura
பச்சு வேகமாக படிகளில் ஏறி வந்து காரின் சாவியை மேல் நோக்கி தூக்கி எறிந்து பிடித்தவாறு என்னிடம் சொன்னான்:
"வா மாதவி... தடிச்சி பெண்ணே... என் கூடவா. இந்த வீடு எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்திரு. இப்போ இந்த நிமிடமே...."
"என்ன நீ சொல்றே?" நான் கேட்டேன்: "நீ நல்லா குடிச்சிருக்க போலிருக்கே! வீட்டை விட்டு உன் கூட வர்றதா? எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உன்னைப் போல எனக்கு முழு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைச்சியா? வங்காளப் பையா... நீ தண்ணியைப் போட்டுட்டா இங்கே வர்ற?"
Category: சிறுகதைகள் Written by sura
நேற்று முழுவதும் 'பார்க்க வந்தவர்கள்' கூட்டம் தான். நகரத்திலிருந்து வெளிவரும் காலைப் பத்திரிகைகளில் செய்தி வந்ததுதான் தாமதம், அதற்குள் நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்தி பரவிவிட்டது. 'அகில இந்திய ரேடியோ' வின் செய்தி அறிக்கையில் கூட விஷயத்தை விடவில்லை.
Category: சிறுகதைகள் Written by sura
சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கல்தூண் ஒன்றில் சாய்ந்தவாறு, தன்னைச் சுற்றிலும் ஒரு முறை அவள் தன் தளர்ந்து போன கண்களால் நோட்டம் விட்டாள். அவளுக்கு மிகவும் அருகில் கோவில் கோபுரம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. பல வகைப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படும் கடைகள் இருக்கும் இரு வீதிகளும் இங்கிருந்தே அவளின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன.
Category: சிறுகதைகள் Written by sura
ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் சித்தராகி விட்டேன். குரு. பஷீர்... புதன்கிழமை சித்தரோ ஞாயிற்றுக்கிழமை சித்தரோ அல்ல... வாழ்க்கையில் ஏழு நாட்களும், வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் இந்தச் சித்தி எனக்கு இருக்கிறது. உலகத்திற்கு எவ்வளவோ நன்மைகளை இதன் மூலம் என்னால் செய்ய முடியும்.