Category: சிறுகதைகள் Written by sura
20.9.1954
சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லீலாவைப் பற்றி இன்று நினைத்தேன்.
லீலா என்றதும் நீங்கள் திடீரென்று ஒரு எண்ணத்திற்கு வரலாம். தவறாக நீங்கள் நினைத்து விடுவதற்கு முன்னால் நானே சொல்லி விடுகிறேன்- அவள் என் சகோதரி.
இந்த உண்மையை அறிந்திருக்கும் நபர்கள் உலத்திலேயே மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர்.
Category: சிறுகதைகள் Written by sura
நல்ல நிலவொளி திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலான பனி மூட்டத்தினூடே தூரத்தில் மேற்கு திசையில் இருந்த மலை முகடுகள் தெளிவில்லாமல் நிழல்களைப் போல தெரிந்தன. இரவு நேரத்தின் உறைந்து போன அமைதி எங்கும் பரவியிருந்தது.
ஜானம்மா மெத்தையில் அசையாமல் படுத்திருந்தாள். பாதி இரவு தாண்டியிருக்கும். இருப்பினும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அமைதியின் மரத்துப்போன சரீரத்தை வேதனைப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்த சர்க்கஸ் கொட்டகையிலிருந்து மெல்லிய பேண்ட் வாத்திய இசை காற்றில் மிதந்து வந்தது.
Category: சிறுகதைகள் Written by sura
ஜன்னல் அருகில் வெளியே பார்த்தவாறு அந்த மனிதர் அமர்ந்திருந்தார். எப்போதும் உறங்கப் போகிற நேரம் கடந்து விட்டிருந்தது. ஆனால், இப்போது அவரின் மனதில் நேரத்தைப் பற்றியோ தூக்கத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட எண்ணம் இல்லை என்பதே உண்மை. வெறுமனே வெளியே உற்று நோக்கியவாறு அந்த மனிதர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தார்.
Category: சிறுகதைகள் Written by sura
நகரத்தைத் தாண்டி அமைதியாக இருக்கும் ஒரு பகுதியில் ஒரு சிறு பாதையில் நடந்து போன பிறகு இருக்கிறது அந்தச் சிறுவீடு. முற்றத்தில் துளசிச் செடிகள் வளர்ந்திருக்கின்றன. செத்திப் பூவும் மஞ்சள் மந்தாரமும் அங்கு நிறையவே இருக்கின்றன. முன் பக்க் கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறு ஓசை கூட இல்லை. வீடு பயங்கர அமைதியில் ஆழ்ந்திருக்கிறது.