Category: சிறுகதைகள் Written by சுரா
நேற்று மாலையில் நான் எங்களுக்குச் சொந்தமான நிலத்தின் வடக்குப் பக்கத்தில் இருக்கிற பாதை வழியே மது அருந்தக்கூடிய பாரை நோக்கி நடந்துபோனபோது, எனக்கு எதிரில் தெய்வம் வந்தது.
"உனக்கு என்னை ஞாபகத்துல இருக்கா?"- தெய்வம் கேட்டது.
லைன்மேனுக்கு வேறு எங்கோ சீக்கிரம் போகவேண்டிய சூழ்நிலை போலிருக்கிறது. பகலிலேயே தெருவிளக்குகள் 'பளிச்' என்று ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருந்தன.
Last Updated on Thursday, 14 February 2013 10:15
Hits: 6006
Category: சிறுகதைகள் Written by சுரா
மேற்கு திசையில் தெரிந்த மாலை நேரம் ஒரு விளக்கைப் போல ஜொலித்தது. வானத்தின் விளிம்பில் வர்ணங்கள் நதியைப் போல கலங்கியிருந்தன. அது அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடங்கியபோது இருந்த நிலை. சிறிது நேரத்தில் நிறங்கள் முற்றிலுமாக மறைந்தன. மேகங்களில் இருட்டு நிறம் வந்து சேர்ந்தது. மாலை இரவு நேரத்திற்குள் சங்கமமானது.
Category: சிறுகதைகள் Written by சுரா
மற்றவர்களின் அனுபவம் எப்படி என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, என்னுடைய பட்டாள வாழ்க்கை வெற்றிகரமான ஒன்றுதான்.
அப்படியென்றால் எதற்காக முன்கூட்டியே பட்டாளத்தில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள் - இல்லையா? நான் ஓய்வெடுத்தது பட்டாளம் வெறுத்துப் போய்விட்டது என்பதற்காக அல்ல, சகோதரா. புதிய தலைமுறைக்கு நாம் வழிவிட்டுக் கொடுப்பதுதானே நியாயம்!
Category: சிறுகதைகள் Written by சுரா
நான் மீண்டும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். வெளியே வருவதேயில்லை. ஏதாவது படிக்கலாம் என்றாலோ அதில் கொஞ்சம்கூட கவனம்போக மாட்டேன் என்கிறது. என்னுடைய புத்தகங்கள் அலமாரியில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. எழுதுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை. மனதில் அழகுணர்வு பற்றிய நினைவு கொஞ்சம்கூட இல்லை. நான் உனக்கு இந்தக் கடிதத்தை மிகவும் அவசர அவசரமாக எழுதுகிறேன்.