Category: சிறுகதைகள் Written by சுரா
"செரியான் தோமஸ், நீ வத்சலா ஜானை மனைவியா ஏத்துக்கிறியா?" என்று ஃபாதர் கேட்டபோது, செரியான் சிந்தனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். தேன் நிலவிற்கு எங்கே போவது? கன்யாகுமரி? தேக்கடி?
"கன்யாகுமரி"- செரியான் சொன்னான்.
ஃபாதர் செரியானை உற்றுப் பார்த்தவாறு தன் குரலை உயர்த்தி மீண்டும் தான் கேட்ட கேள்வியையே இரண்டாம் முறையாகக் கேட்டார்.
Category: சிறுகதைகள் Written by சுரா
இடியன் பணிக்கர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு லாக் அப்பில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரும் பெற்ற சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! சந்தோஷம் அடைந்தார்கள் என்று கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். கைதிகளில் ஒருவனான டானியல் மனம் நொந்துபோய் தனக்குத்தானே கூறிக்கொண்ட வார்த்தைகள் இவை:
"உன்னோட கடைசி இடமாற்றம் இதுதாண்டா!"
Category: சிறுகதைகள் Written by சுரா
மிக மிகத் தாழ்ந்த நிலையில் வாழ்க்கையை ஆரம்பித்து, இளமைக்காலத்தின் தொடக்கத்தில் தெருத் தெருவாகக் கஷ்டப்பட்டு அலைந்து, சிறிது நாட்களில் பட்டாளக்காரனாகச் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, கடைசியில் ஒரு நாட்டையே ஆளக்கூடிய மனிதராகவும், எல்லோரின் நன்மதிப்பையும் பெற்றவராகவும், உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்குப் பெரிய மனிதராகவும் ஆன அந்த மகான் மரணமடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் முகத்தில் நிழலாடிய ஒருவித விரக்தி உணர்வையும், வெறுப்புத் தன்மையையும் பற்றிக் கேள்வி கேட்டதற்கு அவர் இப்படிச் சொன்னார்:
Category: சிறுகதைகள் Written by சுரா
நிலா வெளிச்சம் நிறைந்திருக்கின்ற சாலை என்று சொன்னால் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. "தனிமை சூழ்ந்த" என்பதையும் அதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். விஷயம் என்னவென்று நானே கூறுகிறேன். அந்தச் சாலைக்குப் பக்கத்திலேயே ஒரு பாம்புகள் நிறைந்த காடும், பழைய ஒரு கோவிலும் இருக்கின்றன. இரவு நேரங்களில் தன்னந்தனியே யாரும் அந்த வழியில் நடந்து போக மாட்டார்கள். பயங்கரமான சம்பவங்கள் பலவும் அங்கே இதற்கு முன்பு நடைபெற்றிருப்பதே காரணம். பலர் பயந்து நடுங்கியே செத்துப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Last Updated on Thursday, 14 February 2013 10:12
Hits: 6067