Lekha Books

A+ A A-
10 Mar

சபதம்

sabhatham

ச்சிற திருவிழாவிற்குச் சென்றிருந்தபோது நாணி ஒரு அண்டாவை வாங்கினாள். நான்கரை ரூபாய் விலை கூறப்பட்ட அண்டாவை மூன்றே முக்கால் ரூபாய் தந்து அவள் விலைக்கு வாங்கினாள். சிறு பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக கொஞ்சம் பேரீச்சம் பழங்களையும், ஐந்தாறு முறுக்குகளையும் வாங்கி அண்டாவிற்குள் போட்டாள். முறம் ஒன்றை வாங்கி அண்டாவிற்கு மேலே வைத்தாள். தொடர்ந்து அண்டாவை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, பெருமை தாண்டவமாட மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாறு மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

Read more: சபதம்

10 Mar

புகழின் நிமிடங்கள்

pugalin nimidangal

ரே நேரத்தில் போராளியாகவும் எழுத்தாளராகவும் இருந்து ஆச்சரியப்பட வைக்கும் மனிதர் ந்குகி வா தியான்கோ. இவர் 1938-ஆம் ஆண்டில் கென்யாவில் உள்ள லிமுரு என்ற இடத்தில் பிறந்தவர். அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா போர் முறைகளைக் கையாண்டிருக்கும் தியான்கோ, பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், சிறையில் இருக்கும்போதும் தொடர்ந்து எழுதி, சிறையில் தள்ளியவர்களைத் திகைக்க வைத்திருக்கிறார்.

கிகுயு மொழியின் ஆழத்தையும் அழகையும் தன்னுடைய எழுத்துகளில் கொண்டு வந்த தியான்கோவை கென்யாவின் மார்க்வெஸ் என்று கூறலாம்.

Read more: புகழின் நிமிடங்கள்

10 Mar

சப்தங்கள்

sapthangal

சுராவின் முன்னுரை

‘சப்தங்கள்’ (Sabdhangal) 1947-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அதில் வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) கையாண்டிருக்கும் கதைக் கருவிற்கு கேரளத்தில் பரவலான எதிர்ப்பு அந்த காலகட்டத்தில் உண்டானது. அதிக அளவில் பரபரப்பு உண்டாகக்கூடிய வகையில் அதில் பல சம்பவங்களை பஷீர் எழுதியிருந்தார். ‘பஷீரா இப்படிப்பட்ட ஒரு நாவலை எழுதியிருக்கிறார்?’ என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டனர்.

Read more: சப்தங்கள்

10 Mar

நன்மைகளின் சூரியன்

nanmaigalin suriyan

சுராவின் முன்னுரை

பி.பத்மராஜன் (P.Padmarajan) எழுதிய ‘நன்மைகளின் சூரியன்’ (Nanmaigalin Suriyan) நான் மொழிபெயர்த்த சிறந்த நூல்களில் ஒன்று.

1945-ஆம் ஆண்டில் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தில் பிறந்த பி.பத்மராஜன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய சிறந்த புதினங்கள் பல திரைப்படங்களாக வடிவமெடுத்திருக்கின்றன.

Read more: நன்மைகளின் சூரியன்

10 Mar

இரவின் காலடி ஓசை

iravin kaladi osai

நேரம் இருட்டும் வரை நான் மற்ற இளம் பெண்களைப் போல உற்சாகத்துடன் காணப் பட்டேன். என்னிடம் இருக்கும் அழகோ, பண வசதியோ, கல்வித் தகுதியோ இல்லாமலிருந்த இளம் பெண்களைப் பற்றி கிண்டல் பண்ணிச் சிரிப்பது, அவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நான் ஆர்வத்தைச் செலுத்தினேன். பிரகாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண் நான் என்று எனக்கு அருகில் இருக்கும் அழகான மாளிகை களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூறுவார்கள்.

Read more: இரவின் காலடி ஓசை

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel