Lekha Books

A+ A A-
12 Mar

தீர்த்த யாத்திரை

theertha yathirai

ண்மையைச் சொல்லட்டுமா? நான் ஒரு நல்ல மனிதனே இல்லை. என்னிடம் பல பலவீனமான விஷயங்களும் இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த நான் பலமுறை முயற்சித்திருக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை என்பதே உண்மை. இல்லாவிட்டால் என் இரண்டு அல்லது மூன்று நாட்கள் முயற்சியில் நான் வெற்றி பெற்றிருப்பேன். அதற்குப் பிறகு நிச்சயம் நான் தோல்வியையே சந்திப்பேன். சுருக்கமாகச் சொன்னால், நான் காமக் களியாட்டங்களில் விருப்பம் உள்ளவன். சுவையான உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடக்கூடியவன். மது அருந்தக்கூடியவன். ஆடம்பரப் பிரியனும், பணக்காரனுமான ஒரு மோசமான கிழவன். எனக்கு இப்போது அறுபத்தைந்தாவது வயது நடந்து கொண்டிருக்கிறது. 

Read more: தீர்த்த யாத்திரை

12 Mar

நிர்வாணத் தம்புரான்

nirvana-thampuran

சுராவின் முன்னுரை

ம்.முகுந்தன் (M.Mukundan) மலையாளத்தில் எழுதிய ‘நக்னனாய தம்புரான்’ என்ற புதினத்தை ‘நிர்வாண தம்புரான்’ (Nirvaana Thampuran) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

குஞ்ஞிகிருஷ்ணன் அந்த ஊருக்கே கடவுளைப் போன்றவர். அவர் மீது பெண்களுக்கு அப்படியொரு மதிப்பு! எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத அவரை ஊரே போற்றுகின்றது. அப்படிப்பட்ட அந்த நல்ல மனிதர் லட்சுமி என்ற பெண்ணிடம் மாட்டிக் கொள்கிறார். அந்தச் சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா?

Read more: நிர்வாணத் தம்புரான்

12 Mar

வானம்

vanam

சுராவின் முன்னுரை

கழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) எழுதிய ‘ஆகாசம்’ (Aakaasam) என்ற புதினத்தை ‘வானம்’ (Vaanam) என்ற பெயரில் நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியில் 1912-ஆம் ஆண்டில் பிறந்த சிவசங்கரப் பிள்ளை, 1935-ஆம் ஆண்டிலிருந்து 15 வருடங்கள் அம்பலப்புழை நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றி இருக்கிறார்.

Read more: வானம்

12 Mar

வாழ்க்கை அழகானது- ஆனால்...

valkai alaganathu - aanal...

சுராவின் முன்னுரை

1961-ஆம் ஆண்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakzhi Sivasankara Pillai) எழுதிய புதினம் இது. தகழியின் படைப்பு என்றாலே அதில் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை. அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், துயரங்கள் – இவை அனைத்தும் மண் வாசனையுடன் இருக்கும். அந்த விஷயங்கள் இந்த புதினத்திலும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

Read more: வாழ்க்கை அழகானது- ஆனால்...

12 Mar

உத்தராயணம்

uttharayanam

சுராவின் முன்னுரை

லையாளத்தின் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவரான ஆனந்த் (Anand) எழுதிய ‘உத்தராயணம்’ (Utharayanam) புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். 1936-ஆம் ஆண்டில் பிறந்த ஆனந்தின் முழுப் பெயர் பி.சச்சிதானந்தன். சிவில் எஞ்ஜினியரிங் பட்டதாரியான இவர் போர்பந்தர், வங்காளம் தொடங்கி இந்தியாவின் பல இடங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

Read more: உத்தராயணம்

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel