Lekha Books

A+ A A-
12 Mar

குஞ்ஞம்மாவும் நண்பர்களும்

kunjamavum nanbargalum

சுராவின் முன்னுரை

லையாள எழுத்துலகில், குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புகளை எழுதிப் புகழ் பெற்ற உறூப் (Uroob) எழுதிய ஒரு புதினத்தை ‘குஞ்ஞம்மாவும் நண்பர்களும்’ (Kunjammavum Nanbargalum) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். பொன்னானிக்கு அருகிலுள்ள பள்ளிப்புரம் கிராமத்தில், 1915-ஆம் ஆண்டு பிறந்த உறூப்பின் உண்மைப் பெயர் பி.சி.குட்டிகிருஷ்ணன்.

Read more: குஞ்ஞம்மாவும் நண்பர்களும்

12 Mar

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது

en thathavukku oru yanai irunthathu

சுராவின் முன்னுரை

வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதிய பல படைப்புகளை இதற்கு முன்பு நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவ்வரிசையில் நான் மொழிபெயர்த்திருக்கும் இன்னொரு மிகச் சிறந்த புதினம் ‘என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ (Enn Thaathaavukku oru yaanai irundhathu).

இதில் கதாநாயகியாக வரும் குஞ்ஞுபாத்தும்மாவையும், அவளுடைய அன்னையையும் யாரால் மறக்க முடியும்?

Read more: என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது

10 Mar

செங்கல்லும் ஆசாரியும்

sengallum aasarium

எம்.ஏ. மலையாளம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சில மாதங்கள் ஆன பிறகும் வேலை எதுவும் கிடைக்காததால், பாபு, மெத்ரானச்சனைப் பார்க்கத் தீர்மானித்தான். முதலில் அவன் அம்மாவின் மூத்த சகோதரியைப் போய்ப் பார்த்தான். அந்த மூத்த அக்காவின் இளைய மருமகன் திருமணம் செய்திருந்தது மெத்ரானச்சனின் இரண்டாவது தங்கையின் மூத்த மகளை.

பெரியம்மா சொன்னாள்: "நான் அம்மாக்கிட்ட சொல்லி, உன் வேலை விஷயமா ஏற்பாடு பண்ணச் சொல்றேன். சரி... நீ போ... வேலை கெடைச்ச பிறகு எங்களுக்குக் கெட்ட பெயர் வராமப் பார்த்துக்கோ. அதை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சுக்கோ.''

பாபு சொன்னான்: "அதென்ன பெரியம்மா அப்படிச் சொல்றீங்க? என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லியா?''

Read more: செங்கல்லும் ஆசாரியும்

10 Mar

பருந்துகள்

parunthugal

வள் முதல் தடவையாக அந்தப் பருந்தைப் பார்த்தபோது அது ஆகாயத்தில், கடலுக்கு மிகவும் மேலே அந்த அடர்த்தியான நீலத்தில் மெதுவாக வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய மனதிற்குள் கடுமையான ஒரு வெறுப்பு திடீரென்று வந்து நிறைந்தது. அதற்கான காரணங்களை அவள் தேடவில்லை. காரணங்களைத் தேடக்கூடிய ஒரு குணம் அவளிடம் இல்லாமலிருந்தது.

Read more: பருந்துகள்

10 Mar

யானைவாரியும் தங்கச் சிலுவையும்

yanai-vaarium-thanga-siluvaium

டவுளின் அருள் சேர்த்துச் சொல்கிறேன். இந்த ஊரில் இரண்டு யானைகள். சாந்தங்கேரி மனை வகையைச் சேர்ந்தது. ஒன்றின் பெயர் கொச்சு நீலாண்டன். இன்னொன்றின் பெயர் பாருக்குட்டி. இரண்டு யானைகளுமே ஊரில் வாழும் மக்களின் அன்புக்குப் பாத்திரமானவை.

கொச்சு நீலாண்டன் பெரிய போக்கிரி. நிற்கும் போதே பந்தாவாக இருக்கும். பலமான இரண்டு நீண்ட வெள்ளைத் தந்தங்கள் முன் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும். இரண்டு தந்தங்களின் நுனியும் ஊசிபோல் இருக்கும். உலகத்தில் நித்தமும் நடக்கும் செயல்களில் ஏதாவது அவனுக்குத் தொந்தரவு தருவது மாதிரி தோன்றிவிட்டால் அவ்வளவுதான்...

Read more: யானைவாரியும் தங்கச் சிலுவையும்

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel