குஞ்ஞம்மாவும் நண்பர்களும்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 5969
சுராவின் முன்னுரை
மலையாள எழுத்துலகில், குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புகளை எழுதிப் புகழ் பெற்ற உறூப் (Uroob) எழுதிய ஒரு புதினத்தை ‘குஞ்ஞம்மாவும் நண்பர்களும்’ (Kunjammavum Nanbargalum) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். பொன்னானிக்கு அருகிலுள்ள பள்ளிப்புரம் கிராமத்தில், 1915-ஆம் ஆண்டு பிறந்த உறூப்பின் உண்மைப் பெயர் பி.சி.குட்டிகிருஷ்ணன்.
இளம் வயதிலேயே சமஸ்கிருதம் கற்ற உறூப் தென்னிந்தியா முழுவதும் எந்தவித லட்சியமும் இல்லாமல் அலைந்து திரிந்திருக்கிறார். பின்னர் கம்பவுண்டர், ஆசிரியர், குமாஸ்தா, பனியன் கம்பெனியின் சூப்பர்வைசர், ‘மங்களோதயம்’ மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் என்று பல வேலைகளையும் செய்திருக்கிறார். ‘ஆகாசவாணி’யில் ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்ட்டாகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் வந்த ‘குங்குமம்’, ‘மலையாள மனோரமா’ வார இதழ்களின் ஆசிரியராக ஆனார். கவிதைகள் எழுதினாலும், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை எழுதியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‘சுந்தரிகளும் சுந்தரன்மார்களும்’ என்ற உறூப்பின் புதினத்திற்கு தேசிய சாகித்ய அகாடெமி விருது (National Sahitya Academy Award) கிடைத்தது. தமிழில் அப்புதினம் மொழி பெயர்க்கப்பட்டு 70-களின் பிற்பகுதியிலேயே வந்திருக்கிறது. 40 நூல்களுக்குச் சொந்தக்காரரான உறூப் கதை, வசனம் எழுதிய, ‘நீலக்குயில்’ (Neelakkuyil) திரைப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்ற நற்பெயரைப் பெற்றது. ‘மலையாள மனோரமா’வின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, 1979-ஆம் ஆண்டில் உறூப் மரணத்தைத் தழுவினார். ஆனால் அவரது எழுத்து இறவா வரம் பெற்றது என்பதை இந்நாவலைப் படித்ததும் நீங்கள் நம்புவீர்கள்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,