Lekha Books

A+ A A-

வாழ்க்கை அழகானது- ஆனால்...

valkai alaganathu - aanal...

சுராவின் முன்னுரை

1961-ஆம் ஆண்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakzhi Sivasankara Pillai) எழுதிய புதினம் இது. தகழியின் படைப்பு என்றாலே அதில் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை. அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், துயரங்கள் – இவை அனைத்தும் மண் வாசனையுடன் இருக்கும். அந்த விஷயங்கள் இந்த புதினத்திலும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

பெண்ணை மையப் பாத்திரமாக வைத்து எழுதும்போது, அவள்மீது தகழி கொள்ளும் ஈடுபாட்டையும், அவளின் துன்பம் கண்டு அவர் மனம் வருந்துவதையும், அவளின் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகுவதையும் புதினம் முழுக்க நம்மால் காண முடிகிறது. எத்தனையோ வருடங்கள் கடந்தோடிய பிறகும் தகழி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இவைதான்.

இந்நாவலின் நாயகியான கவுரியும், லாக் அப்பில் அவளுடைய ‘அக்கா’வாக வரும் குட்டியும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

புதினத்தின் இறுதிப் பகுதியைப் படித்தபோதும், மொழி பெயர்த்தபோதும் என் கண்கள் பனித்ததென்னவோ உண்மை. அதே நேரத்தில்- கவுரியை என் மனம் பெருமையுடன் நினைத்துப் பார்க்கவும் செய்தது. புதுமையான முடிவு... இக்கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதை உணர்வீர்கள்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel