Category: மர்ம கதைகள் Written by சித்ரலேகா
"இந்த தடவையும் உன் பொண்டாட்டி பெண் குழந்தை பெத்தாள்னா என் சொத்துக்கள் எல்லாத்தையும் தர்மத்துக்கு எழுதி வச்சுடுவேன். எனக்கும் வயசாகிட்டே போகுது... திட்டவட்டமா உயில் எழுதி வச்சுட்டு மண்டையைப் போட்டாத்தான் என் கட்டை வேகும். சொல்லிட்டேன்."
சிங்கம் போல் கர்ஜித்த அப்பாவைப் பார்த்து தலை குனிந்து நின்றான் பிரசாத்.
Category: மர்ம கதைகள் Written by சித்ரலேகா
சென்னை நகரின் அடுக்குமாடி வளாகங்களிலிருந்து, விடுபட்டு அழகாக காட்சி அளித்தது அந்த வீடு. சிறிய வீடு எனினும் தனி வீடு! பழைய காலத்து வீடு என்பதால் கதவுகள் செட்டிநாட்டு வீடுகளில் உள்ளது போல் பழமையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு முன்புறம் காணப்பட்ட முற்றம் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தது. அங்கே அமர்ந்து செய்தித்தாள் படித்தபடி காஃபி குடிப்பது ஒரு சுகம். கால்களை நீட்டியபடி களைப்பு நீங்க, ஓய்வு எடுப்பது ஒரு சுகம்.
Category: மர்ம கதைகள் Written by சித்ரலேகா
அரவிந்த் மருத்துவமனை, தூய்மையையும் சேவை மனப்பான்மையையும் தனக்குள் நிறைத்துக் கொண்ட புத்துணர்வுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வெண்புறாக்கள் போன்ற நர்சுகள் தங்கள் பணிகளில் கவனமாக ஈடுபட்டிருக்க, வெள்ளை கோட் அணிந்த டாக்டர்கள் சுறுசுறுப்பாக நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
"அட என்னம்மா, நீ சீக்கிரம் வா, சீட்டு எழுதற இடத்துல போய் பேரைக் குடுக்கணும்" அங்கே வந்த ஒரு பெரியவர், தயக்கமாய் நின்ற அவருடைய மகளைத் துரிதப்படுத்தினார்.
Category: மர்ம கதைகள் Written by சித்ரலேகா
'வெண்ணிலா' ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்! பெயருக்கேற்றபடி, நீல வானத்தில் பளிச்சிடும் நிலவு போல் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது. இரவின் இருளில் ஒளிவிடும் நிலா போல மிக அழகாக காட்சி அளித்த 'வெண்ணிலா' ஹோட்டலுக்குள் இரவு நேரப் பறவைகள், ஜோடிகளாகவும், தனியாகவும் நுழைந்து கொண்டிருந்தனர்.