Category: புதினம் Written by சுரா
சுராவின் முன்னுரை
வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammed Basheer) மலையாளத்தில் எழுதிய 'ப்ரேம லேஹனம்' நாவலை 'காதல் கடிதம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
இந்தக் கதை எம்.ஜி. சோமன், ஸ்வப்னா நடிக்க மலையாளத்தில் திரைப்படமாக வந்திருக்கிறது.
ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்க கேசவன் நாயர் வருகிறார். அந்த வீட்டின் சொந்தக்காரரின் மகள் சாராம்மா அவரிடம் தனக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி கேட்கிறாள்.
ஒரு மாதம் கழித்து, அவளுக்கு தான் ஒரு வேலை பார்த்து வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.
Category: புதினம் Written by சுரா
சுராவின் முன்னுரை
நோபல் பரிசு (Nobel Prize) பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) எழுதிய Old man and the Sea நாவலை 'கிழவனும் கடலும்' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் கிழவனின் அனுபவங்களையும், தளராத முயற்சியையும், தன்னம்பிக்கை குணத்தையும், போராடி வெற்றி பெறக்கூடிய உயர்ந்த மனநிலையையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த நாவல் இது.
Category: புதினம் Written by சுரா
ஒரு கிராமத்தின் பாதையோரம் இருக்கும் வீட்டின் வாசற்படியில் மாலை நேரத்தில் பரிதாபத்தை வரவழைக்கும் ஒரு குரலைக் கேட்கலாம்.
“அம்மா, ஏதாவது தாங்க...''
அந்த வீட்டில் இருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது. திண்ணையில் குத்து விளக்கிற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு கடவுள்களின் பெயர்களைக் கூறிக் கொண்டிருந்த குழந்தைகளின் கவனம் அந்தப் பக்கமாகத் திரும்பியது. நாய் முன்னோக்கித் தாவ முயற்சித்த வாறு குரைத்துக் கொண்டிருந்தது.
Category: புதினம் Written by சுரா
சுராவின் முன்னுரை
காக்கநாடன் (Kakkanadan) எழுதிய மாறுபட்ட நாவலான ‘அபிமன்யு’ (Abhimanyu) வை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
காக்கநாடனின் முழுப் பெயர் ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன். 1935-ஆம் ஆண்டில் பிறந்த அவர் இரண்டு தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957-ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்கன் தென்னக ரெயில்வேயிலும், 1961-லிருந்து 1967 வரை ரெயில்வே அமைச்சரகத்திலும் பணியாற்றினார்.