Lekha Books

A+ A A-

விழி மூடி யோசித்தால்... - Page 22

Vizhi Moodi Yosithaal

26

     ங்களாவின் வாசலில் காத்திருந்து, மிதுனாவை வரவேற்றார் அனுசுயா.

     “வாம்மா மிதுனா... உன் அம்மா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உங்க அப்பாவுக்கு இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா?”

     “எல்லாரும் நல்லா இருக்காங்க... அப்பா, ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு இப்போ பரவாயில்லை.’’

     “சரி மிதுனா... நீ என்ன சாப்பிடறே? சூடா காபி, டீ, ஹார்லிக்ஸ்... என்னம்மா வேணும்?”

     “இப்போ எனக்கு எதுவும் வேண்டாம்..”

     “சரிம்மா, நீயும் ஜெய்சங்கரும் உங்க ரூமுக்குப் போங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருங்க.  நான் போய் வேலை செய்றவங்களுக்கு  என்னென்ன வேலைகள்னு சொல்லிட்டு, உன்னைக்  கூப்பிடறேன். மதிய சாப்பாட்டுக்கு என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்? உனக்குப் பிடிச்சதா சொல்லு மிதுனா....!”

     “எ... எ... எனக்கு...”

     “தயங்காம சொல்லும்மா... என்ன சமைக்கச் சொல்லலாம்....?”

     “அ... அ... அது வந்து...” மிதுனா சகஜமாகப் பேசத்தயங்குவதைக் கவனித்த ஜெய்சங்கர், நிலைமையைச் சமாளிக்க முன் வந்தான்.

     “அம்மா, மொச்சைப் பயித்துக் குழம்பு, அப்பளம், முட்டை ஆம்லெட், அவரைக்காய் பொரியல் பண்ணச் சொல்லுங்கம்மா....”

     “அட... நீ என்னப்பா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு சொல்றே? தடபுடலா சிக்கன் பிரியாணி தந்தூரி, முட்டை மசாலா செய்யச் சொல்லுங்கம்மா....’’

     “அட... நீ என்னப்பா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு சொல்றே? தடபுடலா சிக்கன் பிரியாணி, தந்தூரி, முட்டை மசாலா செய்யச் சொல்லலாம்னு பார்த்தா... மொச்சைக் கொட்டை... துவரங்காய்னு மெனு கொடுக்கிறே?”

     “ப்ளீஸ்மா... எனக்கு இன்னிக்கு வெஜிடேரியன்  சாப்பாடுதான் வேணும்மா. ஹெவியான சாப்பாடு இன்னிக்கு வேண்டாம்மா... ப்ளீஸ்....!”

     “சரிப்பா... நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போங்க..”

     “சரிம்மா....”

     ஜெய்சங்கர், மாடி அறைக்குப் போவதற்காகப் படிக்கட்டுகளில் ஏறினான். அவனைப் பின் தொடர்ந்தாள் மிதுனா.

27

     ட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தையின் மீது ஒரு அழகிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.

     அறை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. பத்து நிமிடங்கள்  வரை எதுவும் பேசாமல் இருந்த ஜெய்சங்கர், பேச ஆரம்பித்தான்.

     “மிதுனா... உங்கம்மாட்ட பேசினியா? என்ன சொன்னாங்க்க?”

     “என்ன சொல்வாங்க? பெண்ணைப் பெத்த பாவியாயிட்டேனேன்னு பரிதவிச்சாங்க....”

     “மிதுனா... ஸாரி....”

     “உங்க ஸாரி யாருக்கு வேணும்? உங்க அம்மா மேலே எவ்வளவு பாசம் வெச்சிருக்கீங்களோ... அதே போலத்தான்  நானும், என் அம்மா மேலே உயிரையே வெச்சிருக்கேன். மகள், போற இடத்துல ‘சந்தோஷமா வாழ்வா’ன்னு நம்பி,  நிம்மதியா. இருந்தாங்க. அந்த நிம்மதியிலே மண்ணை அள்ளிப் போட்டாச்சு...”

     “உன் கோபம் நியாயமானது மிதுனா. ஆனால், உங்கம்மா என்ன சொன்னாங்கன்னு நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?”

     “தெரிஞ்சுக்கலாம்தான். அதுக்கு முன்னால இன்னொரு முக்கியமாக விஷயம் தெரிஞ்சுக்கோங்க. நீங்க அவசரத்தாலி கட்டின அந்தப் பொண்ணோட சொந்தக்கார் அந்தக் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணணும்னு வற்புறுத்தினார்னு சொன்னீங்கல்ல? அப்போ அதுக்கும் நீங்க மயங்கப்போய் அந்தக் காரியத்தைச் செஞ்சிருந்தா... என்ன ஆகி இருக்கும் தெரியுமா?

     அதுக்கப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சு அவங்க கேஸ் கொடுத்தா... நீங்க ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி இருக்கும். உங்கம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து, அதிலே இருந்து அவங்க மட்டும் பிழைக்கலை... நீங்களும்தான் ஜெயில் தண்டனையில் இருந்து பிழைச்சிருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க... உங்களைப் பெட்டிப்  பாம்பாய்ப் பிடிச்சு வெச்சு, அடைச்சு வெச்சு.. தாய்பாசம்கிற கோட்டைக்குள்ள முடக்கி வெச்சு... என் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிட்டாங்க.

     இதுக்கு, விதி சொல்லப்போற பதில் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனால், கெட்ட விஷயத்துலேயும் நல்ல விஷயம்கிற மாதிரி... என்னோட மனசுலேயும், எங்கம்மா மனசுலேயும் நீங்க மோசமானவர்ங்கிற எண்ணம்  வரலை. நீங்க ஒழுக்கமான வராத்தான் இருப்பீங்கங்கிற ஒரு அனுமானம் எங்க மனசுல இருக்கு. ஆனாலும் எதையும் ஆதாரப்பூர்வமாகத் தெரிஞ்சுக்கணும் இல்லியா? அதனால என் அம்மா சொன்னபடி நான் பெங்களூரு போகணும். நீங்க வரவேண்டாம்...”

     குறுக்கிட்டுப் பேசினான் ஜெய்சங்கர்.

     “மிதுனா... நீ மட்டும் தனியாகப் பெங்களூரு போகப் போறியா...?”

     ஏளனமாகச் சிரித்தாள் மிதுனா.

     “பெண்கள் ராக்கெட்ல போய் வெற்றிக்கொடி பிடிக்கிற காலம் வந்தாச்சு. இதோ... இங்கே இருக்கிற பெங்களூரு போறதுக்குத் துணை வேணுமா....?”

     “அதுக்கு இல்லை மிதுனா, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னுதான் கேட்டேன்.”

     “எனக்கு ஹெல்ப் பண்ண பெங்களூருல ஆட்கள் இருக்காங்க. ஐ மீன்... என்னோட பிரெண்ட், அவளோட ஹஸ்பெண்ட், ரெண்டுபேரும் இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க...’’

     முகத்தில் அடித்தாற் போல மிதுனா பேசியதும் ஜெய்சங்கரின் முகம் வாடிப் போயிற்று.

     இதைக் கண்ட மிதுனா, ‘ஏடா கூடமா எதையாவது செஞ்சுட்டு எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி இந்த முகம். இவர் உண்மையிலேயே அப்பாவியா? இல்லைன்னா பாவியா? ஒண்ணும் புரியலை!’ இவ்விதம் மனதிற்குள் நினைத்தாள்.

     “என்ன மிதுனா... ஏன் திடீர்னு ஒண்ணுமே பேசாம இருக்கே... ? பெங்களூரு போய் என்ன செய்யப்போறேன்னு தெரிஞ்சுக்கலாமா?”

     “ம்... கண்டிப்பாக உங்களுக்குத் தெரிஞ்சே ஆகணும். ஒரு பொண்ணுக்கு மணவாழ்க்கையிலே கஷ்டம் வந்துட்டா... அவளோட துன்பமான அனுபவம் என்ன...? வேதனை என்ன...? எத்தனை மனச்சோர்வு...? அத்தனைக்கும் காரணமான நீங்க... தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். நான் போய் என்னோட பிரெண்ட் கார்த்திகாவைப் பார்த்து, அவளோட உதவியோட... நீங்க தங்கி இருந்த அபார்ட்மென்டுக்குப் போய், விசாரிக்கணும். அங்கே நான் என்ன தெரிஞ்சுக்கிட்டேனோ... அதுக்கப்புறம்தான் அதை வேச்சுத்தான் யார் மேலே என்ன தப்புன்னு தெரிஞ்சுக்க முடியும். அந்த விசாரணைதான் என் கேள்விக்குறியான என் மண வாழ்க்கைக்கு ஒரு விடை கொடுக்கும்.’’

     “என் மேலே எந்தத் தப்பும் இல்லை மிதுனா. நீ சொன்ன  மாதிரி சட்டச்சிக்கல்ல மாட்டிக்கிறாப் போல நடந்துருச்சே தவிர, நான் என் மனசார எந்தத் தப்பும் பண்ணலை...’’    

     “எனக்கும் நீங்க தப்பு பண்ணி இருக்க மாட்டீங்கங்கிற நம்பிக்கை அறுபது சதவிகிதம் இருக்கு அதனாலதான் இந்தப் பெங்களூர் விஜயம். மூணு மாச அவகாசம் எல்லாமே... இல்லைன்னா நான் உங்களுக்கு டாட்டா சொல்லிட்டு... என் வழியைப் பார்த்துக்கிட்டு, போய்க்கிட்டே இருப்பேன். மணமுறிவு, தம்பதி பிரிவு இதெல்லாம் இப்போ சகஜமாகிட்ட இன்றைய கால கட்டத்துலே... அந்த முடிவு அவசரத்துலேயும், ஆத்திரத்திலேயும் எடுக்கப்பட்டதா இருந்துடக் கூடாதுன்னு மட்டுமில்லை... அது என் பிறந்த வீட்டுக் குடும்பத்தையும் பாதிக்கும்கிறதும் ஒரு காரணம்.

     “இன்னோரு முக்கியமான காரணம் என்னன்னா... உங்கம்மாவோட உடல்நலம்... அதைப் பத்தி நீங்க எடுத்துச் சொல்லியும் நம்ம பிரச்னை பத்திப் பேசி அவங்களுக்குத் தெரிஞ்சு, அவங்களோட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை உருவாகிடக் கூடாதுங்கிற மனித நேயமும்தான்...”

     “தேங்க்ஸ் மிதுனா... ஒரு மனித உயிருக்கு நீ கொடுக்கிற இந்த உன்னதமான உணர்வுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்றேன். எங்கம்மா ஒரு விஷயத்தைத் தெளிவு பண்ணிக்கிட்டப்புறம்தான் உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற முயற்சியிலே இறங்கினாங்க...”

     “தெளிவு படுத்திக்கிட்டாங்களா? அது என்ன அப்படி ஒரு பெரிய விஷயம்?”

     “ பெங்களூருல... அந்தப் பொண்ணை நீ காதலிச்சியா?’ன்னு அம்மா என்கிட்டே கேட்டாங்க. நான் இல்லவே இலலைன்னு சொன்னப்புறம்தான் கல்பனா ஆன்ட்டி வீட்டுக் கல்யாணத்துல உன்னைப் பார்த்து, எனக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணத்தையும் நடத்திட்டாங்க...”

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel