விழி மூடி யோசித்தால்... - Page 45
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6527
“வினய்... கொஞ்சம் ரோட்டையும் பார்த்துக் கார் ஓட்டினா நல்லது...”
“அதென்னவோ சூரஜ் பாஸ்... பொண்ணுகளைப் பார்த்தாலே கண் அப்படியே பின்னாடியே போகுது...”
“ம்...போகும் போகும்... கண்ணை நோண்டிடுவேன் படவா...!”
“ஸாரி சூரஜ் பாஸ். பழக்க தோஷம்.”
அவர்கள் கார் விரைந்து சென்றது.
பிரச்னைகள் தீர்ந்து, ஜெய்சங்கர் நல்லவன் என்று அறிந்து கொண்டு நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்ட மிதுனா, மிகவும் மகிழ்ந்தாள்.
சாரதாவிடம் சொல்லி அவரையும் மகிழ்ச்சிப்படுத்தினாள்.
ஜெய்சங்கர் பெங்களூரில் இருந்து வருவதற்காகக் கார்த்திருந்தாள்.
அன்றைய இரவு, மிதுனா தன்னை மிகவும் அழகுபடுத்திக் கொண்டாள்.
மிதுனாவின் மூச்சுக்காற்று தன் மீது படும் அளவு, அவள் நெருக்கமாகத் தன் அருகே அமர்ந்தது அவனுக்கு இன்பமாக இருந்தது. மிதுனாவிடம் கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பித்தான்.
“மிதுனா... தினமும் நடந்த பிரச்சனைகள் எப்போது முடியுமோன்னு என் கண்களை மூடி யோசிக்கும்போது, என் கண் முன்னாலே உன்னோட உருவம்தான் எனக்குத் தெரிந்தது. என்னை அறியாமலே உன்னை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ கொடுத்த மூணு மாசக் கெடு முடிந்திடக் கூடாதுன்னு துடிச்சேன். நான் நினைச்சதை விட ரொம் சீக்கிரமாகவே நிலைமை சரியாகி, நீ எனக்குக் கிடைச்சுட்டே...”
“உங்க மேலே இருந்த நம்பிக்கை எனக்கு நல்லதை எடுத்துக் காட்டிச்சு. கடவுளுக்கு நன்றி சொல்லணும்.”
“நிச்சயமாக, அது சரி, நாளைக்கே நாம ரெண்டு பேரும் பெங்களூரு போறோம்...”
“ம்... நம்ம ஹனிமூன், பெங்களூருலதான்...!” என்று கூறியபடி மிதுனாவை அணைத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.
‘விழி மூடி யோசித்தால்... அங்கேயும் வந்தாய் பெண்ணே... பெண்ணே...!’
திரைப்படப் பாடல் எங்கேயோ ஒலித்தது.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,