Lekha Books

A+ A A-

கையெழுத்து - Page 16

kaiezhuthu

“ஒண்ணுமில்ல...” - அவர் எதையோ மறைக்க முயற்சிப்பதைப்போல சொன்னார்.

அதற்குள் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் அவர் மேஜை மீது இருந்து அந்த கவரை எடுத்து வைத்திருந்தார்.

ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், ராதிகா திகைத்துப் போய் நிற்க, அவர் அந்தக் கடிதத்தை எடுத்து பல துண்டுகளாகக் கிழித்து, சுருட்டி ஒன்று சேர்த்து ஜன்னல் கம்பிகளுக்கு நடுவில் இருந்த இடைவெளி வழியாக அவற்றை வெளியே எறிந்தார்.

ராதிகா கூறுவதற்கு எதுவும் இல்லை. தொண்டை வறண்டு போயிருந்தது.

கே.ஆர்.கே. திரும்பி சுவரைப் பிடித்துக் கொண்டார். அவருடைய முகம் அப்போது இருட்டில் இருந்தது.

“மகளே போய்ப் படு. இனிமேல் நான் கொஞ்சம் உறங்கணும் சுகமாக...”

அப்போது அவருடைய குரல் முற்றிலும் உணர்ச்சிகளற்று இருந்தது.

தொடர்ந்து அவர் தன் கால்களை இழுத்தவாறு படுக்கையறையை நோக்கி நடந்தார்.

ராதிகா அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, திடீரென்று வெளிச்சம் வந்தது. பெரிய ஒரு சத்தத்துடன் மின் விசிறிகள் சுழல ஆரம்பித்தன.

ராதிகா சிம்னி விளக்கை ஊதி அணைத்தாள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பயணம்

பயணம்

September 24, 2012

பிசாசு

பிசாசு

November 12, 2013

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel