
கிராமத்தின் ஒரு மூலையில், வாத்துக்களை வலைபோட்டு இருக்கும்படி செய்துவிட்டு அருகிலேயே சிதிலமடைந்து காணப்பட்ட ஒரு கடை அறையில் தரையில் விரிக்கப்பட்ட பாயில் இரண்டு சகோதர்களும் உறங்கினார்கள்.
பாதி இரவு தாண்டியிருக்கும். பூனை வந்தது. வாத்துக்கள் கண்விழித்து கத்துவதை எதிர்பார்த்திருந்த தம்பி கல்லை எடுத்து எறிந்தான். டார்ச் விளக்குடன் வலையைச் சுற்றி நடந்து பரிசோதித்தான். எல்லாம் முடிந்து வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. வாலிபம் பொங்கித் துடித்துக் கொண்டிருந்தது. நிரந்தரமாக இழந்துவிட்டோம் என்று நினைத்திருந்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் கொலைக் கயிற்றிலிருந்து திரும்பி வந்த நேரத்தில் கிடைத்தபோது உண்டான ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்த ஆனந்தம் இரண்டு மடங்காக அதிகரித்திருத்தது. உலகத்தில் வேறு எந்த ஒரு ஆணும் அறியாத அளவிற்கு அதன் மதிப்பு என்ன என்பதை பைலி நன்கு அறிந்திருந்தான். அவன் மனதில் அப்போது வேறு சிந்தனையே இல்லை.
வயல்களில் சேறு நிறைந்த நீரில் நாற்று நட்டுக் கொண்டிருக்கும் புலையப் பெண்கள் உடுத்தியிருக்கும் முண்டின் பின்பகுதியில், அவர்கள் குனியும்போது மறையும், நிமிரும்போது விழும் இடைவெளியை விட்டு அவனுடைய கண்கள் நீங்கவே நீங்காது. பொழுது புலரும் நேரத்தில் இயற்கையின் அழைப்பை நிறைவேற்றுவதற்காக ஒரு மைல் தூரம் நடந்து சென்று அங்கு ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்கால் கரையில் அடர்ந்திருக்கும் செடிகளுக்குள் அவன் தன்னை மறைத்துக் கொள்வான். ஓடிக் கொண்டிருக்கும் நீரில் காட்சி தரும் நிர்வாணமான பின்பகுதிகளும், உடம்பைத் தேய்த்துக் குளிக்கும்போது தெரியும். அப்போதுததான் முளைத்துக் கொண்டிருக்கும் மார்புக் கண்களும் நினைவுகளாக வந்து இரவில் அவனை உறங்கவிடாமற் செய்யும். அவனுடைய அண்ணனுக்கு எல்லாம் தெரியும். எனினும், எதுவும் தெரியாததைப் போல நடித்துக் கொண்டு பேசாமல் திரும்பிப் படுத்திருப்பான்.
“மீனாட்சி எதற்கும் தயார்தான். இந்தத் தாகத்தை முழுமையாகத் தீர்ப்பதற்கான சக்தி மீனாட்சியிடம் இருந்தது. “ஆனா, மகளை மட்டும் பார்க்காதீங்க. நான் உறுதியான குரல்ல சொல்றேன். என் தங்கம்ல... அவளை இந்த வயது வரை ஒரு பொன்னைப் போல பொத்திப் பொத்தி வளர்த்துக் கொண்டு வர்றேன். சாயங்காலம் ஆனபிறகு வழியில எங்காவது ஒரு சைக்கிளோட மணிச்சத்தம் என் காதுல விழுந்ததுன்னு வச்சுக்கங்க, அன்னைக்கு நான் பொண்ணைக் கொன்னுட்டுத்தான் வச்சுக்கங்க, அன்னைக்கு நான் பொண்ணைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அந்த அளவுக்குப் பயத்தோட அவள் வளர்ந்து வர்றா”- கிராமத்து விலைமாதுவின் வியர்வை விழுந்து வளர்ந்த கன்னிப்பெண்.
என் மீனாட்சி... எனக்கு அவள்மேல ஒரே மோகம். வேறொண்ணும் இல்ல. மோகம்... மீனாட்சிக்கு அதெல்லாம் தெரியணும்னு அவசியம் இல்ல. “தந்தை இல்லாத பொண்ணு. போவதாததற்கு என் மகள் வேற... அவளை ஒருத்தன் கூட...”
காமக் கலையின் கடைசி அத்தியாயங்களைப் படிச்சு முடிச்சு தளர்ந்து போய் உறங்க ஆரம்பிக்கிற நேரத்துல மெதுவா என்கிட்ட ஞாபகப்படுத்துவாள். “நான் கல்யாணம் பண்ணாதவன். எனக்கு ஒரு பெண் வேணும். எங்கே இருந்தாவது கட்டாயம் எனக்கு ஒருத்தி வேணும். அது உன் மகளா இருந்தாத்தான் என்னன்னு நான் நினைக்கிறேன்”னேன். ஒரு மந்திரம் போல இருந்தது அது. மந்திரத்தை ஒரு தடவை சொன்னால் போதாது. ஒவ்வொரு நாளும் சொல்லிக்கிட்டே இருக்கணும். தினமும் ஆயிரம் தடவைகள் சொல்லணும். உண்றப்போ, உறங்குறப்போ, நீர்ல முங்குறப்போ, முங்கி நீந்துறப்போ, நீதி தளர்றப்போ நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: “இங்க பாரு மீனாட்சி, நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். அவளுக்கு எந்தக் கஷ்டமும் வராம நான் பார்த்துக்குறேன்”னு.
“இங்கே தொட்டு சத்தியம் பண்ணுங்க”- அவள் சொன்னாள். நான் சத்தியம் செய்தேன். “ஏமாற்றமாட்டேன்னு சொல்லுங்க”- அவள் சொன்னாள். சொன்னேன்.
“சத்தியம் பண்ணுங்க”- அவள் சொன்னாள்.
“சத்தியம்.”
“சத்தியம்.”
மீனாட்சி குலுங்கிக் குலுங்கி அழுதாள். என் தெய்வமே!
மழை முடிந்து, நிலவு உதித்துக் கொண்டிருந்த ஒரு இரவு வேளையில், எலும்புகள் நொறுங்கிச் சிதறின. வாயில் இரத்தத்துளிகள்! “ஒண்ணுமில்ல கண்ணு... இனி எதைப் பற்றியும் கவலைப்படாதே” பைலி தேற்றினான். பாரதியின் நிர்வாண உடம்பு அவனை வெறிகொள்ளச் செய்தது. வியர்வை வழிந்து கொண்டிருந்த விளைவுகளில் கண்ணாடியின் மென்மைத்தனம் இருந்தது. ஆவர்த்தனத்தின் முடிவு புதிய ஒரு ஆர்வத்தனத்தில்தான் என்பதை அவன் புரிந்து கொண்டபோது, பொழுது விடிந்துவிட்டது.
வெளியே தாய் அழுதாள்.
உள்ளே போனபோது, மகள் ஒரு கிழிந்த துணியைப்போல, பிணத்தைப் போல, நிர்வாணக் கோலத்தில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு அழுதாள். தாய் சொன்னாள்: “எனக்கு நம்பிக்கை இல்ல. போகுறதுக்கு முன்னாடியே வேண்டியதைச் செஞ்சிட்டுப் போகலைன்னா, நீங்க எங்கே இருந்தாலும் நான் அங்கே வருவேன். மீனாட்சி மனம் கோணிட்டான்னா அதற்குப் பிறகு அவ்வளவுதான்...”
மழை பின்வாங்கியது. நாற்றுகளுக்கு வேர் பிடித்து ஓடினது. பச்சி இலைகள் அவற்றில் முளைத்துப் படரத் தொடங்கின. நாற்றுகளையும் வயல் வரப்புகளையும் விட்டு வாத்துக்கூட்டம் பயணத்தைத் தொடங்கியது. “நான் அங்கே போய் வேண்டியவர்கள்கிட்ட கலந்து ஆலோசனை பண்ணிட்டு அடுத்த மாசம் வர்றேன். எங்க தேவாலயத்துல விவரத்தைச் சொல்லணும். பாரதியை எங்க கூட்டத்துல சேர்க்கணும்ல”? பைலி சொன்னான். அதைக் கேட்டு மீனாட்சி அழுதாள். பாரதி ஈரமற்ற கண்களுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். “அவளுக்குக் குளியல் தவறிடுச்சு... ஒரு மாசம்னு சொல்றீங்க. முடிஞ்சா அதற்கு முன்னாடியே வரப்பாருங்க. ஆளுங்க குசுகுசுன்னு ஏதாவது பேசுறதுக்கு முன்னாடி...” - மீனாட்சி சொன்னாள்.
“கட்டாயம் வர்றேன்.”
உள்ளே அறைக்குள் பாரதியைத் தனியாக அழைத்தான். “ஒரு துணி கூட உடம்புல இல்லாம உன்னை நான் பார்க்கணும். இனி என்னைக்கு இதை மாதிரி பார்க்கப் போறேன். திரும்பி வர்றப்போ வயிறு பெருசாகி...” - பைலி சொன்னான். பாரதி அவன் சொன்னபடி நடந்தாள். ஒரு பொம்மையைப் போல. வெட்கப்படவில்லை. எதிர்ப்புகளும் இல்லை. சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த நிர்வாணமாக பிணம்... உணர்ச்சியற்ற முகம்... “இந்தா... இதைக் கையில வச்சுக்கோ. அம்மாக்கிட்ட சொல்ல வேண்டாம். ஐம்பது ரூபாய் இருக்கு. ஒரு மாசத்துக்குள்ளே ஏதாவது செலவு வரலாம்ல...”- பைலி சொன்னான். பாரதி ரூபாய் நோட்டுக்களைப் பார்க்கவேயில்லை. காலில். தொடைகளில், இடுப்பிலிருந்த முடிச் சுழிகளில், தொப்புளில், மார்புப் பகுதியில், கழுத்தில், உதட்டில், முடியில் முத்தம் கொடுக்கும் கணவனுடைய தாகத்தின் ஆழங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, பாரதியின் கண்கள் நீரால் நிறைந்தன. “நான் பேகட்டுமா, கண்ணு?”- பைலி கேட்டான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook