கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6152
“புஷ்பா எனக்கு ஒரே ஒரு சந்தேகம். எங்க அப்பா நம்ப கல்யாணத்துக்கு நிச்சயமா சம்மதிப்பார்னு நம்பிக்கையோட இந்த கருக மணிகளை என்கிட்டக் குடுத்தனுப்பிச்ச, ஆனா...”
“புரியுதுங்க. அவ்வளவு நம்பிக்கையோட நான் குடுத்தனுப்பிய கருகமணிகளுக்குச் சக்தி இல்லாம போய், நம்ப கல்யாணம் நடக்கலியேன்னு கேட்க வர்றீங்க... உங்க அப்பாகிட்ட நீங்க நம்ம காதலைப் பத்தி சொன்னீங்களா?”
“இல்லை...”
“சொல்லாம எப்படி அவருக்குத் தெரியும், சுசிலாவை நிச்சயம் பண்ணிட்டார்னு பயந்து போய் சொல்லாம விட்டுட்டுட்டீங்க. நீங்க சொல்லி இருந்தா அவர் சம்மதிச்சிருப்பார். என்னோட நம்பிக்கை மாறவே மாறாது.”
“அப்பப்பா... இந்த பெண்களின் மனத்தில் தான் எத்தனை தன்னம்பிக்கை, திடமான கொள்கைகள்!” பிரமித்துப் போனார் சிவலிங்கம்.
அன்றைய நாள் அந்தக் குடும்பத்தின் பொன் நாள். வாழ்க்கையில் ஒரே ஒரு முறையேனும் புஷ்பாவை சந்தித்து விட வேண்டும் என்று துடித்த சிவலிங்கம், புஷ்பாவை சந்தித்தது மட்டுமல்ல, அவரது சொந்தமாகவும் ஆகி விட்டாள்.
சிவலிங்கத்தின் சோகம் மாறி சந்தோஷம் தோன்ற வேண்டும் என்ற எதிர்பார்த்த சுசிலா அவரது மகிழ்ச்சி கண்டு மன அமைதி அடைந்தாள்.
குடும்பத்தின் குலவிளக்காகத் திகழ்ந்து, கணவனின் தங்கையைத் தான் பெற்ற மகள் போல, அன்பு செய்த கல்யாணியும், பண்பே உருவான தியாகுவும் பரவசப்பட்டனர்.
இளைய நிலவான மாலு, தன் களங்கம் மறைந்து பாஸ்கருடன் இணைந்து, அவனது மனைவி என்னும் உரிமையும், பெருமையும் அடைந்தாள். பிரிந்தவர்கள் கூடியதால் அங்கே இன்பமும், இனிமையும் நிறைந்தது.
+Novels
Short Stories
July 31, 2017,
May 28, 2018,
June 3, 2016,
February 13, 2016,