Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 17

Mull mal manasu

11

த்து மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்ட ஒன்பதரை மணிக்கெல்லாம் எம்.டி.வி. பிரிண்டர்ஸ் ஆபீசுக்குப் போனார் ரகுநாத்.

முதலாளி இல்லாத சமயம் போனால்தான் அங்கே வேலை பார்ப்பவர்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லுவார்கள் என்ற அவரது கணிப்பை உண்மையாக்கி இருந்தன அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.

ரிஸப்ஷனிஸ்ட்டிடம் சென்னார். அங்கே வேலை பார்க்கும் மற்றவர்களையும் வரச் சொல்லி, அவளிடம் சொன்னார்.

உஷாவும், ஷீலாவும் வந்தனர்.

அவர்களது முகத்தில் பத்மினி பற்றிய செய்திகளின் பிரதிபலிப்பு தெரிந்தது. ஷீலாவின் அரை குறை ஆடையில் வெளியே தெரிந்த தொப்புகள், ரகுநாத்தை இம்சித்தது.

“நான் இங்கே செக்ரட்ரியா வேலை பார்க்கறேன் ஸார். என் பேர் ஷீலா.” தானே முன் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“உங்க பாஸ் மிஸ்டர் மதனோட மனைவியை யாரோ கொலை முயற்சி செஞ்ச நியூஸை பேப்பர்ல பார்த்திருப்பீங்க. இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? ஐ மீன், அந்தக் கொலை முயற்சிக்கு யார் காரணமா இருக்கும்னு நினைக்கறீங்க?”

“எனக்கு எதுவும் தோணலை ஸார். எங்க எம்.டி.யோட மனைவி ரொம்ப நல்லவங்க. எப்பவாச்சும் இங்கே வருவாங்க. ஃப்ரெண்ட்லியா பழகற டைப்.”

“மிஸ்டர் மதன் எப்படி?”

“அவரும் நல்லவர்தான்... ஆனா...”

“ஆனா... என்ன ஷீலா... சொல்லுங்க. போலீஸ் டிபார்ட்மென்ட் விசாரணைக்கு வர்றப்ப உங்களுக்குத் தெரிஞ்ச உண்மைகளைத் தயங்காம சொல்லுணும்.”

“எங்க எம்.டி. மிஸ்டர் மதன் பெண்கள் விஷயத்துல சபலிஸ்ட்...”

“சபலிஸ்ட்? புது வார்த்தையா இருக்கே?”

“உமனைஸர்ங்கற அடைமொழிக்கு கொஞ்சம் கெளரவம் கூடுதலான வார்த்தைப் பிரயோகம்தான் இந்த சபலிஸ்ட். ‘நான்ஸி, ரீட்டா, அனுஸா, காமினி, மோகினி’ன்னு நிறைய பொண்ணுங்க போன் பண்ணுவாங்க. அவங்க போன் வந்ததும் அன்னிக்கு எந்த புரோக்ராம் இருந்தாலும் மீட்டிங் இருந்தாலும் கான்ஸல் பண்ணிடுவாரு. உடனே கிளம்பி விடுவாரு.”

“ஓகோ... அது சரி, இந்த விஷயத்துக்கும் மதனோட மனைவி கொலை முயற்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”

“அதை நீங்கதான் ஸார் கண்டு பிடிக்கணும்.”

துணிச்சலாய் பேசிய ஷீலாவின் பின்பக்கம் கிள்ளினாள் உஷா. உடனே வாயை மூடிக் கொண்டாள் ஷீலா.

உஷாவிடம் தன் விசாரணையைத் தொடங்கினார்.

“நீங்க...”

“நான் இங்கே சீஃப் அக்கவுண்ட்டண்ட். என் பேரு உஷா. பிரஸ்ஸோட கணக்குகளை நான்தான் பார்த்துக்கறேன். ஷீலா உங்ககிட்ட சொன்ன தகவல்கள் எல்லாம் நிஜம். எங்க எம்.டி.யோட நடவடிக்கைகள்ல கொஞ்ச நாளா சில மாறுபாடுகள் தெரிஞ்சது.”

“மாறுபாடுகள்னா?”

“அவரோட வழக்கத்துக்கு மாறான சில செயல்களை நாங்க கவனிச்சோம். திடீர்னு மூட் அவுட் ஆகிடுவாரு. எந்த போன் வந்தாலும் அவருக்கு கனெக்ஷன் குடுக்கக் கூடாதுன்னு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சாரு. சில சமயம் டேபிள் மேல கவிழ்ந்து படுத்துடுவாரு. கொங்ச நாளாவே ரெஸ்ட் லெஸா இருந்தார். எனக்குத் தெரிஞ்சு, இதுக்கெல்லாம் காரணம் அவரோட பண நெருக்கடிதான் ஸார். இது என்னோட சொந்த அபிப்ராயம். ஏன்னா... பாங்க்ல பணம் போட்டதும் உடனே எடுத்து செலவு பண்ணிடுவாரு. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் பணத்தை தண்ணீரா செலவு பண்ணிட்டு வருவாரு. பேப்பர் ஸ்டோர்ஸ்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் இப்படிச் செலவு பண்ணிட்டதால பேப்பர் ஸ்டோர்ஸ்க்கு லட்சக் கணக்குல பேமெண்ட் சேர்ந்துருச்சு. பேப்பர் ஸ்டோர்ஸ் ஓனர் பிரபாகர் ரொம்ப எரிச்சலாகி தினமும் போன் போட்டு கத்திக்கிட்டிருக்காரு பணத்துக்காக.”

ஷீலா குறுக்கிட்டாள். “ஆமா ஸார். எங்க மாமா நடத்தற பைனான்ஸ் கம்பெனியில கூட என்னை ஏழு லட்ச ரூபா கடனா கேட்டு வாங்கித் தரச் சொன்னார். எங்க மாமா அவ்வளவு பெரிய தொகை தர முடியாதுன்னு சொல்லிட்டார்.”

“ஓ.கே. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கணேஷ்னு ஒரு ஆள் மதனோட மனைவியைக் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினானாமே? இதைப் பத்தி ஏதாவது தெரியுமா?”

“என்ன? மிரட்டலா, இந்த விஷயம் எங்களுக்குத் தெரியாது ஸார்.” ஷீலா சொன்னதும் மற்ற இருவரும் அதை ஆமாதித்தனர்.

“கணேஷ்ங்கறவன் தன்னை மிரட்டினதாக மதனே என்கிட்ட சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை.”

“அது உண்மைதான் ஸார்.” தனக்குப் பின்னால் இருந்து குரல் கேட்டதும் திரும்பினார் ரகுநாத்.

மோகன் நின்றிருந்தான்.

 “நீ யாரு? உன் பேர் என்ன?”

“என் பேர் மோகன். மதன் ஸாரோட பிரஸ்ல அடிக்கற ஸ்டிக்கர்க்கெல்லாம் கம்மிங் பண்ணிக் குடுக்கறது நான்தான் ஸார்.”

“கம்மிங்ன்னா?”

“ஸ்டிக்கர்களுக்கு பின் பக்கம் கம்மிங் செஞ்சாத்தான் ஸ்டிக்கர் ஒட்டும். இல்லைன்னா ஒட்டாது. மதன் ஸாரோட ரெகுலர் ஆர்டர் எனக்குக் கிடைக்கும். இது விஷயமா அப்பப்ப அவரைப் போய் நான் பார்ப்பேன். அன்னிக்கும் அவரைப் பார்க்க போனப்பதான் வழியில அவரோட கார் நிக்கறதைப் பார்த்து நானும் என் டூ வீலரை நிறுத்தினேன்.”

“எந்த ஏரியாவில் நடந்தது அந்த சம்பவம்?”

“தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி கொங்சம் தூரம் தள்ளி ஸார்.”

“சரி, என்ன நடந்ததுன்னு கொஞ்சம் சொல்லு.”

“ஒரு ஆள், மதன் ஸாரை மிரட்டிக்கிட்டிருந்தாரு.”

“என்ன சொல்லி மிரட்டிக்கிட்ருந்தாரு?”

“என் தங்கச்சியை ஏமாத்தி, வேற பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்ட. ஆசை காட்டி மோசம் பண்ணின பாவி. உன்னைப் பழி வாங்கணும்னு துடிக்கறேன். உன் மனைவியைக் கொன்னு உன்னைத் தனி ஆளா பார்க்கணும். அப்பதான் எனக்கு நிம்மதின்னு கோபமா பேசினார்.”

“அப்போ மதன் என்ன ரியாக்ஷன் பண்ணினார்?”

“மதன் ரொம்ப பயந்து போயிருந்தார். மிரட்டின அந்த ஆள் கிட்ட கெஞ்சி கெஞ்சி ஏதோ பேசினார். அந்த ஆள் சத்தமா பேசினதுனால எனக்கு அவர் பேசினது நல்லா கேட்டுச்சு. ஆனா மதன் மெதுவா பேசினதுனால எனக்குத் தெளிவா கேட்கல ஸார். யாரும் பார்த்துடக் கூடாதேங்கற தவிப்புல அவர் சுத்தி, முத்தி பார்த்துக்கிடே ரொம்ப மெதுவாப் பேசினார்.”

“அப்புறம் அந்தப் பேச்சு எப்பிடி முடிஞ்சது?”

“எனக்கு வேற ஒரு இடத்துக்குப் போக வேண்டி இருந்ததுனால நான் அவங்க பேசிக்கிட்டிருந்த இடத்துக்கே போய் மதன் ஸாரைப் பார்த்து பேசினேன். அதனால அவங்களோட பேச்சு அத்தோட நின்னுடுச்சு.”

“மதன் உன்கிட்ட அப்ப என்ன சொன்னார்?”

“நீ போய் பிரஸ்ல இரு. நான் வந்துடறேன்னு சொன்னார். அதுக்கப்புறம் அந்த ஆள் கிட்ட நான் போகணும்னு சொல்லிட்டு மதன் ஸாரும் கிளம்பினார். அப்பவும் அவன்கிட்ட ப்ளஸ் பண்ணித்தான் பேசினார்.”

“அதுக்கு அந்த கணேஷ் என்ன சொன்னான்?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel