Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 18

thilakan endra magaathilagam

இந்த அழகான கரையில் தருவாயா இனியொரு பிறவியை...?

சுரேந்திரநாத திலகன் 1935 – 2012

தமிழில்: சுரா

  • பிறப்பு : டிசம்பர் 8, 1935. முண்டக்கயத்தில்.
  • தந்தை : பாலப்புரத்து கேசவன்
  • தாய்  : தேவயானி
  • கல்வி : சி.எம்.எஸ்.பள்ளி, முண்டக்கயம்
  • எம்.டி.செமினாரி, கோட்டயம்
  • எஸ்.என். கல்லூரி, கொல்லம்
  • படிப்பு காலத்தில் எஸ்.எஃப். (மாணவர் இயக்கம்)-ல் சேர்ந்து பணியாற்றினார்.
  • ஜாதியின் பெயரை எழுதாத காரணத்திற்காக, இன்டர்மீடியட் படிக்கும்போது, கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார் (1954).
  • ‘அவன் கம்யூனிஸ்ட்... எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்’ என்று தொழில் அதிபரிடம் காங்கிரஸ்காரரான தந்தை கூறியதைத் தொடர்ந்து, வேலை இல்லாதவராக ஆனார்.
  • நாடகத்தில் நடித்ததைப் பற்றி கூறியதற்காக, பரிமாறப்பட்ட சாதத்திற்கு முன்னால் தன் அன்னையிடம் சண்டை போட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார் (1955).
  • நடிப்புடன், நாடகங்களில் பாடகராகவும் ஆனார்.
  • கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் ‘முண்டக்கயம் திலகன்’ புரட்சிப் பாடல்கள் பாடினார்.
  • சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு மனைவிகள்.
  • ராணுவத்தில் சேர்ந்தார் (1961). இரண்டு வருடங்கள் கழித்து, தானே அங்கிருந்து வந்துவிட்டார்.
  • நாடக நடிப்பிற்கு மத்தியில் காதலித்த முதல் மனைவியுடன் 
  • 12 வருடங்கள் வாழ்ந்தார். மூன்று பிள்ளைகள் – ஷாஜி, ஷம்மி, ஷோபி.
  • இரண்டாவது மனைவி மூலம் மூன்று பிள்ளைகள் – ஷிபு, சோனியா, சோஃபியா.
  • 32 வருடங்கள் நாடகத் துறையில் வரலாறு படைத்தார். நடித்த முக்கிய நாடக குழுக்கள்: கெ.பி.எ.ஸி., காளிதாஸ கலா கேந்திரம், கோட்டயம் நேஷனல், சங்ஙனாசேரியில் மெட்ரோ, சாலக்குடி சாரதி, சங்ஙனாசேரி கீதா, இடப்பள்ளி பி.ஜெ. தியேட்டர்ஸ்.
  • நாடகத் துறையில் 18 நாடக குழுக்களில் முக்கியமான நடிகராக இருந்தார். பத்தாயிரம் மேடைகள். 43 நாடகங்களை இயக்கினார்.
  • 1996, 2005, 2007 வருடங்களில் இயக்குனர், நடிகர் என்ற நிலைகளில் மாநில நாடக விருது.
  • சங்கீத நாடக அகாடெமி ஃபெல்லோஷிப்.
  • அவசர காலத்தின்போது ‘காளராத்ரி’ என்ற எதிர்க்கட்சி நாடகத்துடன் அரங்கத்தில்.
  • தெய்வத்தையும், மதத்தையும் மறுத்து ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று எப்போதும் பெருமையுடன் கூறிக் கொண்டு திரிந்தார்.
  • பி.ஜெ.ஆண்டனியுடன் கொண்டிருந்த நட்பு, படவுலகிற்குள் கொண்டு வந்தது.
  • முதல் திரைப்படம் : பெரியார் (1973)
  • முதல் திருப்பம்  : யவனிக (1981)
  • சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது  : ருதுபேதம் (1988)
  • சிறப்பு தேசிய விருது  : ஏகாந்தம் (2007)
  • இரண்டாவது சிறந்த நடிகருக்கான மாநில விருது  : யவனிக (1982), யாத்ர (1985), பஞ்சாக்னி (1986), தனியாவர்த்தனம் (1987), முக்தி (1988), காற்றத்தொரு பெண் பூவு (1998)
  • சிறந்த நடிகருக்கான மாநில விருது  : பெருந்தச்சன் (1990), கமனம், சந்தானகோபாலம் (1994)
  • சிறப்பு ஜூரி மாநில விருது (1989)
  • பத்மஸ்ரீ (2008)
  • கடுமையான ‘லாபி’ காரணமாக ‘பெருந்தச்சன்’ படத்தின் நடிப்பிற்காக தேசிய விருது கிடைக்காமற் போனவுடன், ஜூரி மற்றும் ‘அக்னிபத்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற அபிதாப் பச்சனையும் எதிர்த்து அறிக்கை... பேட்டிகள்... (1990)
  • ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்திலிருந்து வெளியேற்றபட்ட காரணத்திற்காக, நெடுமுடி வேணுவிற்கு எதிராக கோபமான வார்த்தைகள்...
  • படவுலகில் மைல் கற்கள் : பெருந்தச்சன், கிரீடம், ஸ்ஃபடிகம், யவனிக, மூணாம் பக்கம், யாத்ர, நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள், ருதுபேதம், நாடோடிக் காற்று, தனியாவர்த்தனம், கமனம், கண்ணெழுதி பொட்டும் தொட்டு, சந்தானகோபாலம், ஏகாந்தம், சந்தேசம், கிலுக்கம், குடும்ப புராணம், நரசிம்ஹம், இந்தியன் ருப்பி, உஸ்தாத் ஹோட்டல்.
  • உடல் நலம் பாதிக்கப்பட்டு, மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ்விற்கு திரும்பி வந்த சம்பவம்... (2000)
  • பிடித்த ரிங் டோன்  : ஈ மனோஹர தீரத்து தருமோ... இனியொரு ஜன்மம் கூடி...
  • திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்களின் அமைப்பான, ‘ஃபெப்கா’வின் ஆணைப்படி, ‘கிறிஸ்டியன் ப்ரதர்ஸ்’ திரைப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். வினயனின் ‘யக்ஷியும் ஞானும்’ என்ற படத்தில் நடித்ததுதான் காரணம். (2010)
  • தன் மீது கட்டுப்பாடு விதித்ததற்காக ஃபெப்காவிற்கும் சூப்பர் ஸ்டார்களுக்கும் எதிராக வாதங்கள்...
  • ‘சினிமாவை வழிபடும் என்னை வெளியேற்றுவதற்கு சில சூப்பர் ஸ்டார்கள் முயற்சிக்கிறார்கள். படவுலகை நாசம் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்’ என்ற அறிக்கை.
  • ‘அறுபது வயது கொண்ட நடிகர்கள் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, பதினெட்டு வயது கொண்ட புதிய நடிகர்களை ரசிகர்கள் கூச்சல் போட்டு அழிக்க பார்க்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு.
  • ‘அம்மா’ என்ற நடிகர் – நடிகைகளின் அமைப்பு விளக்கம் கேட்டு, வரவழைத்திருந்த கூட்டத்தில் ‘இடைவேளை’ பாபுவைப் பார்த்து கேள்வி கேட்டதற்காக, சித்திக் வெளியேற்றுகிறார் (2010). ‘அம்மா’விலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.
  • ‘ஃபெப்கா’வின் கட்டளைப்படி ஸோஹன் இயக்கிய ‘டாம் 999’ என்ற படத்திலிருந்து நீக்கப்பட்டார். 7 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கிடைத்தது.
  • திரைப் படங்கள் எதுவும் இல்லாததால், நாடகத் துறைக்கு மீண்டும் வந்தார். நாடகம் : ஆலப்புழை அக்ஷர ஜ்வாலாவின் ‘இதோ தெய்வங்களுடெ நாடு.’ கதாபாத்திரம் : சூர்யநாராயணன் (2010)
  • ‘அம்மா’ அமைப்பின் விலக்கி வைக்கலுக்கு மத்தியிலும் அலி அக்பரின் ‘அச்சன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
  • நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்ட தீர்மானத்தை ‘அம்மா’ திரும்பப் பெற்றது (2011).
  • ரஞ்சித்தின் ‘இந்தியன் ருப்பி’ திரைப் படத்தின் மூலம் மீண்டும் பட வாய்ப்பு...
  • ஒற்றப்பாலத்தில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் (2012 ஆகஸ்ட் 19)
  • திருசூர் ஜூபிலி மருத்துவமனையில் சிகிச்சை (ஆகஸ்ட் 21, 2012)
  • திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் ஒருமாத காலம் வென்டிலேட்டரில். சிகிச்சைக்குச் செலவான 10.58 இலட்சம் ரூபாய்களையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.
  • இறுதியில் அழைத்த வார்த்தை : ‘அம்மா...’
  • மரணம் : 2012 செப்டெம்பர் 25.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

எலியாஸ்

எலியாஸ்

February 7, 2012

மருதாணி

மருதாணி

February 15, 2012

என் தந்தை

என் தந்தை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel