Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 19

thilakan endra magaathilagam

இனியொரு பிறவி இருந்தால்...

நன்றி: ‘நானா’ வார இதழ்

தமிழில் : சுரா

பின்னணி பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார் தயாரித்து, டாக்டர் சந்தோஷ் செளபர்ணிகா இயக்கும் ‘அர்த்தநாரி’ என்ற திரைப்படம். அரவாணிகளைப் பற்றி எடுக்கப்படும் கதை. இந்த படத்தில் நடிகர் திலகன் ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் பெயர் நாயக். அரவாணிகளின் தலைவி என்பதுதான் அந்த கதாபாத்திரத்தின் இன்னொரு சிறப்பு.

பட்டணம் ரஷீத்தின் ஒப்பனையில் திலகனை அரவாணியாக ஆக்கியிருக்கிறார்கள். கூந்தலை அள்ளி முடித்து, தலை முடியில் பூ சூடி, புடவை அணிந்து வரும் ஒரு பெண் வேடம்... கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே, தென்காசியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்தில் இருக்கும்போது திலகன் சொன்னார்: `ஜகதி ஸ்ரீகுமாரும் மற்றவர்களும் பல திரைப் படங்களிலும் பெண் வேடமிட்டு நடிக்கும்போது, அதே மாதிரி ஒரு கதாபாத்திரத்தைச் செய்ய வேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன். இந்த திரைப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது.’

அரவாணிகளின் கதை கூறும் இந்த திரைப் படத்திற்காக கதாசிரியரும் இயக்குனருமான சந்தோஷ் இப்படி ஒரு வசனத்தை தான் எதற்காக எழுதினோம் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறார்.

‘இனியொரு பிறவி இருந்தால், முழுமையான ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.’

திலகனின் கலையுலகப் பயணத்தில், அவர் இறுதியாக பேசிய வசனம் இதுதான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel