
சுராவின் முன்னுரை
சிறந்த மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான என்.மோகனன் (N.Mohanan) எழுதிய புதினத்தை ‘ஒரு நாள்’ (Oru Naal) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
1933-ஆம் ஆண்டில் பிறந்த மோகனன் மலையாள இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி, கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். பல சிறுகதைகளின் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரரான அவர், ‘இன்னத்தெ மழ’ என்ற புகழ்பெற்ற புதினத்தையும் எழுதியிருக்கிறார். பத்மராஜன் விருது, கேரள சாகித்ய அகாடெமி விருது (Kerala Sahitya Academy Award) போன்றவற்றைப் பெற்றவர்.
1999-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய என் மோகனனின் மிகச் சிறந்த புதினம் ‘ஒரு நாள்.’ தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டே இந்தப் புதினத்தை அவர் எழுதியிருக்க வேண்டும். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்!
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook