Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

திலகன் என்ற மகாதிலகம்

thilakan endra magaathilagam

 சுராவின் கண்ணீர் அஞ்சலி...

நான் மிக உயர்வாக மதிக்கும்

நடிப்புக் கலையின் சிகரத்தைத் தொட்டு

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு

தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு

உயிர்ப்பையும், உன்னதத்தையும் தந்த

திரு.திலகன் அவர்களின் மரணத்தை

என்னால் அவ்வளவு

சாதாரணமாக எடுத்துக் கொள்ள

முடியவில்லை.

நடிகர் திலகம்

திரு.சிவாஜி கணேசன் அவர்கள்

இறந்த நாளன்று நான் எந்த அளவிற்கு

கண்ணீரில் கரைந்திருந்தேனோ,

அதே நிலையில்தான் இப்போது நின்று

கொண்டிருக்கிறேன்.

திலகன் என் மனதில் கூடு கட்டி

வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும்

என் இதயத்திற்குள் கம்பீரமாக

நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அங்கு

நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

திலகனும்தான்...

சாதனைகள் பல புரிந்த

அந்த சாகாவரம் பெற்ற பிறவி கலைஞனுக்கு

என்னுடைய

கண்ணீர் அஞ்சலி...

                    -    சுரா

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version