Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 35

munnera uthavum 365ponmozhigal

341

தன்னுடைய சக மனிதர்களுக்கு

நல்ல செயல்களைச் செய்யாமல்,

மனிதர்கள் கடவுளை அணுகி

எதையும் பெற முடியாது.

***

342

எந்த அர்த்தமும் இல்லாத இடத்தில்,

கெட்ட பெயரை வாங்காதே.

***

343

நீண்ட காலம் வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

வாழ்ந்ததென்னவோ -

ஒரு சிறிய கணம்தான்.

***

344

சாதாரண மனிதர்கள்

பொருட்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

முட்டாள்கள்

மனிதர்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

உயர்ந்த மனிதர்கள்

எண்ணங்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

***

345

நான்

ஏழைகளுக்கு

உணவு தரும்போது

அவர்கள் என்னை

ஒரு துறவி என்று கூறுகிறார்கள்.

ஏழைகளுக்கு

ஏன் உணவு இல்லை

என்று நான் கேட்கும்போது

அவர்கள் என்னை

ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுகிறார்கள்.

***

346

நாம் எல்லோருமே

வாழ்க்கையில்

பல விஷயங்களையும்

தேர்ந்தெடுக்கிறோம்.

ஆனால் -

அவற்றுடன் வாழ்வதுதான்

மிகவும் சிரமமான ஒன்று.

ஆனால்,

அந்த காரியத்தில்

உங்களுக்கு உதவுவதற்கு

யாருமே இருக்க மாட்டார்கள்.

***

347

எந்தவொரு மனிதன்

யாரையுமே நம்பாமல்

இருக்கிறானோ,

அவனை யாருமே

நம்பமாட்டார்கள்.

***

348

வாழ்க்கை என்பது

ஒயினைப் போன்றது.

அதை கொஞ்சமாக சுவைத்தால்

அதனால்

எந்தக் கேடும் இல்லை.

ஆனால்,

புட்டியைக் காலி பண்ண வேண்டும்

என்று நினைத்தால்

ஒரு தலைவலியை நாமே

வரவழைக்கிறோம்

என்று அர்த்தம்.

***

349

தன்னுடைய

மனச்சாட்சியை

முழுமையாக இழந்து விட்டு

ஒரு மனிதன்

முழு உலகத்தையும்

ஆதாயமாக பெற்றாலும்

அதனால் என்ன பயன்?

***

350

இந்த தருணத்தை

நீ

தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம்.

ஆனால்,

இந்தத் தருணம்

உன்னைத்

தேர்ந்தெடுத்து விட்டது.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel