Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 28

munnera uthavum 365ponmozhigal

271

எந்த இடத்தில் சட்டம் தண்டனை

அளிக்காமல் இருக்கிறதோ,

அந்த இடத்தில்

அது செயல்பட முடியாது.

***

272

யார் வாழ ஆரம்பிக்கிறானோ,

அவன் மரணமடையவும்

ஆரம்பிக்கிறான்.

***

273

நேர்மையான முறையில் வாழ்.

நேர்மையான முறையில்

இறப்பாய்.

***

274

மனிதர்கள் குள்ளநரித்தனத்துடன்

இருப்பதைப் பார்ப்பதில்

ஆச்சரியப்படுவதற்கு

எதுவுமே இல்லை.

அதே நேரத்தில் - அவர்கள் எப்படியெல்லாம்

அவமானப்பட்டு நிற்கிறார்கள்

என்பதைப் பார்க்காமல்

இருக்கிறோமே என்பது

பெரும்பாலும் ஆச்சரியப்படக்

கூடிய விஷயமே.

***

275

நூல்களை படிப்பதை விட,

மனிதர்களைப் படிப்பது

மிகவும் அவசியம்.

***

276

காயத்தை அனுப்பி வைத்த

கடவுள் மருந்தையும்

அனுப்பி வைப்பார்.

***

277

நிறைய பேசி, மனதில் இருக்கும்

எல்லா சந்தேகங்களையும்

இல்லாமற் செய்வதை விட,

அமைதியாக இருந்து கொண்டு

ஒரு முட்டாளைப் போல

நினைத்துக் கொண்டிருப்பது

எவ்வளவோ மேலானது.

***

278

பணத்தின் மீது கொண்ட ஆசையும்,

கற்க வேண்டும் என்பதின் மீது கொண்ட விருப்பமும்

எந்தச் சமயத்திலும் சந்திக்கவே சந்திக்காது.

***

279

சிறிய குழந்தைகளின் உதடுகளிலும்,

இதயத்திலும் அன்னை என்பதுதான்

கடவுளின் பெயர்.

***

280

அன்பு என்பது சிறிய சொல்லாக இருக்கலாம்.

ஆனால், அதில் அனைத்தும் இருக்கின்றன.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மீசை

மீசை

April 2, 2012

தேநீர்

தேநீர்

November 14, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel