Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 29

munnera uthavum 365ponmozhigal

 

281

அமைதி இல்லாத மனதிற்கு

இசை மருந்தாக இருக்கிறது.

***

282

ஒவ்வொரு மனிதனும்

கேட்கும் விஷயத்தில்

மிகவும் வேகமாக இருக்க வேண்டும்.

பேசும் விஷயத்தில்

மிகவும் மெதுவானவனாக

இருக்க வேண்டும்.

***

283

தாவரங்கள் சூறாவளியை

எதிர்த்து தைரியத்துடன் நிற்கும்போது,

ஓக் மரங்கள் கீழே விழலாம்.

***

284

உன்னை விட

புத்திசாலித்தனமான

அறிவுரையை உனக்கு யாரும்

தர முடியாது.

***

285

ஏராளமான சொத்துக்களை

தன்னிடம் வைத்துக் கொண்டு

அதை அனுபவிக்காமல்

இருக்கும் மனிதன்,

பொன்னை ஏற்றிக் கொண்டு

செல்லும் கழுதை,

செடிகளைச் சாப்பிடுவதைப்

போன்றவன்.

***

286

ஒரு மனிதன் இறக்கும் வரையில்,

அவன் முழுமையாக பிறக்கவில்லை

என்றுதான் அர்த்தம்.

***

287

அமைதியான மனம்தான்

நோயைத் தீர்ப்பதற்கான மருந்து.

***

288

இறந்து போன துறவிகளை பாராட்டுவது,

உயிருடன் இருக்கும் துறவிகளை தூற்றுவது -

இதுதான் உலகத்தின் வழக்கமாக இருக்கிறது.

***

289

எல்லா விஷயங்களுடனும்

அனுசரித்துச் செல்வது -

இதுதான் வாழ்க்கையின்

பொன்னான சட்டம்.

***

290

கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,

கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel