
ஒரு சந்தோஷமான
வாழ்க்கை என்பது
மனதின்
அமைதித்தன்மையைப்
பொறுத்தது.
***
எவன் ஒருவன்
பொறுமைசாலியாக
இருக்கிறானோ, அவன்
தான் நினைத்ததை
கட்டாயம் அடைவான்.
***
கிரீடங்களை விட
கனிந்த இதயங்கள்
மேலானவை.
***
நீ உன்னுடைய
நண்பனுக்கு பணம் தந்து
உதவ முடியாமற் போகும்பட்சம்,
ஒரு ஆறுதல்
வார்த்தையைக் கூறி
அவனுக்கு உதவலாம்.
***
உனக்கு
நிழல் தரும்
மரத்திற்கு
மரியாதை கொடு.
***
கற்றுக் கொள்வதற்கு
விருப்பமில்லாமல்
இருப்பதை விட,
அறியாமை
கொண்டவனாக இருப்பது
வெட்கப் படக் கூடிய
செயல் அல்ல.
***
நம்மிடம் இருக்கும்
சந்தோஷத்தைப்
பிறருடன் பங்கிட்டுக்
கொள்ளும்போது,
அந்த சந்தோஷமே
இரண்டு மடங்குகளாக
பெருகுகிறது.
***
நாமும் வாழ்ந்து,
பிறரையும் வாழ
வைப்பதுதான்
பொதுவான சட்டத்தின்
அடிப்படை.
***
அறிவு என்பது
சிறகைப் போன்றது.
அந்த சிறகைக் கொண்டு
நாம் சொர்க்கத்திற்கே
பறந்து செல்லலாம்.
***
ஒருவன் என்றைக்கு
சிரிக்காமலே
இருக்கிறானோ,
அந்த நாள் தொலைந்து
போன நாளே.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook