Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 9

munnera uthavum 365ponmozhigal

81

மேல் நாட்டு தத்துவ ஞானிகள் கூறுவார்கள்:

'நான் எதை கொடுத்தேனோ, அதை வைத்திருந்தேன்.

நான் எதை செலவழித்தேனோ, அதை வைத்திருந்தேன்.

எதை வைத்திருந்தேனோ, அதை இழந்து விட்டேன்.’

***

82

ஒரு சூரியனை நோக்கி சுடுபவன்,

ஒரு மரத்தை நோக்கி சுடுபவனை விட

உயரமாக சுடுவான்.

***

83

எது அழகாக இருக்கிறதோ,

அது நல்லது. அதே போல

எது நல்லதாக இருக்கிறதோ,

அது மிக விரைவில்

அழகானதாக ஆகி விடும்.

***

84

எந்தவொரு மனிதனும்

அவன் தன் மனதில்

நினைத்துக் கொண்டிருக்கும்

அளவிற்கு எந்த சமயத்திலும்

மிகவும் சந்தோஷமான மனிதனாகவோ,

மிகவும் கவலைகள் நிறைந்த

மனிதனாகவோ இருக்க முடியாது.

***

85

ஒரு பரந்த மனம் எப்போதும்

போவதற்கு தயாராக இருக்கும்.

அதற்கு எந்தவொரு

ஆயத்தமும் தேவையில்லை.

***

86

நல்ல நிலையில் இருக்கும்

நாய்க்கு உதவுவதைவிட,

நொண்டியாக இருக்கும் நாய்க்கு

எப்போதும் உதவுங்கள்.

***

87

மரியாதைக்குரிய இடத்தில்

இருக்கும் மனிதர்களுக்கு

ஒரு சொல் என்பது

ஒரு விலங்கைப் போன்றது.

***

88

அன்பு இல்லாத இடத்தில்

உண்மையான புனிதத்தன்மைக்கு

இடமே இல்லை.

***

89

உண்மைக்கு மிகவும் அருகில்

வரக்கூடிய ஒரு நகைச்சுவை,

ஒரு அடையாளத்தை பின்னால்

விட்டு விட்டே செல்கிறது.

***

90

நாம் எல்லோருமே

பாவச் செயல்கள்

செய்திருப்பவர்கள்தாம்.

தீர்ப்பு கூறுவதில்

அவசரப் படாதீர்கள்.

***

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version