Lekha Books

A+ A A-

உப்புமா

Uppuma

டீச்சர் வந்ததுகூட பாஜிக்கு தெரியவில்லை. அவன் அப்போது தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கம் வருவதுகூட அவனுக்குத் தெரியவில்லை. பாஜிஉப்புமாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். உண்மையாகச் சொல்லப்போனால்,அதனால்தான் பசி பற்றிய விஷயத்தைக்கூட அவன் மறந்து போயிருந்தான்.

பாஜியைச் சேர்த்துக் கொண்டார்கள் என்றாலும் இதுவரை அவனுக்கு உப்புமாகிடைக்கவில்லை. இன்று உப்புமா கிடைக்கும் என்று, அவனுடைய தந்தை அவனிடம் கூறியிருந்தான். "காலை வேலை" முடிந்து அவனுடைய தாய் திரும்பி வந்தபிறகுகூட, அவனுடைய தந்தை உடல் முழுக்கப் போர்த்திக் கொண்டு மூலையில்படுத்திருந்தான். அவனுடைய அன்னை அடுப்பில் நெருப்பு பற்ற வைக்கவேயில்லை.அவனுடைய தாய் ஒரு காகம் அல்ல. ஒரு மனிதப் பிறவியாகப் பிறந்து விட்டதால்,இனிமேல் ஒரு காகமாக பிறப்பதற்கும் அவனுடைய அன்னையால் முடியாது. பாஜியும் ஒரு காகத்தின் குஞ்சாக ஆக முடியாது. அவனுடைய அன்னை ஒரு காகமாக இருந்திருந்தால், ஏதாவதொன்றை அலகுகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வருவாள். இரண்டு அச்சு வெல்லத்தையோ சிறிது காப்பிப் பொடியையோ ஒரு சப்பாத்தியின் சிறு பகுதியையோ கொண்டு வருவதற்கு அவனுடைய தாயால் முடியாது. "காலை வேலை" முடிந்தவுடன் அவனுடைய தாய்க்குக் கொடுத்த பழைய எச்சிலை விஷம்தின்பதைப்போல அவள் விழுங்கினாள். அவனுடைய அன்னை அந்த விஷத்தைத் தின்றபிறகும் சாகவில்லை! அவள் திரும்பி வந்தாளே, அதுதான் அவனுக்கு வேண்டும்.இறந்து விட்டால் போதும் என்று அவனுடைய தாய் சொன்னாள். இறந்து விட்டால்...பிறகு, மனிதர்களுக்குப் பசி என்பதே தெரியாது.

அவனுடைய தந்தை எழுந்து வேலைக்குச் சென்றால் அவனுக்கு சாதமும் கூட்டும் மரவள்ளிக்கிழங்கும் காப்பியும் வயிறு நிறைய கிடைக்கும். அவனுடைய தந்தைக்கு ஜுரம் இருப்பதால் வேலைக்குப் போக முடியாது. அவனுடைய தந்தை இருமும்போது நெஞ்சு வலிக்கிறது. நெஞ்சில் உயிரின் வேர்கள் துடிக்கின்றன.நெஞ்சை இறுகப் பிடித்துக் கொண்டு அவனுடைய தந்தை உயிரின் வேர்களைப் பிடுங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு நிற்பதற்கு பாஜியால் முடியாது. அவன் புறப்படத் தயாரானபோது, நேற்றும் இரவு உணவு சாப்பிடாததால்அவனுடைய கண்கள் மங்கலாகி விடும் என்றும், ஏதாவது பேருந்தோ காரோ மோதி அவன் விழுந்து விடுவான் என்றும், அதனால் வீட்டிலேயே படுத்து இறந்தால் போதும் என்றும் அவனுடைய தாய் அவனைத் தடுத்தாள். அப்போது அவனுடைய தந்தை படுத்திருந்த பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அப்போது பாஜிக்கு சந்தோஷம் உண்டானது. அவனுடைய தந்தை இன்று வேலைக்குச் செல்வான். அப்படியென்றால் அவனுக்கு சோறும் கூட்டும் கஞ்சியும் மரவள்ளிக்கிழங்கும் காப்பியும் வெல்லமும் வயிறு நிறைய கிடைக்கும்.

அவனுடைய தந்தை எழுந்து நிற்கவில்லை. அவனுடைய கண்கள் பயங்கரமாக எரிந்துகொண்டிருந்தன. பாஜியின் தாய் எதற்காக பாஜியைப் பட்டினி போட்டுக் கொல்லவேண்டும்? அவனுடைய சிறிய சட்டியையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தந்தைசொன்னான். அன்று பள்ளிக்கூடத்தில் உப்புமா போடுவார்கள். இரண்டாவது வாரத்தில் உப்புமா கொடுக்க ஆரம்பிப்பார்கள். அவனுடைய தாய்க்கு ஒரு விஷயம் தெரியாது. இன்று உப்புமா இருக்கும்! பசியின் விஷயத்தை அத்துடன் பாஜி மறந்துவிட்டான். அவனுடைய தாய் அவனுடைய சிறிய சட்டியைக் கழுவிச் சுத்தம் செய்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel