Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 3

mandhira-poonai

எல்லாம் சேர்ந்து எங்கோ பாய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், பூமி சுற்றுவது மாதிரி எனக்குத் தோன்றுவதில்லை. இருந்தாலும் பூமியின் எல்லாப் பக்கங்களிலும் ஆகாயம்தான் தெரிகிறது. நட்சத்திரங்களும் இருக்கின்றன. எங்கும் தொடாமல் இந்த பூமி வெட்டவெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சிறியதோ, பெரியதோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்- இது ஒரு விந்தையான விஷயம்தான்! நான் நாற்காலியில் உட்கார்ந்தி ருக்கும்போதும் முற்றத்திலும் நிலத்திலும் நடக்கும்போதும், உணர்வி லும் உறக்கத்திலும் எந்தவித தொடர்பும் இல்லாமல் வெட்ட வெளியில் நின்று சுற்றிக்கொண்டிருக்கும் பூமியைப் பற்றி நினைத்துப் பார்ப்பேன். ஆனால், இது எப்படி என்பதற்கு என்னால் கடைசி வரை விடையே கண்டுபிடிக்க முடியாது. நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன். தூரத்தில் சாலையில் கார்களும் பஸ்களும் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஆகாயத்தில் விமானம் சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. நான் இந்த நாற்காலியில் அமர்ந்து வெளிக்கதவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது வருகிறார்களா என்ன?

எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் எங்களுக்கு இஷ்டம்தான். குறிப்பாக மகளுக்கு. விருந்தாளிகள் வந்தால் ஒரு திருவிழாபோல வீடு ஆகிவிடும். இந்த வீட்டிற்கு சந்நியாசி தவிர, ஏழு பிச்சைக்காரர்கள் வருவார்கள். மூன்று இந்துக்களும், ஐந்து முஸ்லிம்களும். சாதாரணமாக இந்தப் பகுதியில் இந்துவாக இருக்கும் பிச்சைக்காரர்கள் முஸ்லிம்களின் வீடுகளுக்குப் பிச்சை கேட்டுப் போவதில்லை. அவர்கள் முஸ்லிம் வீடுகளைப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடுவாôகள்.

“உரோம மதங்களின் பாகம்தானே வீடுகளும்!'' இப்படிக் கூறுவார் சந்நியாசி.

உரோம  மதங்கள்!

முதலில் எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்த பிறகுதான் எனக்கே இது புரிந்தது. இதுவரை இந்த பூமியில் இருக்கும் எல்லா மதங்களுமே உரோமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. கொஞ்சம் உரோமத்தை நீக்கி, கொஞ்சம் ஒரு இடத்தில் மட்டும் வைத்து, கொஞ்சம் இன்னொரு இடத்தில் மட்டும் வைத்து, கொஞ்சம் இன்னொரு இடத்தில் மட்டும் ஒதுக்கி, சிலர் முழுமையாக நீக்கி, சிலர் முழுமையாக உரோமத்தை  அப்படியே விட்டு.. இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது உரோம மதங்களின் கதை! இப்போது உரோமங்களின் பிடியில் இருந்து மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆடை அணிவதிலும் மாற்றம் உண்டாகத் தொடங்கியிருக்கிறது. இப்போது இந்துவையோ கிறிஸ்துவனையோ முஸ்லிமையோ பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. இல்லாவிட்டால் தேவாலயங்களைத் தேடிப் போக வேண்டும். தேவாலயங்களின் அமைப்பில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதைப்போல ஒரு வித்தியாசம் வீடுகளுக்கு இல்லை. இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும் பச்சை நிறத்தில் "பளிச்” என்று பிரகாசித்துக் கொண்டிருக்கும். அதை வைத்து, இந்து மதத்தை வழிபடும் பிச்சைக்காரர்கள் அந்த வீடுகளைத் தேடி வரமாட்டார்கள். பச்சை நிறத்தைப் பார்த்து அவர்களுக்கு பயமா என்ன? அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒருவேளை... ஒன்றுமே கிடைக்காது என்று அவர்கள் நினைப்பது காரணமாக இருக்கலாம்.

இந்த வீட்டிற்கு சந்நியாசியும் இந்துக்களான பிச்சைக்காரர்களும் எப்படி வந்தார்கள்?

நாங்கள் இந்த வீட்டையும், சுற்றியிருக்கும் இடத்தையும் விலைக்கு வாங்கிய காலத்தில் இந்த வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் எல்லாமே பச்சை நிறத்தில்தான் இருந்தன. நான் அவற்றை லேசாகச் சுரண்டிப் பார்த்தபோது, பெயிண்டுக்குக் கீழே நல்ல மாணிக்காத்த வீட்டியாலும், பலா மரத்தாலும் அவை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. பச்சை நிறம்  எனக்கு மிகவும் பிடிக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சி தருகிற மரங்களும், செடிகளும், பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் நெல்வயல்களும்... ஆனால், வீட்டியும் பலாவும்- அவையாகவே இருக்கட்டுமே! இரண்டு வாரங்களில் அதை முழுவதும் சுரண்டி எடுத்து, அதை நன்கு கழுவி விட்டு, காய வைத்து வார்னீஷ் அடித்தோம். வீடு முழுவதையும் கழுவிவிட்டோம். வீட்டிற்கு வெள்ளை அடித்தோம். குடி தண்ணீர் தருகின்ற கிணற்றின் நிலை? இந்தப் பகுதியில் வாழ்கின்ற பெரும் பாலான இந்துக்களின், முஸ்லிம்களின் பழக்க- வழக்கங்களை நான் நன்றாகவே கவனித்து வந்திருக்கிறேன். இரண்டு மதங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குளிப்பது கிணற்றில்தான். நூறு வருடங்களாக நடந்து வரும் ஒரு விஷயம் இது. வீட்டில் எல்லோருக்குமே பொதுவாக இருக்கும் ஒரே ஒரு துண்டு. அது அழுக்கடைந்து போயும், பழையதாகவும் இருக்கும். அதை ஒரு வீட்டைச் சேர்ந்த எல்லாருமே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எண்ணெய், களிம்பு போன்றவற்றைத் தேய்த்துக்கொண்டு சோப், சீயக்காய், அரப்பு போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் போவார்கள். எல்லா வற்றையும் கிணற்றுக்கு அருகில் இருக்கும் கல் திண்டில் வைப்பார்கள். (எல்லா கிணறுகளுக்கும் மறைவிடம் என்று ஒன்று இருக்கும் என்று கருத வேண்டாம்.) நேரம் இருந்தால், துண்டை நனைத்து சோப்பு போட்டு கிணற்றின் பக்கத்தில் இருக்கும் கல்லில் வைத்து துவைத்து, அருகில் உள்ள திண்டில் வைப்பார்கள். துண்டில் இருக்கும் அழுக்கும், சோப்பு நீரும் கிணற்றுக்குள் விழும் என்பதை மறந்துவிட வேண்டாம். பிறகு நீரை கிணற்றுக்குள் இருந்து எடுத்து தலை வழியாக ஊற்று வார்கள். குளிக்கும்போதே பாதி தண்ணீர் கிணற்றுக்குள் கட்டாயம் விழும். மீண்டும் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றுவார்கள். உடலில் உள்ள அழுக்கு கலந்த தண்ணீர் எந்தவிதத் தடையுமின்றி கிணற்றில் விழும்.  சில நேரங்களில் இரண்டு மூன்று பேர் ஒரே நேரத்தில் குளிப்பார்கள். இதற்கிடையில் பெண்கள் குடத்துடன் அங்கு வந்து குடிப்பதற்கும் சோறு சமைப்பதற்கும் அதே கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போவார்கள். தாகம் உண்டாகி ஏதாவதொரு வீட்டில் ஏறி தண்ணீர் கேட்டால் அவர்கள் நமக்குக் கொண்டு வந்து தருவது கிணற்றில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த இந்தத் தண்ணீரைத்தான். குஷ்டம், சயம் என்று மட்டுமல்ல... உலகத்தில் உள்ள எல்லா நோய் களின் கிருமிகளும் அந்தக் கிணற்று நீரில் இருக்கும் என்பது மட்டும் உண்மை. ஆண்களும் பெண்களும் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டும். அதற்காக கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சற்று தூரத்தில் ஒரு குளியலறை கட்டி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துக் குளித்தால், கிணற்று நீர் அசுத்தம் ஆகாமல் இருக்குமே என்று சொன்னால் கிண்டலாகச் சிரிப்பார்கள்.

“தண்ணீர் அசுத்தமா ஏன் ஆகுது? அதுக்காகத்தானே கிணத்துல மீன்களை வளர்க்கறோம்?''

இதற்கு என்ன பதில் சொல்வது?

எங்கள் கிணற்றில் தண்ணீர் வற்றியபோது, ஒரு அங்குல நீளமுள்ள நிறைய மீன்கள் கிடைத்தன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel