Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 6

mandhira-poonai

மனைவிகளிடம் உண்டாகும் மாற்றத்தைக் கவனிக்காத கணவன்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்ன? குடும்பச் சண்டை நடைபெறுவதற்கான சூழ்நிலை வருகிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு நான் சொன்னேன்:

“மகளுக்கு கூட விளையாட ஆள் வேணும்!''

மகளின் தாய் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தாள். உயர்ந்த வேலி கட்டி பாதுகாப்பாக இருக்கும் வீட்டைச் சுற்றியுள்ள நிலத்தில் பசுக்களும், கோழிகளும், நாயும், மரங்களும், பறவைகளும், பாம்புகளும் இருக்கின்றன. அவற்றைத் தவிர வேறு யாருமில்லை. இருந்தாலும், மகளின் தாய் மெதுவான குரலில் ஒரு உலக ரகசியத்தைக் கூறுகிற மாதிரி சொன்னாள்:

“நான் மூணு மாச கர்ப்பம்ன்றது உங்களுக்குத் தெரியாதா?''

நான் உரத்த குரலில், இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தையும் தாண்டிக் கேட்கிற அளவிற்கு வாய்விட்டுச் சிரித்தேன். பிறகு சொன்னேன்:

“அடியே... இந்த விஷயத்தை மகள்கிட்டயும் அரசியல் தலைவர்கள்கிட்டயும் சொல்ல முடியுமா?''

“அப்ப நாம என்ன செய்றது?''

“மகளை தனியா பக்கத்து வீடுகளுக்கு அனுப்ப முடியாது. வழியில பாம்போ பசுவோ குள்ளநரியோ வந்துச்சுன்னா பிரச்சினை ஆயிடும். நீ மகளைக் கொண்டு போய் மத்த குழந்தைங்ககூட விளையாட விடு. பத்திரமா பாத்துக்கணும்...''

மகளின் தாய் மகளை அழைத்துக்கொண்டு வடக்குப் பக்கம் இருந்த வேலிக்கு அருகில் போனாள்.

ஒரு பிரச்சினை தீர்ந்தது.

சௌபாக்யவதிகள் கதீஜா பீபி, சௌமினி தேவி, ராஜலா ஆகியோருடன் கான்ஃபரன்ஸ் நடத்திவிட்டு, மகளின் தாயும் மகளும் சிறிது நேரத்தில் உற்சாகத்துடன் வந்தார்கள்.

மகளின் தாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தது மாதிரி சொன்னாள்:

“மகளுக்கு கூட விளையாட ஒரு பூனைக்குட்டி போதும்!''

நான் கேட்டேன்.

“மகளே! உன்கூட விளையாட ஒரு பூனைக்குட்டி இருந்தா போதுமா?''

மகள் சொன்னாள்:

“வெள்ளை பூனைக்குட்டி வேணும்!''

மகளின் தாய் சொன்னாள்:

“வெள்ளை பூனைக்குட்டிதான்!''

கடவுள் அருளால் பெரிய ஒரு ப்ராப்ளம் ஸால்வ் ஆனால்...

“அடியே... பூனைக்குட்டி எங்கே இருக்கு?''

பந்தாவான குரலில் மகளின் தாய் சொன்னாள்:

“வரும்...''

கொஞ்ச நேரத்தில் நானும் ஒயிட் லெகான் சேவலும் மட்டும் அந்த இடத்தில் இருந்தோம். உலக இலக்கியம் படைக்கலாம் என்று பேனாவைத் தாளில் வைத்திருப்பேன். பிரபஞ்சத்தையே உலுக்குகிற மாதிரி ஒரு குரல் திடீரென்று...

“ம்மூவே...''

சௌபாக்யவதி ராஜலாவின் குரல் அது. மகளின் தாயைப் பிரியத்துடன் அவள் இப்படித்தான் அழைப்பாள்.

சிறிது நேரம் சென்றதும் சௌபாக்யவதி ராஜலா மார்பகங்களுக்கு நடுவில் சிறிய ஒரு பஞ்சுப் பொதி மாதிரி, வெளுத்த ஒரு பூனைக் குட்டியை அழகாகப் பிடித்துக்கொண்டு என்னை நோக்கிச் சிரித்தவாறு, முற்றத்தைத் தாண்டி நடந்து அந்தப் பக்கம் போனாள். அவளைத் தொடர்ந்து சந்நியாசி வருகிறார்.... சங்கநாதம் முழங்க!

2

ந்நியாசி போனவுடன் சௌபாக்யவதிகளான சௌமினி தேவியும் கதீஜா பீபியும் வெளிவாசலைக் கடந்து வந்து என்னைப் பார்த்து புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு பந்தாவாக நடந்து முற்றத்தைக் கடந்து அந்தப் பக்கம் போனார்கள்.

மகளுக்கு விளையாடுவதற்கு ஆள் கிடைத்துவிட்டது. எல்லாம் நல்லபடியே முடிந்துவிட்டது. இனி உலக இலக்கியம் படைக்க வேண்டியதுதான்! ஆனால், ஒரு நினைவு... எத்தனையோ யுகங்களுக்கு முன்பு பாரதமெங்கும் எதிரொலித்த சங்கநாதம்... மலைச்சிகரங்களில் இருந்து... மலையிடுக்குகளில் இருந்து... குகைகளில் இருந்து... அடர்ந்த காடுகளில் இருந்து... கோவில்களில் இருந்து... அந்த சங்கநாதம் இப்போது எங்களின் இந்த சாதாரண வீட்டிலும். இந்த வீடு இருக்கின்ற இடம் முன்பு திப்பு சுல்தானின் பட்டாளம் இருந்த இடமாக இருந்தது! அந்தக் காலத்தில் இது ஒரு மைதானமாக இருந்திருக்க வேண்டும். இங்கு காலாட்படையும் குதிரைப்படையும் இருந்திருக்க வேண்டும். மைசூர் பிரிவு!

எல்லா பிரிவுகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. விக்டோரியா மகாராணி, எட்வர்ட் மன்னன், ஐந்தாம் ஜார்ஜ்... ஆகியோரின் ஓவியங்களுக்கான முன் ஆதாரங்கள் இங்கு இருக்கின்றன. இந்த நிலத்தில்... சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் மகா சாம்ராஜ்யம்... அங்கேயும் சூரியன் அஸ்தமித்துவிட்டது. எங்கேயும் சூரியன் அஸ்தமித்துதானே ஆக வேண்டும்! இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு மறைந்து கிடக்கிறது. மைதானங்களில் மரங்கள் உண்டாகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. மனிதர்கள் குடியேறுகிறார்கள். எதுவுமே இதற்கு முன்பு நடக்காத மாதிரி அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு விஷயங்களும் ஒரு நிழல்போல் என் மனதில் ஒரு சில விநாடிகள் கடந்து போயின. பூனைக்குட்டியைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கவில்லை. இந்தப் பூனை என் வாழ்வில் அப்படியொன்றும் பெரிய ஒரு விஷயமாக இருக்க வில்லை என்பதுதானே உண்மை! நான் எழுதிக்கொண்டிருந்ததை தொடர்ந்து எழுதினேன். பேனாவில் இருந்து எந்தவித தடையும் இல்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. வெள்ளை பேப்பர்... அதில் ஸ்டைலாக உலக இலக்கியத்தை நான் படைத்துக் கொண்டிருந்தபோது...

உள்ளே இருந்து மரியாதையுடன் யாரோ அழைக்கிறார்கள். அழைப்பது- வேறு யார்? மகளின் தாய்தான். ஏதோ காரியம் சாதிக்க என்பது மட்டும் நிச்சயம்.

“கொஞ்சம் இங்கே வர்றீங்களா?''

“என்ன விஷயம்?''

“இந்தப் பூனைக்குட்டிக்கு ஒரு பேர் வைக்கணும்.''

கட்டாயம் தேவைதான். உலக இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் ஒருவனிடம் நாறிப்போன ஏதோ ஒரு பூனைக் குட்டிக்குப் பெயர் வைக்கச் சொல்வது என்றால்...? அவள் அப்படிச் சொன்னதும் எனக்குக் கோபம் வந்தது. பேனாவை மூடி வைத்தேன். நாற்காலியில் போய் அமர்ந்தேன். ஒரு மீசை வைத்தால் என்ன என்று நினைத்தேன். மீசை இல்லாததால் முகத்தில் ஒரு குறை இருப்பது மாதிரி எனக்குப் பட்டது. யாரும் என்னைப் பொருட்டாக எடுத்தது மாதிரியே தெரியவில்லை. முன்பு எனக்கு பகத்சிங் மீசை இருந்தது. இந்தியாவின் விடுதலைக்காகக் குருதி சிந்தி வாழ்க்கையைத் தியாகம் செய்த எத்தனையோ போராளிகளான இளைஞர்களே! இளைஞிகளே! என்னுடைய தோழர்களே! உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். உங்களின் நினைவிற்காக நான் மீசை வைக்கப் போகிறேன்.

நான் உள்ளே பார்த்தவாறு சொன்னேன்.

“பூனைக்குட்டிக்கு நீங்களே பேர் வையுங்க. எந்தப் பேர் வச்சாலும் எனக்கு சம்மதம்தான்.''

“ம்க்கும்... உங்களோட சம்மதத்தை யார் கேட்டாங்க?''

அவமானப்படுத்திவிட்டாள்! முள்ளைப் போன்ற வார்த்தையால் குத்திவிட்டாள்!

எது வேண்டுமானாலும் ஆகட்டும். உள்ளே- பூனைக்குட்டிக்குப் பெயர் வைக்கும் சடங்கு நடந்து கொண்டிருக்கிறது. கவனமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சௌபாக்யவதி ராஜலா கூறுகிறாள்:

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel