Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 19

mandai-odu

மக்களுக்கு இந்தப் போராட்டங்களின் பலனாக ஒரு பாரம்பரியம் உண்டானது. நல்ல சொற்பொழிவுகளை அடையாளம் கண்டு பிடிக்கக்கூடிய திறமை மாநிலத்தில் நல்ல முறையில் உண்டானது. எவ்வளவு வருடங்களாக அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்! அமைச்சர்கள் மத்தியில் ஒரு போட்டி... சொற்பொழிவுகளைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று. அந்தப் பிடிவாதம் ஒரு பெரிய சுவாரசியமான விஷயமாக இருந்தது. பூங்காக்களிலும் கடைகளின் திண்ணைகளிலும் நூல் நிலையங்களிலும் வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த வாதத்தில் எந்த அமைச்சரின் எந்த சொற்பொழிவு முன்பு இருந்ததைவிட சிறப்பாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசினார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஆட்கள் இருந் தார்கள். ஆனால், அந்த வாதங்களும் எதிர்வாதங்களும் எப்போதும் ஒரு சமரசத்தில் போய் முடியும்.

அப்படிப் பேசிப் பேசி மாநில ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சொற்பொழிவைப் பயன்படுத்தியே அமைச்சருக்கு அமைச்சராகத் தொடர முடிந்தது. அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தூர இடங்களான கிராமப் பகுதிகளில் சிறிய விவசாயிகள் இப்போதும் கஷ்டப்பட்டு வயலில் விவசாயத்தைச் செய்கிறார்கள். நெல்லை விளைவிக்கிறார்கள். விளைச்சலை எடுக்கும்போது நிலச்சுவான்தார் தன்னுடைய பெரிய பறையுடன் குத்தகையை அளப்பதற்காக வருவார். அவர் சில கணக்குகளையெல்லாம் கூறுவார். அவற்றையெல்லாம் விவசாயியால் புரிந்து கொள்ள முடியுமா? எல்லாவற்றுக்கும் சம்மதிக்காமல் இருக்க முடியுமா? களத்தில் குவித்து வைத்திருக்கும் நெல் முழுவதையும் நிலச்சுவான்தார் அவருடைய பெரிய பறையை வைத்து அளந்து முடிப்பார். கணக்குப்படி அவருக்குக் கிடைக்க வேண்டிய முழுவதும் கிடைக்கவில்லை. அவர் கேட்டார்:

“மீதி எங்கே?''

ஒரு வருட உழைப்பின் முடிவில் ஒரு மணி நெல்கூட மீதமாக இல்லை. மீதி எங்கே என்ற கேள்விக்கு விவசாயி என்ன பதில் கூறுவான்? இரண்டாண்டுகளுக்கான குத்தகையையும், மூன்றாவது வருடத்திற்கான வட்டியையும் தர வேண்டும். மூன்றாவது வருடம் வெள்ளப் பெருக்கால் விவசாயம் பாழாகி, அறுவடைகூட இல்லாமல் போனது. மேலும் ஒரு வருடத்திற்கான குத்தகையைத் தர வேண்டுமாம்! அவன் கூப்பிய கைகளுடன் தன்னுடைய நிலைமையைச் சொன்னான்.

“போன வருடத்திற்கான குத்தகையைத் தள்ளுபடி செய்யணும். நீங்களே வந்து பார்த்தீர்கள். பொடி செய்து கொறிப்பதற்குக்கூட ஒரு நெல் இல்லை!''

கவலையைக் கூறும்போது, அந்த ஏழையின் முதுகெலும்பு வில்லைப் போல வளைந்து கொண்டிருந்தது. நிலச்சுவான்தார் கடுமையான குரலில் சொன்னார்:

“எந்தவித முறைகேடும் உண்டாகாமல் குத்தகையைத் தர வேண்டியதை அளந்து தந்துவிட வேண்டும் என்று குத்தகைப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது!''

அதுவும் சரிதான். ஆனால், ஒரு வருடம் அவனும் குடும்பமும் சிரமப்பட்டு உழைத்து, ஒருநாள் முழுமையாக உண்ணும் அளவிற்கு கூட மீதமிருக்கவில்லை. விவசாயம் நன்றாகவே இருந்தது. வட்டி இருக்கும்போது மீதி இருக்குமா?

நிலச்சுவான்தாரின் நிறைந்த கோணிகள் களத்திலிருந்து மூட்டை மூட்டையாகப் போகும்போது, குடிசையின் முன்னால் விவசாயியின் மனைவியும் பிள்ளைகளும் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அவனுடன் சேர்ந்து பாடுபட்ட புலையனின் வேலை- மூட்டைகளைத் தூக்கி சுமை தூக்குபவர்களின் தலையில் ஏற்றி, தான் விளைய வைத்த நெல்லை பயணிக்க வைப்பதுதான்.

மீதி எங்கே என்ற கேள்வி அவ்வப்போது நிலச்சுவான்தாரிட மிருந்து வந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் நெல் முழுவதும் போன பிறகு, விவசாயிகளின் சிறிய மகன் தன் தந்தையிடம் கேட்பான்:

“அப்பா! நம்முடைய நெல் முழுவதையும் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களா?''

“ஆமாம்... மகனே! அவர்களுக்குக் கொடுப்பதற்காக இருப்பதுதான்!''

அந்தக் களத்தில் அதற்குப் பிறகு எஞ்சியிருப்பது தரையைப் பெருக்கிய பிறகு வந்த கொஞ்சம் தூசியும் நெல்லும்தான். அதைப் பணியாளும் தம்புரானும் பங்கு பிரித்துக் கொண்டார்கள்.

அந்த ஏழை விவசாயிக்கு எப்படிப்பட்ட சோதனையான நேரத்திலும் கலந்து பேசுவதற்கு ஒரே ஒரு ஆள்தான் இருப்பான். அது அவனிடம் பணியாளாக வேலை பார்ப்பவன். அந்த உறவு இன்றோ நேற்றோ ஆரம்பமானது அல்ல. தலைமுறை தலைமுறையாக அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு பொதுச் செயல் பாட்டில் பங்காளியாக இருப்பவன் அவன். வயலில் விளையும் நெல் தனக்குச் சொந்தமானதும்கூட என்று அவன் நினைக் கிறான். கவலை யில் இருக்கும் விவசாயிக்கு புலையன் ஆறுதல் சொன்னான்:

“என் தம்புரானே! கவலைப்படாதீங்க. நம்முடைய நிலத்தில் கப்பை வைக்கிறப்போ, நம்முடைய கடன் தீர்ந்து விடும். சேனைக் கிழங்கு விற்று அடுத்த விவசாயத்தை ஆரம்பிச்சிடலாம்!''

அவனுடைய பொருளாதார சுமை எந்த அளவிற்குப் பெரியதாக இருக்கிறது என்பது அவனுக்கோ, அவனுடைய புலையனுக்கோ தெரியாது. நிலத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டோ, சேனைக் கிழங்கை வைத்தோ அந்தக் கடனைத் தீர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு அது அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் வட்டியால் அது பெருகிக் கொண்டிருக்கும். இரண்டு குடும்பங்கள் வாழ வேண்டும். அடுத்த விளைச்சலை ஆரம்பிக்க வேண்டும். இந்த விஷயங்கள் விவசாயியின் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சாத்தப் புலையனும் ஆறுதலாக ஏதாவது கூறுவான்.

“அதெல்லாம் சரியாகும் தம்புரான். நீங்க எங்கே இருந்தாவது விதையைத் தயார் பண்ணுங்க. நீங்களும் நானும் சேர்ந்து உங்களுடைய உடம்புக்கு பாதிப்பு உண்டாக்காமல் இருந்தால் போதும்!''

ஆனால் சாத்தனின் ஆழமான நம்பிக்கையால் பரிகாரம் உண்டாகக்கூடிய பிரச்சினைகளாக அவை இருக்கவில்லை. மரவள்ளிக் கிழங்கைப் பிடுங்கி சந்தைக்குக் கொண்டு சென்றபோது, எதிர்பார்த்ததில் பாதி விலைகூட கிடைக்கவில்லை. மரவள்ளிக் கிழங்கின் சந்தை விலை மிகவும் குறைவாக இருந்தது. யாருக்கும் வைக்கோல் தேவைப்படவில்லை. அவர்களுடைய ஒரு காளை மாடு வாத நோய் வந்து தளர்ந்து போய் இறந்துவிட்டது.

அடுத்த விளைச்சலை உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. அந்த விவசாயி உடல் நலம் பாதிக்கப்பட்டுக் படுக்கையில் போய் படுத்துவிட்டான். சாத்தப் புலையன் மட்டுமே இருந்தான். விவசாயி களுக்கு படுப்பதற்கு சொந்தத்தில் இடம் இருந்ததால், நிலச்சுவான்தார் விதை நெல்லை கடனுக்குக் கொடுத்தார். அதன் மூலம் விளைச்சல் உருவானது.

அந்த வருடம் கடுமையான கோடை நிலவியது. விவசாயி உடல் நல பாதிப்பில் இருந்து எழுந்து எலும்பும் தோலுமாக குச்சியை ஊன்றிக் கொண்டு, மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு வயலில் சென்று பார்த்தான். அங்கு எதுவும் இல்லை. காய்ந்து வறண்டு போயிருந்த பூமியில் செம்பு நிறத்தில் சில நெல் செடிகள் இருந்தன. சாத்தன் தன்னால் முடிந்த வரையில் கஷ்டப்பட்டு வேலை செய்தான். ஆனால் பலன் இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel