Lekha Books

A+ A A-

ரதி நிர்வேதம்

radhi-nirvedham

லா மரத்திற்கு அடியில் இரண்டு பாம்புகள் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயங்கரமான...  அதே நேரத்தில் காமத்தை வெளிப்படுத்தும் காட்சி.

ஒன்று இன்னொன்றின் உடலில் சுற்றிப் பிணைந்து... இரண்டும் சேர்ந்து ஒரு கயிறைப்போலப் பிரிந்து... வாலில் இருந்து மேல்நோக்கி எழுந்துகொண்டிருந்தன.

தரையில் உயரமாக நின்றுகொண்டிருக்கும் ஒரு கொம்பு.

ஒன்றோடொன்று சேர்ந்த வயிறுகள்... கடித்து சேர்ந்திருக்கும் வாய்கள்... ஒன்றோ இரண்டோ நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு, பின்னர் பிடியை விட்டுக் கீழே விழுகின்றன. பிரிந்து களைப்படைந்து இரண்டு பக்கங்களிலும் சென்று மீண்டும் நெருங்குகின்றன. திரும்பவும் ஒன்று சேர்கின்றன. மேல்நோக்கி எழுகின்றன. இறுக அணைக்கும் நேரத்தில் கீழே விழுகின்றன. மீண்டும் வெறியுடன் நெருங்குகின்றன.

வேறு எதன்மீதும் கவனம் இல்லை. தாங்கள் மட்டுமே தனியாக இருப்பதைப்போல ஒரு உணர்வு.

எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. பல மணி நேரங்கள் கடந்திருக்கலாம். இப்போது கிட்டத்தட்ட முடிவடையும் நிலை வந்துவிட்டது என்று தோன்றுகிறது.

மேலே பலா மரத்தின் நிர்வாணமான, காய்ந்துபோன கிளைகள் காற்றின் இசைக்குக் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தூரத்தில் இருக்கும் மேட்டில் இருந்து மரத்தின்மீது கயிறு கட்டி கிழங்குக் கொடிகள் படரவிடப்பட்டிருக்கின்றன. இளங்காற்று வீசும்போது அவை அனைத்தும் ஒரு நடன மங்கைகளின் கூட்டத்தைப்போல ஒன்று சேர்ந்து ஆரவாரம் உண்டாக்குகின்றன. ஒன்றாக சத்தம் இல்லாமல் ஆகின்றன.

சுற்றிலும் உயிர்ப்பற்ற மதிய நேரம்.

பாம்புகள் அதற்குப் பிறகும் ஒன்று சேர்வதும் களைப்படைந்து விழுவதும், மீண்டும் ஒன்றோடொன்று பிணைவதுமாக இருக்கின்றன. இப்போது வெறி சற்று குறைந்திருக்கிறது. நான் இருப்பதை அவை தெரிந்துகொண்டு விட்டன என்று நினைக்கிறேன். காரணம் களைத்துப் போன கண்களால் அவ்வப்போது அவை என்னைப் பார்த்தன.

அவற்றில் கருப்பு நிறத்தில் இருப்பது ஆண் பாம்பு என்று நினைக்கிறேன். அது என்னைப் பார்க்கவே இல்லை. என்னைத் தவிர இன்னொரு ஆளும் அந்தப் பகுதியில் இருக்கிற விஷயம் அவனுக்குத் தெரிந்திருப்பதைப் போல இருந்தது. காரணம்- அவ்வப்போது அவனுடைய கண்கள் பாலை மரம் இருக்கும் பக்கமே போய்க் கொண்டிருந்தன. அதையே வெறித்துப் பார்த்தன.

நான் வந்த விஷயமே தெரியாமல், ஒன்றோடொன்று பிணைந்து சந்தோஷத்தில் ஈடுபட்டிருக்கும் பாம்புகளின் உடல்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, அனைத்தையும் மறந்து பாலை மரத்தின் சாம்பல்நிறத் தடிமீது ஒரு காலைத் தூக்கி வைத்தவாறு நின்றிருந்தாள் ரது அக்கா.

இன்னொரு நாகதேவதை.

வெய்யிலின் கடுமை குறைந்தது. பிரிந்து போகும்படி குறிப்பு மூலம் உணர்த்துவதைப்போல, அசோக மரத்தில் இருந்த ஒரு அணில் திரும்பத் திரும்ப சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.

ஒன்றோடொன்று மீண்டும் ஒருமுறை பின்னிப் பிணைந்து காற்றில் சற்று மேலே உயர்ந்து, பாம்புகள் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தன. சிறிது நேரம் சென்றதும் அவை இரண்டும் சோர்வடைந்து இரண்டு வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றன. அவற்றில் கருப்பு நிறத்தை அதிகமாக கொண்டிருந்த பாம்பு நிலத்தின் தெற்கு மூலையில் இருந்த புற்றை நோக்கி ஊர்ந்து சென்றது.

நசுங்கிப் போன பாலைப் பூக்கள் போர் முடிவடைந்த ஒரு போர்க்களத்தைப்போல காட்சியளித்தன.

 “அந்தப் பாம்புகள் என்ன செய்து கொண்டிருந்தன?’’ - எதுவுமே தெரியாதவனைப்போல நான் கேட்டேன்.

“ஆ! நீயா?’’ - ரது அக்கா எனக்கு நேராகத் திரும்பினாள். அப்போதுதான் அவள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்.

“அந்தப் பாம்புகள்?’’

“ஓ! சும்மா...’’ - அவள் புருவத்தைச் சுளித்தாள். வியர்வையில் நனைந்திருந்த சாந்துப் பொட்டின் வெள்ளைக் கோடுகள் தெரிந்தன. “பாம்புகள் ஒன்றோடொன்று உறவு கொள்ளாது என்ற விஷயம் உனக்குத் தெரியாதா? அவற்றில் ஒன்று விஷப் பாம்பு... இன்னொன்று தண்ணீர் பாம்பு.’’

எனக்கு அந்த விஷயம் தெரியும். எனினும், நான் ஒரு முட்டாளாக ஆகிவிட்டேன்.

“விஷப் பாம்பும் தண்ணீர் பாம்பும் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன... அப்படித்தானே?’’

“கொத்திக் கொண்டிருந்தனவா? மடையன்!’’ - அவள் சிரித்தாள். பார்த்து நின்று கொண்டிருப்பதற்கு மிகவும் அரிய, வரிசையான வெள்ளை வெளேரென்ற பற்கள்...

நான் கவனத்தை வேறு பக்கம் திருப்பினேன். என்னுடைய கைகள் எதற்காகவோ துடித்துக் கொண்டிருந்தன.

“கொத்திக் கொண்டிருக்கவில்லையென்றால்...’’ - நான் கேட்டேன்: “பிறகு இரண்டும் சேர்ந்து என்ன செய்தன?’’

“அவற்றுக்கு இடையே... அவற்றுக்கு இடையே...’’ - அவள் வார்த்தைகள் கிடைக்காமல் சிரமப்படுவதைப் போலத் தோன்றியது. சற்று ஆபாசம் கலந்த ஒரு சொல் அந்த வாயிலிருந்து வெளியே வந்து விழுவதைக் கேட்பதற்காக நான் பொறுமையுடன் காத்துக் கொண்டு நின்றிருந்தேன்.

“அவை இரண்டும் ஒன்றோடொன்று என்ன செய்து கொண்டிருந்தன?’’ - நான் கண்களை விரிய வைத்துக் கொண்டு, சிறு குழந்தையைப் போலக் கேட்டேன்: “பதில் சொல்லுங்க ரது அக்கா.’’

“உடலுறவு கொண்டிருந்தன.’’

“அப்படின்னா என்ன ரது அக்கா?’’ என்று நான் கேட்க ஆரம்பித்தேன். அதற்கு முன்னால் அவள் திடீரென்று விஷயத்தை மாற்றினாள்.

“அது இருக்கட்டும்... நீ என்ன செய்து கொண்டிருந்தே? தூங்கிக் கொண்டிருந்தாயா?’’

எனக்கு அந்தப் பாம்புகளைப் பற்றிய உரையாடலைத் தொடர வேண்டும். ஆனால், அவள் அதற்குத் தயாராக இல்லை என்னும்போது நான் என்ன செய்ய முடியும்?

“படித்துக் கொண்டிருந்தேன்?’’ - நான் சொன்னேன்.

“என்ன புத்தகம்?’’

நான் புத்தகங்களின் பெயரைக் கூறினேன்: “இருட்டறையில் சவப்பெட்டி... உடுதுணி இல்லாத உமயம்மா...’’

நான் சொன்னது உண்மை. அதோ ஒரு பல்லி ஓசை உண்டாக்குகிறது. நான் கேட்டேன்: “நல்ல புத்தகம்... ரது அக்கா, நீங்க வாசிக்கணும் என்றால், நான் தர்றேன்.’’

அடுத்த நிமிடம் அவளுடைய முகம் பிரகாசமானது. மூக்கில் விரலை வைத்தாளே தவிர, எதுவும் கூறவில்லை. முட்டாள்தனமாக என்னவோ கூறிவிட்டதைப்போல நானும் ட்ரவுசர் பாக்கெட்டிற்குள் விரலை நுழைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.

அப்படி நின்று கொண்டிருக்கும்போது, அவளைச் சிறிது தொடவேண்டும்போல எனக்கு இருந்தது. பார்க்கும்போதெல்லாம் உண்டாகக்கூடிய ஒரு ஆசை. ஆனால், இன்றும் அது நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. அவள் மிகவும் புத்திசாலித்தனமாக விஷயத்தைவிட்டு விலகிப் போக முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

என்னுடைய ஆசை நிச்சயம் நிறைவேறப் போவதில்லை என்று எனக்குத் தோன்றியது. முன்பு பல தடவை நடந்திருப்பதைப்போல இந்த முறையும் ஏக்கத்துடன் திரும்பிச் சென்று கட்டிலில் குப்புறப்படுத்து என்னை நானே குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel