Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 25

abimanyu

திடீரென்று உண்ணி பயப்பட்டான். பாம்புக்கடி உண்டானவர்களுடைய காயத்தில் தேய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது. அது சிறிதளவில் உள்ளே சென்றால் போதும்- ஆள் மரணத்தை தழுவுவதற்கு. அந்த அளவிற்குக் கடுமையான விஷம் அது. மாமாவின் கையில் இருந்த களிம்பு அதைப்போல இருந்தது.

“ம்... சாப்பிடு.'' -மாமா திரும்பத் திரும்பச் சொன்னார்: “வாயைத் திற.''

மனம் நிறைய சிறகை அடித்துக் கொண்டிருந்த பயத்துடன் மரணத்தை முன்னால் பார்த்துக் கொண்டே உண்ணி வாயைத் திறந்தான். பச்சை நிறத்தில் இருந்த குழைக்கப்பட்ட மருந்தை ஒரு சிறிய நெல்லிக்காய் அளவிற்கு மாமா அவனுடைய நாவில் வைத்தார். “விழுங்கிவிடு.'' -மாமா சொன்னார். உண்ணி அதை விழுங்கினான். பால் பாத்திரத்தை நீட்டியவாறு மாமா சொன்னார்: “இதைக் குடி.'' அனைத்து கடவுள் களையும் ஷீபாவையும் ராகுலனையும் ராகுலனின் தாயையும் மனதில் நினைத்துக் கொண்டே உண்ணி அதைக் குடித்தான்.

அவனுக்குத் தலை சுற்றுவதைப் போலவும் கண்கள் மூடுவதைப் போலவும் உடல் தளர்வதைப் போலவும் தோன்றியது. மாமாவின் உதவியுடன் உண்ணி படுத்தான். அவனுடைய கண்கள் மூடின.

கண் விழித்தபோது அவனுக்கு சுகமாக இருப்பதைப் போல் இருந்தது. உடலில் இருந்த நடுக்கம் இல்லாமற் போயிருந்தது. தலையின் கனம் மறைந்துவிட்டிருந்தது. பிரகாசமான பகலில் அவன் கண் விழித்தான். அவன் சுற்றிலும் பார்த்தான். சாளரத் தின் வழியாக பகலின் வெளிச்சம் அவனுடைய அறைக்குள் விழுந்து கொண்டிருந்தது. மேஜையின்மீது புத்தகங்கள் இருப்பதைப் பார்த்தான்.

திடீரென்று குற்ற உணர்வுடன் உண்ணி எழுந்தான். பொழுது புலர்ந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லக்கூடிய நேரம் தாண்டியிருக்கும். பல் தேய்க்கவில்லை. குளிக்கவில்லை. உணவு சாப்பிடவில்லை. வகுப்பு ஆசிரியர் எழுதிக் கொண்டு வரச் சொன்னதை எழுதவில்லை. எல்லாமே பிரச்சினைகளாக இருந்தன. மாமா கோபப்படுவார்.

மாமாவை எப்படிச் சந்திப்பது என்ற பயத்துடன் அவன் வாசலை நோக்கி வந்தான். வாசலில் யாரும் இல்லை. வாசலில் நிழலைப் பார்த்ததும், மதிய நேரம் ஆகி விட்டிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். முன்பே பெய்திருந்த மழையின் சிறு ஈரத்தின்மீது வாசலில் பிரகாசமான வெயில் விழுந்து கொண்டிருந்தது. உண்ணி மாமாவின் படிக்கும் அறையின் வாசலை நோக்கி நடந்தான்.

படித்துக் கொண்டிருந்த மாமா அவனைப் பார்த்தவுடன் எழுந்து வாசலுக்கு வந்தார். “உண்ணி, நீ எழுந்துவிட்டாயா?'' -அவர் கேட்டார்: “நல்லா உறங்கினாய் அல்லவா?''

“ம்...'' -உண்ணி சொன்னான்.

“அதற்குத்தான் நான் அந்த மருந்தைத் தந்தேன்.'' -மாமா சொன்னார்: “மருந்து சாப்பிடுவதற்கு நீ மிகவும் தயங்கினாய். நேற்றைக்கு முந்தின நாள் இரவில் அய்யப்பன் குதிப்பதைப் பார்த்து நீ முழுவதுமாக பயந்துவிட்டாய். பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது.''

“நேற்றைக்கு முந்தின நாளன்றுதான்.'' -மாமா சொன்னார்: “இரண்டு இரவுகளும் ஒரு பகலும் நீ தூங்கியிருக்கிறாய். நேரம் மதியம் ஆயிடுச்சு.'' -மாமா அவனுடைய நெற்றியையும் கழுத்திற்குக் கீழேயும் தொட்டுப் பார்த்தார். நாடியைப் பிடித்துப் பார்த்தார். காய்ச்சல் முழுமையாக குணமாகி இருந்தது. மாமா தொடர்ந்து சொன்னார்: “பசி எடுக்கிறதா? பெரிய அளவில் பசி இல்லையென்றால் போய் குளித்து விட்டு வா. நாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.'' -மாமா உரத்த குரலில் அழைத்தார்: “அய்யப்பா!''

“எஜமான்...'' -சமையலறையில் இருந்து பதில் வந்தது. தொடர்ந்து கையில் ஒரு கரண்டியுடன் அய்யப்பனும்.

உண்ணி அய்யப்பனைப் பார்த்தான். அய்யப்பனின் இன்னொரு தோற்றம் அவனுடைய மனதிற்குள் வர ஆரம்பித்ததற்கு அறிகுறியாக அவனுடைய முகத்தில் உணர்ச்சி வேறுபாடு உண்டாவதை கவனித்த மாமா சொன்னார்:

“அய்யப்பன் குதிப்பதைப் பார்த்து நீ பயந்து போய்விட்டாய், உண்ணி. அதில் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. பக்தர்களிடம் விருப்பம் கொள்ளும் காளி அவர்களுக்குள் நுழைகிறாள்.''

“சின்ன எஜமான் பயந்து விட்டீர்களா?'' -அய்யப்பன் சொன்னான்: “மன்னித்து விடுங்கள்...'' அவன் உண்ணிக்கு முன்பு கைகளைக் கூப்பிக் கொண்டு நின்றான்.

உண்ணிக்கு சிரிப்பு வந்தது. “நான் போய் குளிச்சிட்டு வர்றேன்.'' -அவன் சொன்னான்.

“போய் வாங்க.'' -அய்யப்பன் சொன்னான்: “சாப்பாடு இப்போ தயாராயிடும்.''

“நேற்று நாங்கள் வேட்டைக்குப் போனபோது ஒரு மான் கிடைத்தது.'' -மாமா சொன்னார்: “அதனுடைய மாமிசத்தைச் சமைத்து சந்தோஷமாக சாப்பிடுவோம். போய் குளிச்சிட்டு வா.''

மதிய வெயிலில் ஆற்றில் மூழ்குவது சுகமான ஒரு அனுபவமாக இருந்தது. குளித்துவிட்டு மேலே வந்தபோது, மலையில் பகல் பொழுது மிகவும் பிரகாசமாக இருந்தது. உண்ணிக்கு சந்தோஷமும் உற்சாகமும் உண்டாயின. காளி உள்ளே புகுந்து துள்ளிக் குதித்த அய்யப்பனைப் பார்த்து பயந்தது குறித்து அவனுக்குத் தன் மீதே வெறுப்பு தோன்றியது. நேர்த்திக்காக வெட்டிய கோழியின் ரத்தத்தைப் பார்த்து தான் இந்த அளவிற்குப் பயந்திருக்கிறோம் என்பதை அவன் தமாஷாக நினைத்துப் பார்த்தான்.

எனினும், அது ஒரு பயங்கரமான இரவுதான். அய்யப்பனிடமிருந்து புறப் படுகிறது என்றாலும், குதித்ததன் விளைவு என்றாலும், அந்த உரத்த அலறல் சத்தத்தை இரவு வேளைகளில் கேட்டால், தான் இனிமேல்கூட பயம் கொள்ளத்தான் செய்வோம் என்று உண்ணிக்குத் தோன்றியது. அந்த அளவிற்கு பயங்கரமான இரவாக அது இருந்தது.

கரடிப் பாறையை அடைந்தபோது வெறும் ஆர்வத்திற்காக அவன் பின் பக்கத்திற்கு நடந்து சென்றான். இந்த நேரத்தில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட சந்திப்புகள் பகல் நேரத்தில் இருக்காது.

அது ரகசியமானது. அதனால்தான் யாராவது வந்துவிடுவார்கள், பார்த்து விடுவார்கள் என்று அவர்கள் பயப்பட்டார்கள். புதிய சந்திப்புகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்ணிக்கு உண்டானது. புதிய பூக்கள் இருக்கின்றனவா, புதிய வளையல் துண்டுகள் இருக்கின்றனவா, புதிய பீடித் துண்டுகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் கண்டு பிடித்தால், அதிலிருந்து புதிய தீர்மானங்களில் போய்ச் சேர முடியும் என்று அவனுக்குத் தெரியும். பழைய பூக்களும் பீடித் துண்டுகளும் மழையும் வெயிலும் பட்டுக் காணாமல் போயிருக்கும். வளையல் துண்டுகள் மட்டும் இப்போதும் இருக்கும்.

ஈரமான துண்டை தோளில் இட்டு, ராகுலனின் வீட்டில் இருந்த ரேடியோக்ராமில் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஒரு திரைப்படப் பாடலின் மெட்டில் சீட்டி அடித்தான். மிகவும் மெதுவாக உண்ணி அந்தப் பக்கம் நடந்து சென்றான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடல்

கடல்

September 24, 2012

மரணம்

மரணம்

May 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel