Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 23

abimanyu

அவனுடைய இரவுகளும் பகல்களும் அன்றைய காட்சியைக் கொண்டு நிறைந்திருந்தன. அது உண்டாக்கிய சலனங்கள் துடைத்து அகற்ற முடியாமல் உண்ணியின் மனதில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன. அதை நினைத்தபோது நடுக்கம் உண்டானாலும், அந்தக் காட்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் எல்லா நாட்களிலும் மாலை நேரங்களில் அவன் கரடிப் பாறையின்மீது போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஏதாவது சத்தங்களுக்காக, மிகவும் தாழ்ந்த குரலில் ஒலிக்கும் உரையாடலுக்காக, சிணுங்கல்களுக்காக அவன் காத்திருந்தான்.

குறிப்பிட்டுக் கூறும்படியான சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அவனுடைய கதையின் நாயகனும் நாயகியும் தோன்றவில்லை.

நாட்கள் கடந்து போனபோது, அந்தக் காட்சி உண்ணியிடம் உண்டாக்கி விட்டிருந்த பயம் இல்லாமற் போனது. ஆனால், அது அவனுடைய மனதிற்குள் அழியாமல் நின்றிருந்தது. அந்தக் காட்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அந்த சம்பவத்தில் தானும் பங்காளியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஒருவகையான தெளிவற்ற, காட்டுத்தனமான வெறி அவனுக்குள் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. பெண்ணின் நிர்வாணத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்க முயற்சித்துக் கொண்டே அவன் தூங்குவதற்காகப் படுத்திருந்தான். இருட்டில் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று அவன் தேடினான். அந்தக் காட்சி கனவில் வரவேண்டும் என்று அவன் விரும்பினான்.

ஆனால், கனவில் பார்த்தது பாம்புகளைத்தான். சீறிக்கொண்டிருக் கும் பாம்புகள். வேகமாக பாய்ந்து கொண்டிருக்கும் பாம்புகள். ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும் பாம்புகள்.

பாம்புகளின் கனவில் இருந்து ஒரு நாள் திடுக்கிட்டு எழுந்த அவன், இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத ஒரு பயங்கரமான சத்தத்தைக் கேட்டு நடுங்கிப் போய்விட்டான். சத்தம் மிகவும் அருகில் கேட்டது. அது எதனுடைய சத்தம் என்று அவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு நன்கு தெரிந்திருந்த ஏதாவது மனிதன் அல்லது மிருகத்தின் அல்லது பறவையின் சத்தமாக அது இருக்கவில்லை. கிழக்குத் திசையில் இருந்த அடர்ந்த காடுகளில் இருந்து ஏதோ ஒரு பயங்கர மிருகம் வெளியேறி வந்திருக்கிறது என்றும்; அது ஆசிரம நிலத்திற்குள் நுழைந்திருக்கிறது என்றும் அவனுக்குத் தோன்றியது. மாமாவும் அய்யப்பனும் இவை எதையும் கேட்பதில்லையா? கேட்டுக் கண் விழித்திருந்தால் அவர்களின் சத்தங்களும் கேட்குமே! ஒருவேளை, வெளியே வந்த பயங்கர மிருகம் அவர்களைக் கொன்று தின்றிருக்குமோ? அப்படியென்றால் அடுத்து இருப்பது அவன்தான்.

உண்ணி நடுங்கினான்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அவன் குழப்பத்தில் இருந்தான். இதுவரை சந்தித்திராத சத்தம் நின்றவுடன், அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்த பயங்கர மிருகம் போய்விட்டதா, ஆசிரம பகுதியில் நின்று கொண்டிருக்கிறதா என்று எப்படித் தெரியும்? அவன் இக்கட்டான நிலையில் இருந்தான். எழுந்து கதவைத் திறந்து சென்று பார்த்தால் என்ன?

ஆனால்-

ஒருவேளை, மிருகம் இந்த அறையின் கதவுக்கு அருகில் வாசலில் நின்றிருந்தால்...? போய் சேர்வது அதன் வாய்க்குள்ளாகத்தான் இருக்கும்.

அப்போது மீண்டும் அந்தக் காட்டு மிருகத்தின் உரத்த சத்தம் கேட்டது. அத்துடன் யாரோ மேலும் கீழும் மூச்சு விடுவதும் முனகு வதும் கேட்டது. பூஜையறை இருக்கும் பகுதியில் இருந்துதான் சத்தங்கள் புறப்பட்டு வந்தன. அந்த மிருகம் மாமாவையும் அய்யப்பனையும் பிடித்துத் தின்னுகிறது. எதுவுமே செய்ய முடியாமல் இங்கு படுத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? உண்ணி சிந்தித்த போது எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவிலும் பயத்தை நுழைத்து வைத்துக் கொண்டு, பயங்கரமான இரவின் இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் எவ்வளவு ஆனது என்று தெரியவில்லை. மீண்டும் சத்தம் நின்றவுடன் உண்ணி எழுந்தான். படுக்கையின்மீது உட்கார்ந்தான். விளக்கை எரிய வைக்க வேண்டுமா என்று ஒரு நிமிடம் சிந்தித்தான். இறுதியில் வேண்டாம் என்று முடிவெடுத்தான்.

இது தன்னுடைய இறுதி இரவு என்று அவனுக்குப் புரிந்தது. யாருமே இல்லாத இந்த மலைப் பகுதியில், இந்தக் காட்டிற்குள், இந்த கறுத்த இரவில், யாருக்கும் தெரியாமல், ஏதோ ஒரு தெரியாத மிருகத் தின் பற்களில் சிக்கி முடியப் போவதுதான் தன்னுடைய தலையெழுத்து என்பதை நினைத்தபோது உண்ணிக்கு கடுமையான கவலை உண்டானது. தன்னைப் பெற்றெடுத்த வயிறை அவன் திட்டினான்.

"எதற்காக அம்மா எனக்கு இந்தப் பிறவியைத் தந்தீர்கள்? மூச்சு மூச்சுவிட முடியாமல் இந்த மலையில் வாழ்வதற்கா? பிறகு ஒரு இரவு வேளையில் யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் கைகளில் சிக்கியோ பற்களில் சிக்கியோ மரணமடைவதற்கா? இதுதான் என்னுடைய பிறவிப் பயனா? அப்படியென்றால் எதற்கு என்னைப் பெற்றெடுத்தீர்கள்? நான் கர்ப்பத்தில் பிறந்தபோது, ஏதாவது பச்சை மருந்தைச் சாப்பிட்டு நீங்கள் என்னை இரத்தமாக்கி கலக்கி ஓடச் செய்திருக் கலாமே! இல்லாவிட்டால் இறந்த குழந்தையாகவே பெற்றெடுத் திருக்கலாமே! அதுவும் நடக்கவில்லையென்றால் உங்களுடைய வயிற்றுக்குள்ளிருந்து வெளியே வந்து, உங்களுடைய மார்பகத்தை இறுகப் பற்றிக் கொண்டு படுத்தவாறு நான் அழுதபோது, நீங்கள் என்னைக் கழுத்தை நெறித்துக் கொண்றிருக்கலாம் அல்லவா?'

எந்த அம்மாவிடம் கேட்பது? அதற்கு அம்மா எங்கே இருக்கிறாள்? ராகுலனின் தாய் சொன்னாள்: “நான் உன்னைப் பெற்றெடுக்கவில்லை. அவ்வளவுதான்.''

பெற்றெடுக்காத பெண்ணின்மீது பெற்றெடுத்தற்கான குற்றத்தை எப்படி சுமத்துவது?

"என்னைப் பெற்றவள் எங்கே?' -உண்ணி இருட்டிடம் கேட்டான். கண்ணுக்குத் தெரியாத கொடூர மிருகத்தின் சத்தத்தைக் கேட்டு பயந்து திகைத்துப்போய் நின்றிருந்த இருட்டு அவனுடைய கேள்வியைக் கேட்டதா என்பதுகூட தெரியலில்லை.

பிறந்தான். எங்கு என்று தெரியவில்லை. எதற்கு என்பதும் தெரிய வில்லை. வளர்ந்தான். இங்கே இந்த காட்டில், கடுமையான கட்டுப் பாடுகளுக்கு அடிபணிந்து, பட்டாள நெறிமுறைகளுடன் வளர்கிறான். மூச்சு விடுவதற்கு சுதந்திரம் இல்லாமல், எப்போதும் யாராலோ கண்காணிக்கப்படுபவனாக, எப்போதும் யாராலோ பின்தொடரப் பட்டு வளர்கிறான். எதற்கு என்று தெரியவில்லை. அப்படி வளர்ந்துவிட்டு இறுதியில் இப்போது... இதோ... அர்த்தமில்லாத ஒருமுடிவைப் பார்த்த பிறகும், பார்க்கவோ கேட்கவோ செய்யாத ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் வாயில் குடியிருக்கும் மரணத்தை நோக்கி ஒரு பயணம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel