
அப்படிச் சொல்லி முடித்தபோது, நான் சந்தோஷமாக இல்லை. பெண்களுக்கென்றே இருக்கும் அந்த ஆழமான அர்த்தம் கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேச எனக்கு உரிமையில்லை. நான் அவரிடம் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நான் தொடர்ந்து சொன்னேன்: "இந்தக் குழந்தைகளை அக்கறை செலுத்தி கவனித்துக் கொள்ளக்கூடிய உரிமையை நான் எந்தச் சமயத்திலும் விட்டுவிட மாட்டேன். என் தவறை இந்தக் காலம் கடந்த வேளையிலாவது திருத்திக் கொள்ளணும்னு நான் விரும்புறேன்."
நாங்கள் அந்த வகையில் தெளிவான எண்ணங்களுடன் பிரிந்தோம்... நாற்பத்தாறு வயது கொண்ட ஒரு கன்னிப் பெண்ணின் திருமணச் செய்தியைக் கேட்டு உலகம் ஆச்சரியப்படலாம். அவளுடைய அடக்கமற்ற தன்மையைக் குறை கூறவும் செய்யலாம். வாழ்வதற்கு மறந்துவிட்ட ஒரு பெண்ணின் உள்மனதில் இருக்கும் வேதனைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சுமை அதற்கு இல்லையே!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook