
சுராவின் முன்னுரை
1961-ஆம் ஆண்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) எழுதிய இந்தக் கதையை ‘ஐந்து சகோதரிகள்’ (Aindhu Sahodharigal) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பதற்காகப் பெருமைப்படுகிறேன். நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் மக்கள்மீது தகழி எந்த அளவிற்கு ஈடுபாடும், பாசமும் கொண்டிருந்தார் என்பதை, இந்நூலை வாசிக்கும்போதும், மொழிபெயர்க்கும் போதும் உணர்ந்திருக்கிறேன்.
காலத்தை வென்று நிற்கக்கூடிய அமர காவியங்களைப் படைத்த தகழி இப்போது நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் படைத்த சாகாவரம் பெற்ற இலக்கியக் கருவூலங்கள் என்றென்றும் வாழும் என்பதென்னவோ நிச்சயம்.
‘ஐந்து சகோதரிகள்’ நிச்சயம் ஒரு கற்பனைக் கதை அல்ல. தான் பார்த்த விஷயங்களைப் புதினமாகத் தகழி ஆக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மையாக இருக்கவேண்டும். இதில் வரும் ஜானகி. திரேஸ்யா, அப்து- இவர்களில் யாரை நம்மால் மறக்க முடியும்? ஜானகியைப் போன்ற மெழுகுவர்த்திகள், தியாக தீபங்கள் இன்றும்கூட நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்கள் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பி வணங்குவோம்.
அருமையான ஒரு இலக்கியப் படைப்பை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம் என்ற உணர்வும், திருப்தியும் இதை மொழி பெயர்த்து முடிக்கும்போது எனக்கு உண்டானது. அத்தகைய உணர்வை இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் அடைவார்கள் என்பது நிச்சயம்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook